Showing posts with label கையடக்கத் தொலைபேசி. Show all posts
Showing posts with label கையடக்கத் தொலைபேசி. Show all posts

Wednesday, January 13, 2010

கையடக்கத் தொலைபேசியும், நித்திரையும்



படுக்கைக்குப் போகும் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துகின்றீர்களா? ஆம் எனில், இது உங்களது சுகாதாரத்தைப் பாதிப்பதாக ஒரு பிரதான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

கையடக்கத் தொலைபேசியிலிருந்து வெளிவருகின்ற கதிரியக்கங்களின் காரணமாக நித்திரையின்மை, தலையிடிகள் ஏற்படும் அதேவேளை ஆழ்ந்த நித்திரையில் நேரத்தினைச் செலவிடுவதனை குறைவடையச் செய்கின்றது.

போதுமான நித்திரையினைப் பெறத் தவறுவதன் காரணமாக மனவழுத்தங்கள் ஏற்படுகின்றது,கவனங்கள் குறைவடைகின்றது மற்றும் ஆளுமை/நடத்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன.

போதுமான நித்திரையின்மை காரணமாக இளவயது வயதினர் oஒழுங்கீனங்களில் தமது கவனத்தினைச் செலுத்துவதுடன், கல்விசார் செயற்பாடுகளில் முன்னேற்றங்களை அடையத் தவறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சியானது கையடக்கத் தொலைபேசி உற்பத்தியாளர்களால் விஞ்ஞானிகளுக்கு நிதிவசதிகளினை அளித்து மேற்கொள்ளப்பட்டது.மேலும் சாதனங்களிலிருந்து வெளியாகின்ற கதிரியக்க மாசுகள் தொடர்பாக சுகாதார பயமுறுத்தல்களையும் கவனத்தில் கொண்டனர்.
படுக்கைக்குப் போகும் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த நித்திரை கட்டத்தினை அடைவதற்கு நீண்ட நேரம் எடுத்ததுடன் அவற்றில் குறைவான நேரத்தினையே செலவிட்டனர் என்பதும் ஆய்வின் முடிவாக இருந்தது.
உடம்பிலுள்ள கலங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கும் அன்றைய நாளில் பாதிக்கப்பட்டு சேதமடைந்தவை சீரடைவதற்கும் ஆழ்ந்த நித்திரை பொழுதானது அவசியமானதாகும்.



எடின்பேர்க் நித்திரை மையத்தினுடைய இயக்குனர் மருத்துவர் Chris Idzikowski கருத்து தெரிவிக்கையில் : “படுக்கைக்குப் போகும் நேரத்துக்கு முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த நித்திரையின்றி எதிர்மறையாகப் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்பதற்கு தற்சமயம் போதுமான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளது.” என்கின்றார்.

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் 18 தொடக்கம் 45 வயதிற்குட்பட்ட 36 பெண்களையும், 35 ஆண்களையும் ஆய்வுக்குட்படுத்தினர்.
சிலர் கையடக்கத் தொலைபேசியினைப் பாவித்த போது கதிரியக்க அதிர்வுகளினைப் பெறுகின்றனர். ஏனையவர்கள் ஒன்றினையும் பெறவில்லை.

இதன் பிரகாரம், இதன் முதல் குழுவினர் ஆழ்ந்த நித்திரையின் முதல் கட்டத்துக்கு செல்வதற்கு அதிக நேரம் எடுத்ததுடன் மேலும் ஆழ்ந்த நித்திரையினை குறைந்த நேரமே மேற்கொண்டனர்.

இந்தப் பெற்பேறுகளானது பெரும்பாலான பெற்றோருக்கு அதிர்ச்சி அளிக்கலாம், ஏனெனில் நித்திரைக்கு முன்னர் அவர்களுடைய குழந்தைகள் தமது நண்பர்களுடன் கையடக்கத் தொலைபேசியில் வழமையாக அளவளாவுவதனலாகும்.

இந்த ஆய்வானது கரோலின்ஸ்கா நிறுவகம் மற்றும் சுவீடனின் அப்சலா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் வய்ன் அரச பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டதாகும்.

ஆனாலும் இந்த முடிவுகள் ஒரு முடிந்தமுடிவல்ல என்கின்றார்கள். கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துவதால் நித்திரைக் குழப்பங்கள் ஏற்படுகின்றது என்கின்ற முடிவுக்கு தாம் வரவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆனால் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் Bengt Arnetz கருத்து தெரிவிக்கையில், கையடக்கத் தொலைபேசியிலிருந்து வெளிவருகின்ற கதிரியக்கங்களின் காரணமாக மூளையில் ஏற்படுகின்ற பாதிப்புகளினை அளவிடக் கூடியதாகவுள்ளது. கதிரியக்கங்களின் காரணமாக மூளையின் அழுத்த செயற்பாடானது பாதிப்படைந்து, ஆழ்ந்த நித்திரையில் மாறுதல்களினை ஏற்படுத்துகின்றதாம்.

***

#########################

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

உழவர் திருநாளாம் தைத் திருநாளில்

தமிழர் மனங்களில் அமைதியும்,சந்தோசமும் பெருகி

தமிழர் வாழ்வில் நிம்மதியும், செளபாக்கியமும் கரைபுரண்டோடி

நித்தமும் மகிழ்ச்சியில் திளைக்கவும்................

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற மரபுக்கிணங்க

வாழ்வில் சகலமும் பெற்று வளமுடன் வாழ்கவென

இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.........

கே.கே.லோகநாதன்

#######################


Thursday, January 7, 2010

தீராத நோயாளிகளுக்கு SMS சிகிச்சை



இந்த தொடர்பாடல் தொழில்நுட்பமானது தீராத நோய்களின் கொடுமைகளினால் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுவதனை குறிப்பிடலாம். நோயாளர்களின் கையடக்கத் தொலைபேசிக்கு அவர்களுக்கு அடுத்து நிர்ணயிக்கப்பட்ட மருத்துவருடனான சந்திப்பு அல்லது சோதனை அல்லது அவர்கள் எடுக்க வேண்டிய மருந்துகள் தொடர்பாக நினைவுபடுத்த ஒரு SMS தகவலினை அனுப்புவதானது சிறந்ததொரு நடவடிக்கை என்கின்றார் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் சிறுவர் மையத்தின் Delphine Robotham.


Robotham மேலும் தெரிவிக்கையில் ஆய்வுகளின் பிரகாரம் அரைப்பங்கான நோயாளர்கள் அவர்கள் நாளந்தம் எடுக்க வேண்டிய ஒழுங்குமுறையான மருந்துகளினை எடுக்கத் தவறுகின்றனர் என்கின்றார். மருந்தினை உள்ளெடுக்க சில பங்கினர் மறப்பதற்கான பிரதான காரணமாக கவனமின்மை ஆகும். ஆகவே அவர்களுக்கு நினைவுறுத்த ஒரு தகவலானது தேவைப்படுகின்றது.


இன்று பல்வேறு வகையான ஆய்வுகளில் SMS பயன்பாட்டினை பயன்படுத்துவதனை Robotham அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

உதாரணமாக , நீரிழிவு நோயின் பாதிப்பினைக் கொண்ட குழந்தைகளுக்கு அவர்களின் குருதியில் வெல்லத்தின் அளவினைக் சோதிக்கும் சோதனையானது மேம்பட்டுக் காணப்படுகின்றதாம். இந்தக் குழந்தைகள் அவர்களின் குருதியில் வெல்லத்தின் அளவினைக் சோதிக்கும் சோதனை முடிவுகள் தொடர்பில் அவர்களின் மருத்துவர்களின் நிலையத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர்.


பிறிதொரு ஆய்வில், ஈரல் மாற்றீடு செய்யப்பட்டவர்கள் அதன் பின்னரான மருத்துவ முறைகளில் கவனம் செலுத்துவதானது மேம்பட்டுள்ளது.


தீராத நோயின் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளவர்கள் நாளாந்தம் மருத்துவமானது தேவைப்படுகின்றது. அதாவது எச்.ஐ.வி, அஸ்த்மா, காச நோய், அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் தொடர்பிலான நாளாந்த சோதனைகள் செய்வர்களுக்கு SMS சிகிச்சையானது சிறந்ததாகும் என்கின்றார் Robotham.



இன்று கையடக்கத் தொலைபேசிகளின் பாவனையானது பெருமளவில் காணப்படுகின்றது. அவற்றினை இது போன்ற பயனுள்ள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதானது ஒரு சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும் எனலாம்...........

***

Monday, November 9, 2009

கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களே.........


கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களே.........நீங்கள் கையடக்கத் தொலைபேசியினை உங்களது இடுப்புப் பட்டியில்(belt) அணிகின்றீர்களா? ......ஆம் எனில், இது உங்களுக்கான செய்தி....

துருக்கி, இஸ்பாட்டா சுலைமான் டெமிரெல் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த மருத்துவர் Tolga Atay மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட நீண்ட கால ஆய்வின் பிரகாரம், கையடக்கத் தொலைபேசிகளிருந்து வெளிவரும் மின்சார காந்த அலைகளினால் என்புகள் பலவீனமாவதாக கண்டறிந்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள், கையடக்கத் தொலைபேசியினை இடுப்புப் பட்டியில் அணிகின்ற 150 பாவனையாளர்களின் இடுப்பிலுள்ள எலும்புக் கூட்டின் குழிவிடங்களின்(iliac wings) மேலுள்ள விளிம்புகளின் என்பு நெருக்கத்தினை அளவிட்டனர்.

ஆராய்ச்சியாளர்கள் இந்த அளவீட்டுக்காக இரட்டை x-ray absorptiometry தொழில்னுட்பத்தினைப் பயன்படுத்தினர். அதேசமயம் ஒஸ்டியோபோரோஸிஸ் மற்றும் என்பு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் என்பு நெருக்கத்தை அறிய இந்த பரிசோதனையே மேற்கொள்ளப்படுகின்றது.


என்பு நெருக்கமானது, எந்தப் பக்கத்தில் கையடக்கத் தொலைபேசியினை அணிகின்றார்கள்(வலது பக்கம்122 பேரும்,இடது பக்கம்28 பேரும் அணிந்தவர்களிடையே) என்பதற்கு mமறுதலையாக எதிர்ப்பக்கமானது ஒப்பிடப்பட்டது.

ஒருவர் ஒரு நாளில் சராசரியாக 15 மணித்தியாலங்கள் தனது கையடக்கத் தொலைபேசியினை இடுப்புப் பட்டியில் அணிகின்றார், அத்துடன் சராசரியாக 6 வருடங்கள் கையடக்கத் தொலைபேசியினை உபயோகிக்கின்றார்.

ஆய்வின் பிரகாரம்,எந்தப் பக்கத்தில் தனது கையடக்கத் தொலைபேசியினை அணிகின்றாரோ அந்தப்பக்க இடுப்புக்கூடு என்பு நெருக்கங்களில் (iliac wing bone) ஒரு சிறிதளவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வித்தியாசமானது புள்ளிவிவர அடிப்படையில் முக்கியமற்றதாகும், இந்த அணுகுமுறையில் ஒஸ்டியோபோரோஸிஸ்சில் வீழ்ச்சிகளைக் காணமுடியவில்லை.

ஆய்வின் பிரகாரம், கையடக்கத் தொலைபேசிகளிருந்து வெளிவரும் மின்சார காந்த அலைகளினால் என்பு நெருக்கங்கள் மோசமாகப் பாதிப்படைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

என்புகளில் இடுப்புக்கூடு என்பு களானது (iliac wing) என்புப் பொருத்துகளில் பெருமளவில் பயன்படுத்தும் மூலமாகும். ஆகவே என்பு நெருக்கங்களில் ஏதாவது குறைவு ஏற்படும் போது மீளாக்கபூர்வ சத்திரசிகிச்சைகள் விசேடமாக முக்கியமாகும்.

எவ்வாறாயினும்,ஆராய்ச்சியாளர்கள் தமது கண்டறிதல்கள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளதாக வலியுறுத்துயுள்ளார்கள்.

அதேவேளை, Atay அவரது குழுவினர்: “எமது நாளாந்த வாழ்க்கையில் கையடக்கத் தொலைபேசியினை சாத்தியமானளவு எமது உடம்புகளிலிருந்து தூரவிலகி வைப்பது சிறந்ததாகும்என்கின்றனர்.

இந்த ஆய்வானது The Journal of Craniofacial Surgery-செப்டெம்பர் இதழில் வெளியாகியுள்ளது.


+++
Blog Widget by LinkWithin