Wednesday, October 21, 2009

20வயதிற்கு கீழ்பட்ட உலகக்கிண்ண உதைபந்தாட்ட சாம்பியனாகியது கானா


கடந்த 16ம் திகதி எகிப்தில் நடைபெற்ற 20வயதிற்கு கீழ்பட்ட ஆண்களுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரேசில் அணியினை வீழ்த்தி கானா அணி சாம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டது. இதன் மூலம் 20வயதிற்கு கீழ்பட்ட ஆண்களுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை பெற்ற முதல் ஆபிரிக்க நாடு என்ற பெருமையினையும் கானா நாடு பெற்றுக்கொண்டது.

கெய்ரோ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற கோல் நிலையில் இருந்தமையால் தண்டனை உதை மூலம் போட்டியின் முடிவானது தீர்மானிக்கப்பட்டது. இதில் கானா அணியானது 4-3 என்ற கோல் கணக்கில் கானா அணியானது பிரேசில் அணியினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டது.

இந்த இறுதிப் போட்டியில் கானா அணியின் சார்பில் இறுதில் 10 பேரே விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 1993ம் ஆண்டு பிரேசில் நாட்டுடனும், 2001ம் ஆண்டு ஆர்ஜென்ரினா நாட்டுடனும் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கானா அணி தோல்வியினை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

***

No comments:

Blog Widget by LinkWithin