Wednesday, October 27, 2010

வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரதேவி சிலை....




நாளை (28.10.2010) அமெரிக்க சுதந்திரதேவி சிலைக்கு 124வது பிறந்தநாளாகும். அதனை முன்னிட்டு பிரசுமாகும் கட்டுரை....

அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தில் வானளாவ உயர்ந்து நின்று 124ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் விடுதலையினை வெளிப்படுத்தி புகழ் பரப்பி நிற்பதுதான் சுதந்திரதேவி சிலை(Liberty Enlightening the World)
.
அமெரிக்கப் புரட்சியின்போது ஐக்கிய அமெரிக்காவுக்கும், பிரான்ஸ் நாட்டுக்குமிடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும்முகமாக பிரான்ஸ் தேசத்தினால் ஐ.அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதுதான் இந்த சுதந்திரதேவி சிலை ஆகும்.

சுதந்திரதேவி சிலையானது, சர்வதேச ரீதியில் நட்புறவினையும், விடுதலையினையும், ஜனநாயகத்தினையும் வெளிப்படுத்துகின்ற சின்னமாக விளங்குகின்றது.

ஐக்கிய அமெரிக்காவுக்கு விடுதலை கிடைத்து நூறாண்டுகள் நிறைவுபெற்றதை சிறப்பிக்கும்முகமாக அமெரிக்காவும், பிரான்ஸ் தேசமும் ஒன்றிணைந்து சிலையொன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. இதன்பிரகாரம், பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதுடன், சிலையினை பிரான்ஸ் தேசத்து மக்கள் நிர்மாணிப்பது எனவும் முடிவுசெய்தனர்.

சிலையினை நிர்மாணிக்க ஒத்துக்கொண்ட இரண்டு தரப்பினரையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. இதனால் பிரான்ஸ் தேசம் நிதியினை திரட்ட களியாட்டங்கள், அதிர்ஷ்டலாப சீட்டிழுப்புக்கள் போன்ற முறைகளின் மூலம் நிதியினை திரட்டியதுடன், அமெரிக்க தேசம் நிதியினை திரட்ட கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், இன்னபிற நிகழ்வுகள் மூலம் நிதியினை திரட்டி நிதிப்ப்பற்றாக்குறையினை ஈடுசெய்தன.


பேடெரிக் ஓகஸ்ட்ரி பார்தொல்டி

சுதந்திரதேவி சிலையினை வடிவமைத்தவர் பிரான்ஸ் தேசத்தினைச் சேர்ந்த பேடெரிக் ஓகஸ்ட்ரி பார்தொல்டி[Frederic Auguste Bartholdi] ஆவார். பார்தொல்டி, சுதந்திரதேவி சிலையினை வடிவமைக்க பிரபல பொறியியலாளர் அலெக்சாண்டிரி குஸ்டாப் ஈபிள்[Alexandre Gustave Eiffel~ ஈபிள் கோபுரத்தினை வடிவமைத்தவர்] அவர்களின் ஆலோசனையினையும், உதவியினையும் உள்வாங்கிக் கொண்டார். பிரான்ஸ் தேசத்தில் சுதந்திரதேவி சிலை நிர்மாணிப்பு 1884ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது.

ஆனால், அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலையின் பீடத்துக்கான வேலைகள் மிகமெதுவாக நடைபெற்றுக்கொண்டு வந்தன. இதன் காரணத்தினால் ஜோசப் புலிட்ஸர்(புலிட்ஸர் பரிசு இவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றது.) தன்னுடைய " உலகம்" ["The World" ] என்கின்ற பத்திரிகையின் ஊடாக அமெரிக்க மக்களிடம் இதற்கான நன்கொடை நிதி திரட்டும் செயற்பாட்டினை ஊக்குவிப்பதில் பெரிதும் பாடுபட்டார். இதன்மூலம், சுதந்திரதேவி சிலையின் பீட நிர்மாணிப்புச் செயற்பாடுகள் 1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே நிறைவடைந்தன.


பிரான்ஸ் தேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 151அடி & 1 அங்குலம் உயரமானதும், 225 தொன் நிறையுடையதுமான சுதந்திரதேவி சிலை பிரான்ஸ் போர்க்கப்பலில் 1885ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க நியூயோர்க் துறைமுகத்தினை வந்தடைந்தது. 4 மாதகாலத்துக்குள் புதிய பீடத்தில் சுதந்திரதேவி சிலையானது நிலைநிறுத்தப்பட்டு 1886ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்ட் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. சுதந்திரதேவி சிலையின் புதிய உயரம் 305 அடி & 1 அங்குலமாகும். இதன் உட்புறமாக 354 படிகளும், அதன் கிரீடத்தில் 25 ஜன்னல்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுதந்திரதேவி சூடியிருக்கின்ற கிரீடத்தில் 7 கதிர்கள் உள்ளன. இது 7 சமுத்திரங்களையும், 7 கண்டங்களையும் குறிக்கின்றது. சுதந்திரதேவி இடது கையில் வைத்திருக்கின்ற நூலில் ஜூலை 4, 1776 என ரோமன் இலக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவுக்கு விடுதலை கிடைத்து நூறாண்டுகள் நிறைவுபெற்றதை சிறப்பிக்கும்முகமாக சுதந்திரதேவி சிலை நிர்மாணிக்கப்பட்டாலும் இந்தச் சிலையானது நூற்றாண்டு விழா நிறைவடைந்து 10 ஆண்டுகளின் பின்னரே சுதந்திர தினப் பரிசாக அமெரிக்க மக்களுக்கு கிடைத்தது.

அமெரிக்கா மீதான 9/11 தாக்குதலினைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி வரை சுதந்திரதேவி சிலையானது பொது மக்களின் பார்வைக்கு தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.நா யுனெஸ்கோ அமையமானது சுதந்திரதேவி சிலையினை 1984ம் ஆண்டு உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


***

Sunday, October 24, 2010

சிவப்பு நிறம் தொடர்பான சுவையான தகவல்கள்......

 ரஷ்சிய மொழியில் சிவப்பு(Red) என்பதற்கான அர்த்தம் யாதெனில் "அழகானது" என்பதாகும்.

 மூன்று முதன்மை நிறங்களில் சிவப்பு நிறமும் உள்ளடங்குகின்றது.

சிவப்பு நிறத்தினை ரூவி என்றழைப்பதுண்டு. இந்த சொல்லானது இலத்தின் சொல்லானது ரூவென்ஸ் என்ற சொல்லிருந்து தோற்றியதாகும். ரூவென்ஸ் என்பதன் அர்த்தம் யாதெனில் சிவப்பு என்பதாகும்.

சிவப்பு நிறமானது அதிக தூர விலகல் தன்மை கொண்டதனாலேயே ஒளிச்சமிக்சை கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது.

 ஐக்கிய அமெரிக்காவின் தேசியக்கொடியிலுள்ள சிவப்பு நிறக்கோடுகள் குறித்துநிற்பது தைரியத்தினை ஆகும்.

 சீனா நாட்டில் மணப்பெண் பாரம்பரியமாக சிவப்பு நிறத்திலான திருமண ஆடையினையே அணிவாராம். ஏனெனில் நல்லதிர்ஷ்டத்துக்காகவாம்.

 சீனா நாட்டில் குழந்தைகளுக்கு சிவப்பு முட்டை(Red-egg) விழாவின் போதுதான் அவர்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றதாம்.

சிவப்பு நிறத்தினைப் பார்க்கின்றபோது அது நம் இதயத்துடிப்பின் வேகத்தினை அதிகரிக்கின்றதாம்.

 புராதன உரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிவப்பு நிறக்கொடியானது போருக்குரிய அடையாளச் சின்னமாகும்.

 தென்னாபிரிக்காவில், சிவப்பு நிறமானது துக்கத்தின் அடையாளமாகும்.

 உலக நாடுகளின் தேசியக்கொடிகளில் அதிகமாகக் காணப்படுகின்ற பொதுவான நிறமாக சிவப்பு விளங்குகின்றது.

 ரஷ்சியாவின் இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் 1917ம் ஆண்டளவில் தமது மன்னரினை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்தபோது தங்களின் போராட்ட அடையாளமாக சிவப்பு நிறக்கொடிகளினை பயன்படுத்தினர். இதன் காரணத்தினாலேயே கம்யூனிஸ்சின் சின்னமாக சிவப்பு நிறம் தோற்றம்பெற்றது.




இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் ...

 19ம் நூற்றாண்டில் இத்தாலி தேசத்தினை ஒற்றுமைப்படுத்திய தலைவர் கருபொல்டியின் தலைமையிலான இராணுவவீரர்கள் சிவப்பு ஆடையினையே அணிந்தனராம்.

 பின்னிரவு நேர விமானப் பறப்பினை "Red Eye" என்கின்றனர்.

 ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது சிவப்பு நிறமானது எருதுகளினை கோபப்படுத்துகின்றது என்பது தவறாகும். ஏனெனில் எருதுகள் நிறக்குருடுகளாகும். மாறாக ஜல்லிக்கட்டின்போது அசைக்கப்படும் துணிகளின் அசைவுகளுக்கேற்பவே எருதுகள் கோபத்துடன் செயற்படுகின்றன.

 நம் இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு காரணமானது ஹீமோகுளோபின் என்கின்ற இரசாயனமாகும்.

நண்பர்களே, உங்களில் எத்தனை பேருக்கு பிடித்த நிறம் சிவப்பு நிறம்........

அப்படியே இந்தப் பாடலினையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்.....



***

Wednesday, October 20, 2010

மாவீரன் நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிய ஆய்வுத்தகவல்......



பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மரணம் தொடர்பில் பல்வேறுவிதமான ஊகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

நெப்போலியன் ஆர்சனிக் விஷம் காரணமாக மரணமடைந்தான் என்று ஒரு கருத்தும், நெப்போலியன் சிறை வைக்கப்பட்ட அறை பற்றிய ஆய்வுகளிலிருந்து, அந்த அறையின் சுவரை அலங்கரித்த ஓவியத்தில் விஷம் பூசப்பட்டு இருந்தது. அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வர்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருந்ததால், விஷத்தைச் சுவாசித்து சுவாசித்து இறந்துவிட்டார் என்று ஒரு தரப்பு ஆய்வாளர்களும், சுவரில் ஓவியத்தினை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்கமுடியாமல் நெப்போலியன் ஓவியத்தினைக் கிழித்துத் தின்றதால் இறந்தார் என்று இன்னொரு தரப்பினர் அறிவித்தனர்.

ஆனால், நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிதாக வெளியாகியுள்ள ஆய்வுத்தகவலின் பிரகாரம் மாவீரன் நெப்போலியன் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வினை இத்தாலியின் அணு பெளதிகவியல் தொடர்பான தேசிய நிறுவகம்(NINP) மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொன்மை கோட்பாட்டினை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுத்தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வில், குழந்தைப் பருவ மற்றும் இறப்புக்கு முந்திய காலப்பகுதிற்கும் இடைப்பட்ட பேரசனுடைய முடிகளின் பல்வேறு மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள்.

ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளினை சிறியதொரு அணுக்கருவியின் மையத்திலிட்டு அவற்றின்மீது நியூத்திரன்களுடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்சனிக் ஸ்திரமற்றதாகவும், ஒன்று சேராமலும், காமா மற்றும் வீற்றா கதிர்களும் வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கதிர்வீசலினை அளவீடுசெய்தபோது, ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளில் ஆர்சனிக் மட்டமானது 100 தடவைகள் சாதாரணமாகவே இருந்தது.
நெப்போலியனின் மகன், மனைவி மற்றும் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் முடிகளினை ஆய்வுசெய்தபோதும் ஒரே முடிவே கிடைத்ததாம்.

ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சென் ஹெலெனா தீவில் சிறை வைக்கப்பட்ட நெப்போலியன் பாரியளவில் ஆர்சனிக் விஷத்தினை உள்ளெடுத்ததன் காரணத்தினாலேயே மரணமாகியதாக பலரும் நம்புகின்றனர்.

***
Blog Widget by LinkWithin