Monday, January 10, 2011

பேரவலத்தை ஏற்படுத்திய பெருவெள்ளம்......!!! ~ படப்பதிவு

கடந்த சில நாட்களாக பெய்துவருகின்ற அடைமழையின் காரணமாக கிழக்கிலங்கையில் ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதியாகியுள்ளனர்.

கடந்த வருடத்தின் பிற்பகுதியில் பருவமழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது, ஆனாலும் நேற்றுமுன்தினம் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக வெள்ளம் வீடுகளுள் உட்புகுந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும், பல இடங்களில் போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


விவசாயிகள் விதைப்பினை மேற்கொண்ட ஆரம்ப காலகட்டத்தில் மழையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனாலும் பின்னர் பொழிந்த மழையின் காரணமாக நன்மையடைந்திருந்தாலும், தற்சமயம் பெய்கின்ற மழையின் காரணமாக பல விவசாயக் காணிகள் முற்றும்முழுதாக வெள்ளத்தில் மூழ்கிப்போயுள்ளன.


வானத்தினை அவதானிக்கின்றபோது இன்றும் மழை பெய்யக்கூடும் என்றே தோன்றுகின்றது.... ஆம் மழை பெய்கின்றது.

எங்கள் கிராமத்திலுள்ள ஆறும், குளமும் நிரம்பிவிட்டது ... வெள்ளம் அபாயம் தொடர்ந்து நீடிக்கின்றது ..........


வெள்ளப்பெருக்கின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளினை வழங்க விரும்புகின்ற நண்பர்களே உங்களினை அன்புடன் வரவேற்கின்றோம்.......

நீரிலும் வீதி சமிஞ்ஞை?....!!!






நெற் காணிகள் வெள்ளத்தில்...!!!









கால்நடைகளின் தங்குமிடம்?...!!!






கரைபுரண்டோடும் வெள்ளம்...!!!













***

No comments:

Blog Widget by LinkWithin