Showing posts with label மிகப் பெரியவை. Show all posts
Showing posts with label மிகப் பெரியவை. Show all posts

Saturday, September 22, 2012

உலகில் மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை



உலகிலுள்ள மிக உயரமான விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலையானது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பாய் நகரிலுள்ள கோல்ஹாபூரில் அமைந்துள்ளது. இந்த திருவுருவச்சிலையானது "சின்மயா கணபதி" என்றழைக்கப்படுகின்றது. 24 அடி உயரமான சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை 66 அடி உயரம் கொண்டதாகும். 800 மெற்றிக் தொன் நிறையினைக் கொண்ட இச்சிலையினை 50 சிற்பக் கலைஞர்கள் வடிவமைக்க 18 மாதங்கள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 2001ம் ஆண்டு சின்மயா மிசன் அமைப்பின் பொன்விழா(50ம் ஆண்டு) நிறைவினை முன்னிட்டு இச்சிலை வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

****************************************************

***

Wednesday, November 10, 2010

உலகில் மிகப்பெரிய எரிமலை.............



உலகில் மிகப்பெரிய எரிமலையானது அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் அமைந்துள்ளது. "மௌவ்னா லோ" என்றழைக்கப்படும் இந்த எரிமலைக்கு ஹவாய் மொழியில் "உயரமான மலை" என்ற பொருளாகும்.



ஹவாய் தீவுகள் உருவாகுவதற்கு காரணமான 5 எரிமலைகளில் ஒன்றாக " மௌவ்னா லோ" எரிமலையானது விளங்குகின்றது.

இந்த எரிமலையானது, கடல் மட்டத்திலிருந்து 4170 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளதுடன் இந்த எரிமலையின் அத்திவாரமானது கடலின் அடிமட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் " மௌவ்னா லோ" எரிமலையின் மொத்த உயரமானது 17000 மீற்றரிலும் (56000 அடி) அதிகமாகும். அவ்வண்ணம், பூமியில் மிக உயரமான மலைகளிலொன்றாகவும் " மௌவ்னா லோ" எரிமலையினைக் குறிப்பிடலாம்.

" மௌவ்னா லோ" எரிமலையானது ஹவாய் தீவுகளின் அரைப்பங்கிற்கு(50.5%) பரந்து வியாபித்து காணப்படுகின்றது. மௌவ்னா லோ எரிமலையின் பரப்பு 5271 km2 அத்துடன் இதன் கொள்ளளவு 80000 km3. அவ்வண்ணம் பரப்பளவிலும், கொள்ளளவிலும், உலகில் மிகப்பெரிய எரிமலையாக "மௌவ்னா லோ" விளங்குகின்றது.

உலகில் மிகவும் தொழிற்படு நிலையில் காணப்படும் எரிமலைகளில் ஒன்றாக விளங்கும் " மௌவ்னா லோ" எரிமலையானது, 1843ம் ஆண்டிலிருந்து இதுவரை 33 தடவைகள் வெடித்துக் குமுறியுள்ளது. இந்த எரிமலையின் அண்மைய வெடிப்புச் சம்பவமாக 1984 மார்ச் 24 - ஏப்ரல் 15 வரை வெடித்தமை பதிவாகியுள்ளது.

" மௌவ்னா லோ" எரிமலையானது, செங்குத்தான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டமையாமல் மிகவும் மென்மையான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டுள்ளதனால் பாதுகாப்பான எரிமலையாகவும் விளங்குகின்றது. ஏனெனில் இதிலிருந்து வெளியேறுகின்ற எரிமலைக் குழம்பானது (லாவா) குறைந்தளவான சிலிக்காவினைக் கொண்டிருப்பதுடன், பெருமளவில் திரவ நிலையிலும்[குறைந்தளவான பாகு நிலைமையினை கொண்டிருப்பதனால் ஆகும்] காணப்படுவதனாலாகும்.

செங்குத்தான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டமையாததன் காரணமாக " மௌவ்னா லோ" எரிமலைக் குமுறல்கள் அரிதாகவே பாரிய விபரீதங்களினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளனவாம்.

எரிமலை தீவாக விளங்கும் ஹவாய் தீவுகளானது, பசுபிக் பூமித் தட்டில் அமைந்து காணப்படுகின்றது. இந்தப் பிராந்தியமானது எரிமலைகள், சுனாமிகள், பூகம்பங்கள் போன்ற இயற்கைப் பாதிப்புக்களின் அபாய மையமாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


============================================


உயிர் சேதங்களினை ஏற்படுத்திய " மெராபி" எரிமலை வெடிப்புச் சம்பவம்.....



உலகில் மிகவும் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றாக விளங்கும் " மெராபி" எரிமலை இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அதிகளவில் மக்கள் வாழ்கின்ற பிராயந்தியத்தில் அமைந்து காணப்படுகின்றது,



கடந்த வாரம் முதற்கொண்டு " மெராபி" எரிமலை குமுற ஆரம்பித்ததிலிருந்து இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100 பேருக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதுடன், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 200,000 இலும் அதிகமாகும்.

================================================

எரிமலை தொடர்பிலான எனது முன்னைய பதிவு.......

Monday, September 13, 2010

உலகில் மிகப்பெரிய மணி......




உலகில் மிகப்பெரிய மணியாக புகழ்பெற்ற "சார் கொலோகொல்" [Tsar-Kolokol] விளங்குகின்றது. ஆனால் இந்த மணி உடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

"சார் கொலோகொல்" மணியானது, ரஷ்சியாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள ரஷ்சிய அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய கிரம்ளனில் அமைந்துள்ளது. இந்த மணியானது 1733-35ம் ஆண்டளவில் வடிவமைக்கப்பட்டதாகும். இதன்போது இந்த மணியானது 3தடவைகள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தடவையின்போதும் அதிகளவில் உலோகங்கள் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் நிறையானது 400,000பவுண்ட்(180தொன்கள்) ஆகும். இதன் உயரம் 6.14மீற்றர்கள் அத்துடன் இதன் விட்டம் 6.6 மீற்றர்கள் ஆகும். இந்த மணியினை 200இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்தே வடிவமைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


1737ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தொன்றின் காரணமாகவே "சார் கொலோகொல்" மணியில் ஒரு துண்டு உடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த உடைந்த துண்டின் நிறை 11.5 தொன்களாகும். இதன் காரணத்தினால் "சார் கொலோகொல்" ம்ணியானது ஒலிப்பதில்லை.


உலகில் ஒலி எழுப்பும் மிகப்பெரிய மணி......



உலகில் ஒலி எழுப்பும் மிகப்பெரிய மணியானது மியன்மாரில் காணப்படுகின்றது. "மின்கன்"[ Mingun] மணியானது மத்திய மியன்மாரில், மண்டலி நகரின் வடக்கே அமைந்துள்ளது.

"மின்கன்" மணியானது 1808ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி பொடவ்பயா மன்னனால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மணியானது 13அடி[3.96மீற்றர்] உயரமானதுடன், இதன் நிறை 90.55 மெட்றிக் தொன்களாகும்.


=================================================


பிரபல பின்னணிப் பாடகி சொர்ணலதா காலமானார்....




தமிழ் திரைப்படத்துறையின் பிரபல பின்னணிப் பாடகி "சொர்ணலதா" தனது 37வது வயதில் நேற்று காலமானார். தனது வசீகரமான குரலால் ரசிகர்களின் அபிமானத்தினை பெற்றிருந்த பாடகி சொர்ணலதா இந்திய அரசின், சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதினை "கருத்தம்மா" படத்திற்காக பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


சொர்ணலதாவின் இழப்பினால் துயருறும் அன்னாரின் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


போறாளே பொன்னுத்தாயி..... கருத்தம்மா பாடல்வரிகள் இன்றும் என்மனதில் பசுமையானதாக நிலைத்துநிற்கின்றது...

***
Blog Widget by LinkWithin