Showing posts with label பெயர் வரக் காரணம் என்ன?. Show all posts
Showing posts with label பெயர் வரக் காரணம் என்ன?. Show all posts

Sunday, October 28, 2012

குடைகளின் வரலாறு......

மழைக்காலம் மெல்ல மெல்லதாக ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இதனால் குடைகள் அத்தியாவசியமாகிவிட்டது.  நாம் பயன்படுத்துகின்ற குடைகளின் வரலாற்றினை சற்று ஆராய்கின்றபோது.....


மக்கள், வெயிலிருந்து பாதுகாப்பினை பெற்றுக்கொள்வதற்காகவே உலகத்தில் குடைகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு 11ம் நூற்றாண்டளவில் சீனா நாட்டிலேயே குடைகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் உண்டு. மரக்கிளைகளினைப் பயன்படுத்தியே இந்தக் குடைகள் உருவாக்கப்பட்டன.
குடைகள், ஐரோப்பாவில் 15ம் நூற்றாண்டளவிலேயே பிரபல்யம் அடையத்தொடங்கின. குறிப்பாக பெண்கள் மத்தியிலாகும்.
17ம் நூற்றாண்டிற்கு பிற்பாடே ஆண்கள் மத்தியில் குடைகள் பிரபல்யம் அடையத்தொடங்கின.

பெயர் வரக் காரணம் என்ன?.....
குடையினை ஆங்கிலத்தில் "அம்பிரல்லா"(Umbrella) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா?.......


"அம்ப்ரா" (Umbra) என்ற லத்தீன் வார்த்தையில் இருந்துதான் "அம்பிரல்லா" (Umbrella) என்ற சொல் உருவாகியது.  "அம்பிரல்லா" என்றால் நிழல் என்று அர்த்தம்.

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪

உங்களுக்குத் தெரியுமா?.....


17ம் நூற்றாண்டளவில் ஐக்கிய ராச்சியத்தில் மழை தொடர்பிலான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருந்தது. மழை தொடர்பாக முன்னறிவிப்பு செய்பவரின் கணிப்பு பிழைக்குமாயின் அவருக்கு தூக்குத் தண்டனைதான் முடிவு.

***
Blog Widget by LinkWithin