Saturday, November 14, 2009

உலகில் பசியின் பிடியில் 200 மில்லியன் குழந்தைகள்-ஐ.நா


ஐ.நா குழந்தைகள் நிதியம் கடந்த புதன் வெளியிட்ட தகவலின் பிரகாரம், உணவுப் போசணைக் குறைபாடு காரணமாக ஏழ்மை நாடுகளில் 5 வயதுக்கு குறைந்த அண்ணளவாக 200 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 90%க்கும் அதிகமான இந்த குழந்தைகள் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். யுனிசெப் தகவலின் பிரகாரம் இந்த வயதுக் குழந்தைகளின் மூன்றில் ஒரு இறப்புகள் போசணைக் குறைபாடுகளுடன் தொடர்புடையதாக தெரிவித்துள்ளது.

ஆசியாவில் 1990ல் 44%ஆக காணப்பட்ட இந்த வளர்ச்சியானது கடந்த வருடத்தில் 30%ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேநேரம் ஆபிரிக்காவில் சிறிதளவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் 1990ல் 38%ஆக காணப்பட்ட இந்த வளர்ச்சியானது கடந்த வருடத்தில் 34%ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பிரச்சினையின் பிரதான மையவிடமாக தென்ஆசியா விளங்குகின்றது. ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 5 வயதுக்கு குறைந்த 83 மில்லியன் கணக்கான குழந்தைகள் பசி,பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளாவிய பசி,பட்டினி பிரச்சினையினால் 1 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே...

உலகளாவிய பசி,பட்டினி பிரச்சினை தொடர்பாக உலகத் தலைவர்கள் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என உணவு மற்றும் விவசாய அமையம் தெரிவித்துள்ளது.

***

No comments:

Blog Widget by LinkWithin