Showing posts with label அனர்த்தங்கள். Show all posts
Showing posts with label அனர்த்தங்கள். Show all posts

Wednesday, January 12, 2011

நூற்றாண்டு காணாத வெள்ளம் ~ (த)கண்ணீரில் மக்கள் ~ படப்பதிவு - 2

கடந்த பல நாட்களாக பெய்துவருகின்ற அடை மழையின் காரணமாக கிழக்கிலங்கை வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது ..

எங்கள் கிராமம் வெள்ளத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டு பலர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இதுபோன்ற நிலைமையே கிழக்கிலங்கை முழுவதும் காணப்படுகின்றது.

மழை தொடர்ந்து பெய்வதால் வெள்ளம் இன்னும் அதிகரிக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்..

நண்பர்களே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்க முன்வாருங்கள் .........



























***

Monday, January 10, 2011

பேரவலத்தை ஏற்படுத்திய பெருவெள்ளம்......!!! ~ படப்பதிவு

கடந்த சில நாட்களாக பெய்துவருகின்ற அடைமழையின் காரணமாக கிழக்கிலங்கையில் ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதியாகியுள்ளனர்.

கடந்த வருடத்தின் பிற்பகுதியில் பருவமழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது, ஆனாலும் நேற்றுமுன்தினம் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக வெள்ளம் வீடுகளுள் உட்புகுந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும், பல இடங்களில் போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


விவசாயிகள் விதைப்பினை மேற்கொண்ட ஆரம்ப காலகட்டத்தில் மழையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனாலும் பின்னர் பொழிந்த மழையின் காரணமாக நன்மையடைந்திருந்தாலும், தற்சமயம் பெய்கின்ற மழையின் காரணமாக பல விவசாயக் காணிகள் முற்றும்முழுதாக வெள்ளத்தில் மூழ்கிப்போயுள்ளன.


வானத்தினை அவதானிக்கின்றபோது இன்றும் மழை பெய்யக்கூடும் என்றே தோன்றுகின்றது.... ஆம் மழை பெய்கின்றது.

எங்கள் கிராமத்திலுள்ள ஆறும், குளமும் நிரம்பிவிட்டது ... வெள்ளம் அபாயம் தொடர்ந்து நீடிக்கின்றது ..........


வெள்ளப்பெருக்கின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளினை வழங்க விரும்புகின்ற நண்பர்களே உங்களினை அன்புடன் வரவேற்கின்றோம்.......

நீரிலும் வீதி சமிஞ்ஞை?....!!!






நெற் காணிகள் வெள்ளத்தில்...!!!









கால்நடைகளின் தங்குமிடம்?...!!!






கரைபுரண்டோடும் வெள்ளம்...!!!













***

Monday, January 3, 2011

டைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல்.......

மலர்ந்திருக்கின்ற 2011ம் ஆண்டில் எனது முதல் பதிவில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.... .

அந்தவகையில், உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல் தொடர்பான பதிவு உங்களுக்காக.......



இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நியூயோர்க் நோக்கி தனது கன்னிப் பயணத்தினை மேற்கொண்டிருந்த "டைட்டானிக்"கப்பல்[SS Titanic], 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள், அத்திலாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகினர்.

"டைட்டானிக்" கப்பல் விபத்துக்குள்ளாகுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் மோர்கன் றொபட்சன் என்பவர் வெளியிட்ட நாவலொன்றில் இது போன்றதொரு விபத்துச் சம்பவமொன்றினைக் குறிப்பிட்டிருந்தார், அந்தப் புத்தகத்தில் டைட்டானிக் கப்பலின் அளவுடைய கப்பலானது தனது கன்னிப் பயணத்தினை மேற்கொண்டிருந்தபோது ஏப்ரல் மாத இரவொன்றில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாவதாக வர்ணித்திருந்தார்.

பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாவதாக வர்ணித்திருந்த , மோர்கன் றொபட்சனின் கற்பனைக் கப்பலின் பெயர் "டைட்டன்" ஆகும்.



அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் சிதைவு...


***
Blog Widget by LinkWithin