Showing posts with label காலநிலை. Show all posts
Showing posts with label காலநிலை. Show all posts

Wednesday, January 12, 2011

நூற்றாண்டு காணாத வெள்ளம் ~ (த)கண்ணீரில் மக்கள் ~ படப்பதிவு - 2

கடந்த பல நாட்களாக பெய்துவருகின்ற அடை மழையின் காரணமாக கிழக்கிலங்கை வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது ..

எங்கள் கிராமம் வெள்ளத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டு பலர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இதுபோன்ற நிலைமையே கிழக்கிலங்கை முழுவதும் காணப்படுகின்றது.

மழை தொடர்ந்து பெய்வதால் வெள்ளம் இன்னும் அதிகரிக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்..

நண்பர்களே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்க முன்வாருங்கள் .........



























***

Monday, January 10, 2011

பேரவலத்தை ஏற்படுத்திய பெருவெள்ளம்......!!! ~ படப்பதிவு

கடந்த சில நாட்களாக பெய்துவருகின்ற அடைமழையின் காரணமாக கிழக்கிலங்கையில் ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதியாகியுள்ளனர்.

கடந்த வருடத்தின் பிற்பகுதியில் பருவமழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது, ஆனாலும் நேற்றுமுன்தினம் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக வெள்ளம் வீடுகளுள் உட்புகுந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும், பல இடங்களில் போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


விவசாயிகள் விதைப்பினை மேற்கொண்ட ஆரம்ப காலகட்டத்தில் மழையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனாலும் பின்னர் பொழிந்த மழையின் காரணமாக நன்மையடைந்திருந்தாலும், தற்சமயம் பெய்கின்ற மழையின் காரணமாக பல விவசாயக் காணிகள் முற்றும்முழுதாக வெள்ளத்தில் மூழ்கிப்போயுள்ளன.


வானத்தினை அவதானிக்கின்றபோது இன்றும் மழை பெய்யக்கூடும் என்றே தோன்றுகின்றது.... ஆம் மழை பெய்கின்றது.

எங்கள் கிராமத்திலுள்ள ஆறும், குளமும் நிரம்பிவிட்டது ... வெள்ளம் அபாயம் தொடர்ந்து நீடிக்கின்றது ..........


வெள்ளப்பெருக்கின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளினை வழங்க விரும்புகின்ற நண்பர்களே உங்களினை அன்புடன் வரவேற்கின்றோம்.......

நீரிலும் வீதி சமிஞ்ஞை?....!!!






நெற் காணிகள் வெள்ளத்தில்...!!!









கால்நடைகளின் தங்குமிடம்?...!!!






கரைபுரண்டோடும் வெள்ளம்...!!!













***

Sunday, March 14, 2010

உலகவெப்பமயமாதலால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இமயமலை



இமயமலை பனிச்சிகரங்கள் உருகுவதன் காரணமாக 1.3 பில்லியனுக்கும் அதிகமான ஆசிய நாட்டவர்கள் அச்சுறுத்தலை எதிர் நோக்குவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

1 பில்லியனுக்கும் அதிகமான ஆசிய நாட்டவர்கள் தமக்கான நீர் வளத்துக்காக இமய மலை சிகரங்களிலேயே தங்கியுள்ளனர். ஆய்வாளர்களின் கருத்தின் பிரகாரம் இமய மலை சிகரங்களில் அச்சுறுத்துகின்ற வேகத்தில் பனி உருகுவதன் காரணமாக ஆசியக் கண்டத்தில் அதிகப்படியான வரட்சி நிலையினை இது ஏற்படுத்தலாம் என எச்சரிக்கைச் செய்திகள் விடப்படுகின்றன.

2400 கி.மீற்றருக்கும் அதிகமான தூரம் இமயமலை சிகரங்கள்; பாகிஸ்தான், இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் என பரந்து காணப்படுகின்றது. ஆசியாவின் பிரதான 9 மிகப்பெரிய ஆறுகளுக்கு இமயமலை சிகரங்களே பிரதான நீர் வழங்கும் ஊற்றாக காணப்படுகின்றது. இந்த ஆறுகளை நம்பி 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

இந்தப் பிராந்தியத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெப்பநிலையானது 0.15 தொடக்கம் 0.6 டிகிரி செல்சியஸ் வரை [0.27- 1.08 டிகிரி பரனைற்] அதிகரித்தவண்ணமுள்ளது. இதன் காரணமாக சிகரங்கள் சுருங்கும் வேகமானதும் அதிகரித்தவண்ணமுள்ளது.

காலநிலை மாற்றங்களின் காரணமாக எதிர்வருகின்ற 40 வருடங்களில் அதிகமான பனிச்சிகரங்கள் இல்லாமல் மறைந்துபோய்விடும் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

காலநிலை மாற்றங்கள் தொடர்பில் ஆராயும் பிரதான .நா நிறுவனமான காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவினர் [IPCC] கருத்துத்தெரிவிக்கையில் இமயமலை பனிச்சிகரங்கள் 2035ம் ஆண்டளவில் பிரதான மாறுதல்களை வெளிப்படுத்தும் என தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்தின் பிரகாரம் உலகவெப்பமயமாதலின் விளைவுகளை இந்தப் பிராந்தியத்தில் உணரக்கூடியதாக தெரிவிக்கின்றனர்.



ஆய்வுகளின் பிரகாரம், அதிகரித்த வேகத்தில் சிகரங்கள் உருகுவதன் காரணமாக சீனா தேசத்தில் குறுகிய காலத்தில் வெள்ளப்பெருக்குகள் அதிகரிக்கலாம் என சிங்குவா செய்தி ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், நீண்ட காலத்தில் ஆறுகளின் நீர்ப்பிரவாகத்தில் குறைவுகள் ஏற்பட்டு மேற்கு சீனாவின் பெருமளவான பகுதிகள் பாதிப்பினை எதிர்நோக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்ப் பற்றாக்குறை காரணமாக உலக அதிகளவு சனத்தொகையினை கொண்ட சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தியில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நூற்றாண்டின் இறுதியில் பங்களாதேஷ் நாட்டின் பிரதான நதிகள் வரட்சி நிலையினை அடையலாம் என IPCC தெரிவிக்கின்றது. இதன் காரணமாக அங்கு ஏற்படுகின்ற வெள்ள நிலைமைகளில் மாறுதல்கள் ஏற்படலாம்.

இமயமலையின் பனிச்சிகரங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் நீண்ட காலத்தில் ஆசிய நாட்டவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம் எனவே உலகவெப்பமயமாதலுக்கு காரணமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசாங்கங்கள் விரைந்து செயற்பட வேண்டுயதன் அவசியம் தற்சமயம் உணரப்படுகின்றது எனலாம்.


***

Friday, November 6, 2009

காலநிலை மாறிவிட்டது .....

கிழக்கிலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்கின்ற கடும் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் நீரினால் நிறைந்துள்ளன.

எமது பிரதேசத்தில் கடந்த பல மாதங்களாக நிலவிய கடும் வரட்சியினால் பல தசாப்தங்களுக்கு பின்னர் வற்றிக் காணப்பட்ட ஆறுகள்,குளங்கள் உட்பட நீர்நிலைகள் இன்று மழையினால் நிரம்பி வழிகின்றன. வற்றிய நீர்நிலைகள் ஓரிரண்டு நாட்களுக்குள்ளேயே மழையினால் நிரம்பிவிட்டன.கடும் மழையினால் விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.





கடும் வரட்சியின் விளைவு மேலே உள்ள படத்தில்





கடும் மழையின் விளைவு


***
Blog Widget by LinkWithin