Saturday, June 29, 2013

அழகே…! அழகின் அழகே…! # 05

அண்மைய நாட்களில் என்னால் படப்பிடிக்கப்பட்ட காட்சிகளினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

இப்புகைப்படங்களின் குறை நிறைகளினை கருத்துரையில் பதிந்துவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே….!



 ≬ யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 





 ≬ யாழ்ப்பாண வைத்தியசாலை வீதி 





***
அன்பின் நண்பர்களே…!

வனவிலங்குகள் தொடர்பான புகைப்படப் போட்டியொன்றில், என்னால் புகைப்படமாக்கப்பட்ட காட்சியினையும் சமர்ப்பித்துள்ளேன்.

நண்பர்களே leopard safaris sri lanka பக்கத்திற்கு சென்று மறக்காமல் உங்கள் வாக்குகளினை வழங்கி ஆதரவு நல்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன். 

இந்த இணைப்பினை சொடுக்கி வாக்களிக்கலாம். 



***

Saturday, June 15, 2013

வானளாவிய கட்டிடங்களின் மையமாக மாறிவரும் டுபாய் நகரம்…!


உலகில் மிக உயரமான முறுக்கு கோபுரமானது(Twisted Tower) டுபாய் நகரத்தில் கடந்த ஜூன் மாதம் 13ம் திகதி திறந்துவைக்கப்பட்டது. 310 மீற்றர் (1017 அடி) உயரமானதும் 75 மாடிகளைக் கொண்டதுமான "கயன்" கோபுரமானது 272 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


2006ம் ஆண்டு ஆரம்பித்த இந்த கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் பாரிய தொழில் நுட்ப பிரச்சினைகள் மற்றும் 2009ம் ஆண்டு கால உலக நிதி நெருக்கடி நிலைமைகள் காரணமாக சிறிது காலம் தாமதமானது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த கோபுரத்தின் பிரதான வடிவமைப்பாளர்கள் சிக்காக்கோவினை மையமாகக் கொண்ட  ஸ்கிட்மோ ஒவிங்ஸ் மற்றும் மெர்ரில் ஆகியோராவர். இவர்களே உலகின் மிக உயரமான கட்டிடமாகிய டுபாய் புர்ஜ் கலிபாவினையும் வடிவமைத்தவர்களாவர்.

டுபாய் நகரில் அமைந்துள்ள 828 மீற்றர் (2717அடி) உயரம், மற்றும் 163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்துவைக்கப்பட்டது.


2012ம் ஆண்டு மே மாதம் திறந்துவைக்கப்பட்ட, 413.4 மீற்றர் (1356அடி) உயரம் கொண்ட உலகில் மிக உயரமான வதிவாளர் குடியிருப்பு கட்டிடமாகிய பிரின்ஸ் கோபுரமானது டுபாய் நகரத்திலேயே அமைந்துள்ளது.


2012ம் ஆண்டு பிற்பகுதியில் திறந்துவைக்கப்பட்ட, 355 மீற்றர் (1165அடி) உயரம் கொண்ட உலகில் மிக உயரமான ஹோட்டலாகிய JW மர்ரொய்ட் மர்கிவ்ஸ் இரட்டைக் கோபுரமும் டுபாய் நகரத்திலேயே அமைந்துள்ளது.



 உங்களுக்குத் தெரியுமா?...
° நிர்மாணப்பணிகள் முடிவடைந்த மற்றும் முடிவடையும் தறுவாயில் உள்ள உலகில் மிக உயரமான முதல் 200 வானளாவிய கட்டிடங்களில் 33 கட்டிடங்கள் டுபாய் நகரத்திலே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக முதல் 100 உயரமான கட்டிடங்களில்  22 கட்டிடங்கள் டுபாய் நகரத்திலே அமைந்துள்ளது.

உலகில் மிக உயரமான கட்டிடங்கள் (Top 10)…!

1) புர்ஜ் கலிபா டுபாய் 163 மாடிகள்  2717 அடி உயரம் 2010 ஆண்டு

2) மக்கா மணிக்கூட்டு ரோயல் கோபுரம் மக்கா 120 மாடிகள் 1972 அடி 2012

3) * புதிய உலக வர்த்தக மையம் நியூ யோர்க் 104 மாடிகள் 1776 அடி 2013

4) தைய்பெய் 101 தைய்பெய் 101 மாடிகள் 1671 அடி 2004

5) ஷங்காய் உலக நிதி மையம் ஷங்காய் 101 மாடிகள் 1614 அடி 2008

6) சர்வதேச வர்த்தக மையம் கொங்கொங் 118 மாடிகள் 1588 அடி 2010

7) பெட்ரோனஸ் கோபுரம் 1, 2  கோலாலம்பூர் 88 மாடிகள் 1483 அடி 1998

8) ஸிஃபெங் கோபுரம் நன்ஜிங் 66 மாடிகள் 1476 அடி 2010

9) வில்லிஸ் கோபுரம் சிக்காக்கோ 108 மாடிகள் 1451 அடி 1974

10) KK 100   ஷென்சென்  100 மாடிகள் 1451 அடி 2011

( Source - Emporis Standards committee (ESC) )


குறிப்பு :  * புதிய உலக வர்த்தக மையம் – நிர்மாணப்பணிகள் இன்னும்   நிறைவுறவில்லை.

***

Sunday, June 9, 2013

ஜூன் 8 ⊷ உலக சமுத்திர தினம்


 
உலகின் உணவுப் பாதுகாப்பு, ஆரோக்கியம், உயிர்களின் வாழ்க்கை, மற்றும் காலநிலையின் பிரதான சக்தியாக சமுத்திரங்களே விளங்குகின்றன.
மாசடைவுகள், அகழ்வுகள், உலக வெப்பமயமாதல் மற்றும் அளவுக்கதிகமான மீன்பிடிச் செயற்பாடுகள் காரணமாக உலக சமுத்திரங்களில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன, இதன் பிரகாரம், உலக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக 2008ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2009ம் ஆண்டிலிருந்து ஜூன் மாதம் 8ம் திகதி உலக சமுத்திர தினமாக கொண்டாடப்படுகின்றது. 

அந்தவகையில், சமுத்திரங்கள் தொடர்பான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…!

  பூமியின் மேற்பரப்பில் 71% வகிபாகத்தினை சமுத்திரங்கள் வகிக்கின்றன. அதாவது பூமியின் மேற்பரப்பில் 362 மில்லியன் சதுரகிலோமீற்றர்களுக்கு சமுத்திரங்கள் பரந்து வியாபித்திருக்கின்றன. இது சூரியமண்டலத்தின் 2 வது மிகச்சிறிய கோளாகிய செவ்வாய் கோளின் மேற்பரப்பினை விட 2 மடங்கும், பூமியின் துணைக்கோளாகிய சந்திரனை விட 9 மடங்கும் அதிகமாகும்.  

♞ புவிக்கோளின் நீர் இருப்பில் 97% இற்கும் அதிகமான பங்கு நீரானது சமுத்திரங்களிலேயே காணப்படுகின்றது. 


புவியில் மிக நீளமான தொடர்ச்சியான மலைத் தொடரானது சமுத்திரத்திலேயே அமைந்துள்ளது. இது 55,000 கிலோமீற்றரினை விடவும் நீளமானதாகும்.  

சமுத்திரத்தின் சராசரி ஆழமானது 3,720 மீற்றர்களாகும். மேற்கு பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள 11,033 மீற்றர்கள் ஆழம் கொண்ட மரியானா ஆழியே சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதியாகும். 


உலக மசகு எண்ணெய்யில் மூன்றிலொரு பங்கானது சமுத்திரங்களிலிருந்தே கிடைக்கின்றது. குறிப்பாக மேற்கு அவுஸ்திரேலியன் நீர்ப்பரப்புகளிலிருந்தே அதிகமான அளவில் மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.

சமுத்திரங்களில் அண்ணளவாக 20 மில்லியன் தொன் தங்கங்கள் காணப்படுகின்றதாம். 

உலகில் மிகப்பெரிய சமுத்திரம் பசுபிக் சமுத்திரம் ஆகும். இது பூமியின் மேற்பரப்பில் 30% வகிபாகத்தினை வகிக்கின்றது. மேலும் அத்திலாண்டிக் 21%, இந்து சமுத்திரம் 14% வகிபாகத்தினை வகிக்கின்றது.

உலகிலுள்ள சமுத்திரங்களில் அதிகமான தீவுகள் பசுபிக் சமுத்திரத்திலேயே அமைந்துள்ளன. இங்கே 25,000 இற்கும் அதிகமான வித்தியாசமான தீவுகள் காணப்படுகின்றன.  

உலகில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது பிரதான உணவு மூலத்திற்கு சமுத்திரங்களிலேயே தங்கியுள்ளனர், 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2 மடங்கால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (7 பில்லியன்) 


உலகில் செயற்படு நிலையிலுள்ள 90% எரிமலைகள் சமுத்திரங்களிலேயே காணப்படுகின்றன. இதில் அதிக எண்ணிக்கையானவை தென் பசுபிக் சமுத்திர பிராந்தியத்திலேயே காணப்படுகின்றன.

(குறிப்பு :-  நேற்றைய முழுநாள் மின்தடையின் காரணமாக இன்றுதான் இந்த ஆக்கத்தினை பதிவிட வாய்ப்புக் கிடைத்தது)

***
Blog Widget by LinkWithin