Tuesday, March 1, 2011

உலகில் மிக விலையுயர்ந்த புத்தகம்.......



ஜோன் ஜேம்ஸ் ஆடவொன் அவர்களின் கைவண்ணத்தில் உருவாகிய "Birds of America" ~ (அமெரிக்கப் பறவைகள்) என்கின்ற தலைப்பிலான புத்தகத்தின் முழுமையான அரிய பிரதியொன்று £7.3 மில்லியன் ($11.5 மில்லியன் ~ 126 கோடி இலங்கை ரூபாய்) பெறுமதிக்கு லண்டனில் ஏலத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் விற்பனையாகியுள்ளது. 19ம் நூற்றாண்டினைச் சேர்ந்த இந்த புத்தகத்தின் 119 பிரதிகளே உள்ளதாக அறியப்படுகின்றது. இவற்றில் 108 பிரதிகள் காட்சியகங்களுக்கும், நூலகங்களுக்கும் சொந்தமானதாகும்.



ஜோன் ஜேம்ஸ் ஆடவொன்((1785-1851) பறவைகள் தொடர்பான ஆராய்ச்சியாளர் மட்டுமன்றி சிறந்த ஓவியரும் ஆவார். ஜோனின் கைவண்ணத்தில் உருவாகிய பறவைகளின் ஓவியங்கள், "Birds of America" என்கின்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜோன் ஜேம்ஸ் ஆடவொன், பிரான்ஸ் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறியபோது தன்னை சுற்றியிருந்த சூழலில் பறவைகளின் வாழ்க்கை நடத்தையினை அவதானித்து அவற்றினை ஓவியமாகத் தீட்டினார். ஆரம்பத்தில் இவர் வரைந்த பறவைகளின் படங்களினை அமெரிக்கப் பதிப்பாளர் எவரும் பிரசுரிக்க முன்வரவில்லை.
கடைசியாக, அவர் வரைந்த ஓவியங்கள் "Birds of America" என்ற பெரியளவான தொகுப்பாக உருவாகியது.

இதற்கு முன்னர், 1989ம் ஆண்டு ஆடவொனின் ஒரு முழுமையான தொகுப்பு $3.96 மில்லியனுக்கு ஏலம் போனமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் நினைவாக ஆடவொன் கழகம் 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

***

No comments:

Blog Widget by LinkWithin