Tuesday, March 12, 2013

இலங்கை, பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியில் பொழிந்த "சத மழை"


சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையே காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 08 சதங்கள் பெறப்பட்டன. இலங்கை அணி தமது 1வது இன்னிங்ஸ்சில் 4 விக்கட் இழப்பிற்கு 570 ஓட்டங்களைப் பெற்ற வேளை தமது இன்னிஸ்சினை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணியின் சார்பில் குமார் சங்கக்கார 142, லகிரு திரிமான்னே 155*, தினேஷ் சந்திமால் 116* ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.



பதிலுக்கு தமது 1வது இன்னிங்ஸ்சில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 638 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணியின் சார்பில் முஹம்மட் அஷ்ரப்புல் 190, முஷ்ஃபிகுர் ரஹீம் 200, நசிர் ஹொஸ்சைன் 100 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.

தமது 2வது இன்னிங்ஸ்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கட் இழப்பிற்கு 335 ஓட்டங்களைப் பெற்ற வேளை தமது இன்னிஸ்சினை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணியின் சார்பில் குமார் சங்கக்கார 105,திலகரத்ன டில்ஷான் 126 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.

சத மழை பொழிந்த இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 8 சதங்கள் பெறப்பட்டன. இதன் மூலம் 8 வருட கால சாதனை புதுப்பிக்கப்பட்டது. இதற்கு முன்னர், 2005ம் ஆண்டு சென்.ஜோன்ஸ் அன்ரிகுவாவில் நடைபெற்ற மே.தீவுகள், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் 8 சதங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். தென்னாபிரிக்க சார்பில் டி வில்லியர்ஸ் 114, கிரேம் ஸ்மித் 126, ஜக்ஸ் கலிஸ் 147, அஷ்வெல் பிரின்ஸ் 131 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை மே.தீவுகள் சார்பில் கிறிஸ் கெய்ல் 317, ராம் நரேஷ் சர்வான் 127, சிவ்நரேய்ன் சந்திரபோல் 127, நர்சிங் டியோநரேய்ன் 107 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.

வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக சதங்கள் பெறப்பட்ட நிகழ்வுகள் வ்ருமாறு;

08 சதங்கள் இலங்கை எதிர் பங்களாதேஷ், காலி, 2012/13, வெற்றிதோல்வியற்ற முடிவு

08 சதங்கள் மே.தீவுகள் எதிர் தென்னாபிரிக்கா, சென்.ஜோன்ஸ் அன்ரிகுவா, 2005, வெற்றிதோல்வியற்ற முடிவு

07 சதங்கள் இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா, நொட்டிங்ஹாம், 1938, வெற்றிதோல்வியற்ற முடிவு

07 சதங்கள் மே.தீவுகள் எதிர் அவுஸ்திரேலியா, கிங்ஸ்ரன், 1955, ஆஸி வெற்றி

07 சதங்கள் தென்னாபிரிக்கா எதிர் மே.தீவுகள், கேப் டவுன், 2003/04, வெற்றிதோல்வியற்ற முடிவு

07 சதங்கள் மே.தீவுகள் எதிர் இங்கிலாந்து, போர்ட் ஒப் ஸ்பெய்ன், 2008/09, வெற்றிதோல்வியற்ற முடிவு

07 சதங்கள் இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, கொல்கத்தா, 2009/10, இந்தியா இன்னிங்ஸ் & 57 ஓட்டங்களால் வெற்றி

07 சதங்கள் இந்தியா எதிர் இலங்கை, அஹ்மதாபாத், 2009/10, வெற்றிதோல்வியற்ற முடிவு

***

Friday, March 8, 2013

வரலாற்றில் பெண்மணிகளுக்கு கிடைத்த சில அங்கீகாரங்கள்...


     மார்ச் 08 திகதியானது உலகளாவியரீதியில் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது. சர்வதேச மகளிர் தினமானது 1909ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டுவருகின்றது.



·        பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து ஆகும்.(1893ம் ஆண்டு)

·        ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி பிரிட்டனைச் சேர்ந்த சார்லொட் கூப்பர், இவர் 1900ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

·        பெண்கள் முதன்முதலில் தடகள மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது 1928ம் ஆண்டு அம்ஸ்ரெர்டாம் ஒலிம்பிக் போட்டியிலாகும்.

·        பெண்களுக்கான மருத்துவப் பாடசாலையினை நிறுவிய முதல் நாடு ஜப்பான் ஆகும். 1900ம் ஆண்டு யோஷிகா யயோய் என்பவரால் நிறுவப்பட்டது.

·        விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி ரஷ்யாவினைச் சேர்ந்த வெலன்டினா தெரெஷ்கோவா ஆவார். (1963ம் ஆண்டு)



·        முஸ்லிம் நாடொன்றில் தலைமைத்துவத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட முதல் பெண்மணி பெனாசீர் பூட்டோ ஆவார். இவர் 1988ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்.


·        பெண்கள் பட்டப்படிப்பினை மேற்கொள்ள அனுமதி வழங்கிய முதல் ஐரோப்பிய பல்கலைக்கழகம் சூரிச் பல்கலைக்கழகம் ஆகும்.(1865ம் ஆண்டு)

·        ஐக்கிய அமெரிக்க தபால் துறை வரலாற்றில் தபால் முத்திரையில் உருவப் படம் பொறிக்கப்பட்ட முதல் பெண்மணி என்கின்ற பெருமையினைப் பெறுபவர் ஸ்பெய்ன் மகாராணி இசபெல்லா ஆவார்.(1893ம் ஆண்டு)
     கிறிஸ்தோபர் கொலம்பஸ்சின் நாடுகாண் பயணத்திற்கு வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை இவரையே சாரும்.

·        எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் பெண்மணி ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஜுன்கோ தஃபெய் ஆவார்.(1975ம் ஆண்டு)



·        ஐக்கிய நாடுகள் சபையானது 1975ம் ஆண்டினை சர்வதேச பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தியது.

·        தற்போது உலகில் 17 நாடுகளில் பெண்கள் ஜனாதிபதிகளாகவும், பிரதம மந்திரிகளாகவும் ஆட்சிபீடத்தில் இருக்கின்றனர். 
    அந்த நாடுகளாவன;  ஜேர்மனி, லைபீரியா, ஆர்ஜென்ரீனா, பங்களாதேஷ், ஐஸ்லாந்து, லுத்துவேனியா, கொஸ்டாரிக்கா, டிரினாட் & ரொபாக்கோ, அவுஸ்திரேலியா, ஸ்லோவாக்கியா, பிரேசில், கொசோவா, தாய்லாந்து, டென்மார்க், ஜமைக்கா, மலாவி, தெ கொரியா


***
Blog Widget by LinkWithin