Showing posts with label சிவபெருமான். Show all posts
Showing posts with label சிவபெருமான். Show all posts

Sunday, September 9, 2012

உலகில் உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலை

உலகில் மிகவும் உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலை உலகிலுள்ள ஒரே இந்துமத நாடாகிய நேபாள நாட்டின் காத்மண்டு நகரில் அமைந்துள்ளது. 143அடி உயரமுடைய இந்த திருவுருவச் சிலையானது 2010ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.



நேபாள நாட்டின் வக்ராபுர் மாவட்டத்தில் , கைலாஷ்குட் மலையில் அமைந்துள்ள இந்த திருவுருவச் சிலைக்கான எண்ணக் கருவினை வடிவமைத்தவர் இந்திய பொறியியலாளர் மதுரம் வர்மா ஆவார். இந்த திருவுருவச் சிலைக்கான நிதி உதவியினை வழங்கியவர் நேபாள நாட்டில் வதியும் இந்தியரான கமல் ஜெயின் என்பவராவார்.

♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪

அறிந்து கொள்வோம் -*- 

பிரம்பணன் என்றழைக்கப்படுகின்ற புராதன இந்து ஆலயமானது இந்தோனேசிய நாட்டின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ளது. கிபி 850 ஆண்டுக்கு முந்தைய வரலாற்றினை உடைய இந்த ஆலயமானது 8 பிரதான கோவில்களையும், அதனை சுற்றி 250 சிறிய கோவில்களையும் கொண்டமைந்துள்ளது.





இந்த ஆலயத்தின் பெரும்பாலான சுவர்கள் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் அவதாரங்கள் , ஆஞ்சநேயரின் சாகசங்கள் , இராமாயண காப்பிய அம்சங்களினையும், ஏனைய புராதன கதைகளினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.


***
Blog Widget by LinkWithin