Showing posts with label நீரிழிவு. Show all posts
Showing posts with label நீரிழிவு. Show all posts

Sunday, December 20, 2009

நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் கோப்பி,தேயிலை


அவுஸ்ரேலிய, சிட்னி பல்கலைக்கழக சர்வதேச சுகாதாரத்துக்கான ஜோர்ஜ் நிறுவக ஆய்வாளர் Rachel Huxley(D.Phil) மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க கோப்பி மற்றும் தேயிலை ஆகியன உதவிபுரிவதாக கண்டறிந்துள்ளனர்.

இதற்காக அவரது குழுவினர் கோப்பியருந்தும் 457,922 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 18 ஆய்வுகளையும் , கபின் அற்ற கோப்பியருந்தும் 225,516 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 6 ஆய்வுகளையும் மேலும் தேநீர் அருந்தும் 286,701 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 7 ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.

பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், ஒரு நாளில் மேலதிகமாக அருந்துகின்ற ஒவ்வொரு கோப்பை கோப்பியினால் நீரிழிவு நோயின் அதிகரித்த அபாயமானது 7% இனால் குறைவடைவதாக கண்டறிந்துள்ளனர்.

ஒரு நாளில் 3-4 கோப்பை அருந்துபவர்கள், 0-2 கோப்பை அருந்துபவர்களை அருந்துபவர்களை விடவும் 25% இற்கும் குறைவான அபாயங்களினை எதிர்நோக்குகின்றனர்.


மேலும் இந்த ஆய்வின் பிரகாரம் கபின் அற்ற கோப்பியருந்துபவர்கள் ஒருநாளில் 3-4 கோப்பைக்கு மேல் அருந்துபவர்கள், கோப்பி அருந்தாதவர்களைக்காட்டிலும் அண்ணளவாக 1/3 பங்கு குறைவாகவே நீரிழிவு நோயின்அபாயத்தை எதிர்கொள்கின்றனர். தேநீர் அருந்துபவர்கள் ஒரு நாளில் 3-4 கோப்பைக்கு மேல் அருந்துபவர்கள், தேநீர் அருந்தாதவர்களைக் காட்டிலும்அண்ணளவாக 1/5 பங்கு குறைவாகவே நீரிழிவு நோயின் அபாயத்தைஎதிர்கொள்கின்றனர்.


நாமும் நாள்தோறும் கோப்பி அல்லது தேநீர் அருந்தி நீரிழிவு நோயின் அபாயத்தினைக் குறைத்துக் கொள்வோமாக...........

***

Thursday, October 22, 2009

இந்தியா முதன்மைநிலையில்..........# 01



உலகளாவியரீதியில் நீரிழிவு நோயினால் அதிக எண்ணிக்கையான மக்கள் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா முதன்மை நிலையில் உள்ளதுடன் 2030ம் ஆண்டளவில் நாட்டுமக்கள் சனத்தொகையில் 9%மான மக்கள் தொகையினர் நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும் சர்வதேச நீரிழிவு சம்மேளனம் (IDF) எச்சரிக்கை செய்தியினை விடுத்துள்ளது.

இந்தியாவில் தற்சமயம் 50.8 மில்லியன் தொகையானவர்கள் நீரிழிவு நோயினால் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சீனாவில் 43.2 மில்லியன் தொகையானவர்கள் நீரிழிவு நோயினுடைய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை கனடா, மொன்றியல் நகரில் நடைபெற்ற IDF 20வது வருடாந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் அமெரிக்காவில் 26.8 மில்லியன் மக்களும்,ரஸ்யாவில் 9.6 மில்லியன் மக்களும்,பிரேசிலில் 7.6 மில்லியன் மக்களும்,ஜேர்மனியில் 7.5 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


IDF அறிக்கையின் பிரகாரம் ஆசியாவிலே, பாகிஸ்தானில் 7.1 மில்லியன் மக்களும், யப்பானில் 7.1 மில்லியன் மக்களும், இந்தோனேசியாவில் 7 மில்லியன் மக்களும் நோயினால் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவியரீதியில் 258மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது உலக சனத்தொகையில் 7% என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

IDF அறிக்கையின் பிரகாரம் குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் நீரிழிவு நோயானது அபிவிருத்தியடைந்துவருகின்ற விவகாரமாக மாற்றமடைந்து வருவதுடன், மக்களின் சுகாதார நிலை மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.


மேலும் நீரிழிவு நோயின் காரணமாக 2010ம் ஆண்டளவில் உலக பொருளாதாரத்துக்கு 376 பில்லியன் டொலர் செலவு ஏற்படலாம் என்பதுடன், இது மொத்த உலக சுகாதார பராமரிப்பு செலவீனங்களில் 11.6% எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2030ம் ஆண்டளவில் இது 490 பில்லியன் டொலர் செலவீனமாக அதிகரிக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 80%க்கும் அதிகமானது உலக செல்வந்த நாடுகளில் நீரிழிவு நோய் தொடர்பில் செலவிடப்படும். ஏழ்மை நாடுகளில் 70%க்கும் அதிகமானவர்கள் தற்சமயம் நீரிழிவுடன் வாழ்வதாக IDF அறிக்கை தெரிவிக்கின்றது.

அந்த அறிக்கையின் பிரகாரம் இந்தியா தற்சமயம் நீரிழிவு நோய் தொடர்பில் 2.8 பில்லியன் டொலர்களினையே செலவிடுகின்றது, இது உலகளாவிய மொத்த செலவீனத்தில் 1% என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


***
Blog Widget by LinkWithin