
UAE அரசாங்கமானது, தனது நாட்டில் அமைந்துள்ள எல்லா அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளில் நாளாந்த காலை நேர ஒன்றுகூடல்களில் அல்லது பாடசாலை நாள் ஆரம்பிக்கும் முன்னர் தேசிய கொடியினை ஏற்றுவதுடன் தேசிய கீதத்தினை பாட வேண்டும் என்றும் சட்டம் இயற்றியுள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே தேசிய அடையாளத்தினை அதிகரிப்பதற்காக எல்லா கல்வி சம்மேளங்களையும்,அதிகார சபைகளையும், வலயங்களையும் இவற்றினை நேரடியாக அமுல்படுத்த அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு UAE கல்வி அமைச்சர் குமைட் அல் குதமி பணித்துள்ளார்.
தனிப்பட்டவர்களிடையேயும், சமூகத்திடையேயும் நேரான சுமுகநிலைக்கும் ,அடையாளத்தை அதிகரிப்பதற்கும் தேசிய கீதமானது ஒரு முக்கிய திறவுகோலாகும் எனவும் UAE கல்வி அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
***
No comments:
Post a Comment