Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Wednesday, December 17, 2014

மழை…! மழை…! மழை…! சுவாரஷ்சியமான தகவல்கள்…!


மழை நாளில் மழை தொடர்பான சில சுவாரஷ்சியமான தகவல்களினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.   


  • மணித்தியாலத்திற்கு 0.10 அங்குலத்திற்கும் குறைவாக பெய்கின்ற மழை இலகு மழைவீழ்ச்சியாகவும், மணித்தியாலத்திற்கு 0.30 அங்குலத்திற்கும் அதிகமாகப் பெய்கின்ற மழை கன மழைவீழ்ச்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றது.
  • மழைத்துளிகள் அளவில் வேறுபடுகின்றன. அவை 0.02 அங்குலத்திலிருந்து 0.031 அங்குலம் வரையான விட்ட அளவினைக் கொண்டவையாகும்.
  • கன மழைத்துளிகளின் வேகம் மணித்தியாலத்திற்கு 22 மைல்களுக்கும் அதிகமாகும்.
  • மழையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தற்சமயம் பயன்படுத்துகின்ற குடைகள், ஆரம்ப காலங்களில் வெயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கே கண்டுபிடிக்கப்பட்டதாம்.
  • உலகில் அதிகளவில் மழைவீழ்ச்சி கிடைக்கின்ற நகரம் இந்தியாவின் சீறாபூஞ்சி ஆகும். இங்கே வருடாந்தம் 26,460 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.
  • உலகில் அதிக எடையான ஆலங்கட்டி மழை 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி பங்களாதேஷ் நாட்டின் Gopalganj மாவட்டத்தில் பெய்தது. 1 கிலோகிராமிலும் அதிகமான எடையில் பனிக்கட்டியாக பெய்த இந்த மழையின் காரணமாக 92 பேர் மரணமடைந்தனர்.
  • ஐக்கிய அமெரிக்காவின், ஒகியோ மாநில வின்ஸ்பேர்க் நகரில் வருடாந்தம் ஜூலை மாதம் 29ம் திகதி நிச்சயமாக மழை பெய்கின்ற ஒரு நாளாகும். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அதிசயம் நிகழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • சாதாரண மழையின் அமிலத்தன்மை pH 5.6 ஆகும். இதனைவிடவும் pH மட்டம் குறைவடைகின்றபோது அது அமில மழையாகும். pH மட்டம் 5.5 ஆன மழையானது பக்றீரியாக்களைக் கொல்கின்றது, ஆனால் pH மட்டம் 4.5 ஆன மழையானது பூச்சிகள், மீன்கள், ஈரூடகவாழிகள் ஆகியவற்றினைக் கொல்கின்றது.
  • பொட்ஸ்வானா நாட்டின் நாணயம் "Pula" ஆகும். செட்ஸ்வானா மொழியில் "Pula"  என்பதன் அர்த்தம் "மழை" என்பதாகும். ஏனெனில் பொட்ஸ்வானா நாட்டில் மழை என்பது மிக அரிதான ஒன்றாகும்.
***


Sunday, October 28, 2012

குடைகளின் வரலாறு......

மழைக்காலம் மெல்ல மெல்லதாக ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இதனால் குடைகள் அத்தியாவசியமாகிவிட்டது.  நாம் பயன்படுத்துகின்ற குடைகளின் வரலாற்றினை சற்று ஆராய்கின்றபோது.....


மக்கள், வெயிலிருந்து பாதுகாப்பினை பெற்றுக்கொள்வதற்காகவே உலகத்தில் குடைகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு 11ம் நூற்றாண்டளவில் சீனா நாட்டிலேயே குடைகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் உண்டு. மரக்கிளைகளினைப் பயன்படுத்தியே இந்தக் குடைகள் உருவாக்கப்பட்டன.
குடைகள், ஐரோப்பாவில் 15ம் நூற்றாண்டளவிலேயே பிரபல்யம் அடையத்தொடங்கின. குறிப்பாக பெண்கள் மத்தியிலாகும்.
17ம் நூற்றாண்டிற்கு பிற்பாடே ஆண்கள் மத்தியில் குடைகள் பிரபல்யம் அடையத்தொடங்கின.

பெயர் வரக் காரணம் என்ன?.....
குடையினை ஆங்கிலத்தில் "அம்பிரல்லா"(Umbrella) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா?.......


"அம்ப்ரா" (Umbra) என்ற லத்தீன் வார்த்தையில் இருந்துதான் "அம்பிரல்லா" (Umbrella) என்ற சொல் உருவாகியது.  "அம்பிரல்லா" என்றால் நிழல் என்று அர்த்தம்.

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪

உங்களுக்குத் தெரியுமா?.....


17ம் நூற்றாண்டளவில் ஐக்கிய ராச்சியத்தில் மழை தொடர்பிலான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருந்தது. மழை தொடர்பாக முன்னறிவிப்பு செய்பவரின் கணிப்பு பிழைக்குமாயின் அவருக்கு தூக்குத் தண்டனைதான் முடிவு.

***
Blog Widget by LinkWithin