கடந்த பல வாரங்களாகப் பொழிந்த அடைமழை நேற்று ஓய்ந்ததனால் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்தோடிவருகின்றது. ஆனாலும் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் தமது இருப்பிடங்களுக்கு முழுமையாக திரும்பவில்லை. அத்துடன் கடும் குளிரினால் மக்கள் அவதியுறுகின்றனர்.
ïவரலாறுகாணாதவெள்ளப்பெருக்கினால்பனங்காடு தில்லையாறு பாரியளவில் பெருக்கெடுத்து பிரதான பாதையினை ஊடறுத்துப் பாய்ந்த காட்சி....
படம் 1 ~ ஜனவரி 10, 2011, 12:01 PM
படம் 2 ~ ஜனவரி 11, 2011, 11:39 AM
இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஒத்துழைக்கின்ற ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள், மற்றும் பதிவர் குழாமுக்கு பாராட்டுக்கள்.
உழவுத் தொழிலுக்கு உதவிசெய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக பொங்கலிட்டு வழிபாடு செய்கின்ற திருநாளே தைப்பொங்கல் பண்டிகையாகும்.
ஆனாலும் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தினால் நெற்செய்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பலத்த இழப்பினை சந்தித்துள்ளனர்.
அந்தவகையில், இலங்கையில் இந்த வருட தைப்பொங்கல் பண்டிகை களை கட்டவில்லை.
நெல்தொடர்பிலானசுவையானதகவல்கள்.........
உலகில் நெல்லானது (குடும்பப் பெயர் ~ ஒறைசா சற்றைவா) கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகின்றது.
உலகில், பயிரிடக்கூடிய 14000 இற்கும் மேற்பட்ட நெல்லினங்கள் இருப்பினும், சில குறிப்பிட்ட இனங்களே(100+) தொடர்ந்து நிலைத்திருக்கின்றனவாம்.
பாரம்பரிய முறையில் 1ஹெக்டெயரில் நெல் விதைப்பினை மேற்கொள்வதற்காக ஒரு விவசாயி, 80 கிலோமீற்றருக்கும் அதிகமாக தூரம் மாட்டுடன் நடக்கின்றானாம்.
1கிலோகிராம் நெல்லினை உற்பத்தி செய்வதற்கு 5000 லீற்றர் நீர் தேவைப்படுகின்றதாம்.
உலக அரிசி உற்பத்தியானது 430 மில். மெற்றிக் தொன்களாக இருப்பதோடு இதில் 90% இற்கும் அதிகமான உற்பத்தியும், நுகர்வும் ஆசிய நாடுகளைச் சார்ந்ததாகும். அத்துடன் உலக மக்களின் அரைவாசிப் பங்கினரின் அடிப்படை உணவாகவும் அரிசி விளங்குகின்றது.
உலகில் மில்லியன் கணக்கான ஏழை மக்கள், தமது வருமானத்தில் 50 – 75 சதவீதத்தினை அரிசியின் நுகர்வில் செலவிடுகின்றனர்.
உலகில் அதிக சனத்தொகையினைக் கொண்ட 4 நாடுகளில் 3 நாடுகள் அரிசியினை மையப்படுத்திய சமூகத்தினையே கொண்டிருக்கின்றது. அவையாவன, மக்கள் சீனக் குடியரசு, இந்தியா & இந்தோனேசியா.... இந்த நாடுகளின் ஒட்டுமொத்த சனத்தொகை அண்ணளவாக 2.5 பில்லியன் ஆகும்.
சராசரியாக ஆசிய நாட்டவரொருவர், வருடாந்தம் 150கிலோகிராம் அரிசியினை நுகர்கின்ற அதேவேளை சராசரியாக ஐரோப்பிய நாட்டவரொருவர், வருடாந்தம் 5கிலோகிராம் அரிசியினையே நுகர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசியாவின் சனத்தொகையில்(3.5பில்லியன்) வருடாந்தம் 50 மில்லியன் அதிகரிப்பு ஏற்படுகின்றது. இதன் காரணமாக அரிசிக்கான தேவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
ஆசியாவின் நெல் விளைநிலங்களில் ¾ பங்கான நிலங்களில் மேம்படுத்தப்பட்ட நெல்லினங்களே பயிரிடப்படுகின்றது. இதன் காரணத்தினால் ஆசியாவில் அதிகளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஆசிய நாடுகளில் 250 மில்லியன் விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடுகின்றனர். இவர்களில் அதிகமானோர் 1 ஹெக்டெயருக்கும் குறைவாகவே கொண்டுள்ளனராம்.
உலகில் அரிசி உற்பத்தியில் ஈடுபடும் 80 நாடுகளுள் தாய்லாந்து, பாகிஸ்தான், வியட்நாம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகளில் மட்டுமே ஏற்றுமதிக்கான மிகையுற்பத்தி காணப்படுகின்றது.
உலகில் வெளி நாட்டு வர்த்தகத்திற்காக 5% இற்கும் குறைவான அரிசி உற்பத்தியே கிடைக்கக்கூடியதாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான நம்பிக்கை நிலையற்றதாகவே காணப்படுகின்றது.
தற்போது ஆபிரிக்க நாடுகளிலும் அரிசியின் நுகர்வில் முன்னேற்றம் காணப்படுவதால் அதிகரிக்கும் கேள்வியினை ஈடுசெய்யும் வகையில் அந்நாடுகள் தமது கண்டத்தினுள்ளேயே அரிசியினை உற்பத்தி செய்து கொள்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளன.
உலகில் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற அரிசியானது ஒருவருக்கு தலா 65 கிலோகிராம் ஆகும்.
பெருமளவான ஆசிய மொழிகளில் உணவு, அரிசி ஆசிய சொற்கள் ஒரேமாதிரியான அர்த்தம் கொண்டவையாகும். ( உ+ம் :- சீன மொழியில் அரிசி, உணவு ஆகிய இரண்டும் குறிப்பது ஒரே சொல்லாகும்)
திருமண நிகழ்வுகளின்போது புதுமணத் தம்பதியினரை அரிசியினால் ஆசிர்வதிப்பது குழந்தைப் பாக்கியம், அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றுக்கான அடையாளமாகும்.
அண்மைய ஆய்வுகளின் பிரகாரம், உலக வெப்பமயமாதலின் காரணத்தினால் அரிசி உற்பத்தியானது வீழ்ச்சியடைந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ளது. இது 1959ம் ஆண்டு, டிசம்பர் 9ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.
படுக்கைக்குப் போகும் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துகின்றீர்களா? ஆம் எனில், இது உங்களது சுகாதாரத்தைப் பாதிப்பதாக ஒரு பிரதான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
கையடக்கத் தொலைபேசியிலிருந்து வெளிவருகின்ற கதிரியக்கங்களின் காரணமாக நித்திரையின்மை, தலையிடிகள் ஏற்படும் அதேவேளை ஆழ்ந்த நித்திரையில் நேரத்தினைச் செலவிடுவதனை குறைவடையச் செய்கின்றது.
போதுமான நித்திரையினைப் பெறத் தவறுவதன் காரணமாக மனவழுத்தங்கள் ஏற்படுகின்றது,கவனங்கள் குறைவடைகின்றது மற்றும் ஆளுமை/நடத்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
போதுமான நித்திரையின்மை காரணமாக இளவயது வயதினர் oஒழுங்கீனங்களில் தமது கவனத்தினைச் செலுத்துவதுடன், கல்விசார் செயற்பாடுகளில் முன்னேற்றங்களை அடையத் தவறுகின்றனர்.
இந்த ஆராய்ச்சியானது கையடக்கத் தொலைபேசி உற்பத்தியாளர்களால் விஞ்ஞானிகளுக்கு நிதிவசதிகளினை அளித்து மேற்கொள்ளப்பட்டது.மேலும் சாதனங்களிலிருந்து வெளியாகின்ற கதிரியக்க மாசுகள் தொடர்பாக சுகாதார பயமுறுத்தல்களையும் கவனத்தில் கொண்டனர்.
படுக்கைக்குப் போகும் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த நித்திரை கட்டத்தினை அடைவதற்கு நீண்ட நேரம் எடுத்ததுடன் அவற்றில் குறைவான நேரத்தினையே செலவிட்டனர் என்பதும் ஆய்வின் முடிவாக இருந்தது.
உடம்பிலுள்ள கலங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கும் அன்றைய நாளில் பாதிக்கப்பட்டு சேதமடைந்தவை சீரடைவதற்கும் ஆழ்ந்த நித்திரை பொழுதானது அவசியமானதாகும்.
எடின்பேர்க் நித்திரை மையத்தினுடைய இயக்குனர் மருத்துவர் Chris Idzikowski கருத்து தெரிவிக்கையில் : “படுக்கைக்குப் போகும் நேரத்துக்கு முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த நித்திரையின்றி எதிர்மறையாகப் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்பதற்கு தற்சமயம் போதுமான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளது.” என்கின்றார்.
இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் 18 தொடக்கம் 45 வயதிற்குட்பட்ட 36 பெண்களையும், 35 ஆண்களையும் ஆய்வுக்குட்படுத்தினர்.
சிலர் கையடக்கத் தொலைபேசியினைப் பாவித்த போது கதிரியக்க அதிர்வுகளினைப் பெறுகின்றனர். ஏனையவர்கள் ஒன்றினையும் பெறவில்லை.
இதன் பிரகாரம், இதன் முதல் குழுவினர் ஆழ்ந்த நித்திரையின் முதல் கட்டத்துக்கு செல்வதற்கு அதிக நேரம் எடுத்ததுடன் மேலும் ஆழ்ந்த நித்திரையினை குறைந்த நேரமே மேற்கொண்டனர்.
இந்தப் பெற்பேறுகளானது பெரும்பாலான பெற்றோருக்கு அதிர்ச்சி அளிக்கலாம், ஏனெனில் நித்திரைக்கு முன்னர் அவர்களுடைய குழந்தைகள் தமது நண்பர்களுடன் கையடக்கத் தொலைபேசியில் வழமையாக அளவளாவுவதனலாகும்.
இந்த ஆய்வானது கரோலின்ஸ்கா நிறுவகம் மற்றும் சுவீடனின் அப்சலா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் வய்ன் அரச பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டதாகும்.
ஆனாலும் இந்த முடிவுகள் ஒரு முடிந்தமுடிவல்ல என்கின்றார்கள். கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துவதால் நித்திரைக் குழப்பங்கள் ஏற்படுகின்றது என்கின்ற முடிவுக்கு தாம் வரவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஆனால் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் Bengt Arnetz கருத்து தெரிவிக்கையில், கையடக்கத் தொலைபேசியிலிருந்து வெளிவருகின்ற கதிரியக்கங்களின் காரணமாக மூளையில் ஏற்படுகின்ற பாதிப்புகளினை அளவிடக் கூடியதாகவுள்ளது. கதிரியக்கங்களின் காரணமாக மூளையின் அழுத்த செயற்பாடானது பாதிப்படைந்து, ஆழ்ந்த நித்திரையில் மாறுதல்களினை ஏற்படுத்துகின்றதாம்.
***
#########################
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
உழவர் திருநாளாம் தைத் திருநாளில்
தமிழர் மனங்களில் அமைதியும்,சந்தோசமும் பெருகி
தமிழர் வாழ்வில் நிம்மதியும், செளபாக்கியமும் கரைபுரண்டோடி