Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, May 4, 2013

நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் இந்திய சினிமா….!


மே 03, 2013 அன்று இந்தியச் சினிமா தனது நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடியது.  அந்தவகையில் இந்தியச் சினிமாவுடன் தொடர்புடைய சுவாரஷ்சியமான தகவல்கள் சில உங்களுக்காக….!

மே 03, 1913 அன்று இந்திய சினிமாவின் முதல் முழு நீளத் திரைப்படமான "ராஜா ஹரிச்சந்திரா" வெளியாகியது. இந்திய திரைப்படத் துறையின் தந்தையென அழைக்கப்படும் தாதாசாஹேப் பால்கேயின் இயக்கத்தில் வெளியாகிய இத்திரைப்படமானது பேசாப் படமென்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியச் சினிமாவின் முதல் பேசும் திரைப்படம் "ஆலம் ஆரா" ஆகும், இத்திரைப்படம் அர்டேஷிரா மார்வன் இராணி அவர்களின் இயக்கத்தில் மார்ச் 14, 1931 இல் வெளியாகியது.

இந்தியச் சினிமாவின் முதல் வர்ணத் திரைப்படம் "கிசன் கன்யா" ஆகும், இத்திரைப்படம் மோடி கிட்வானி அவர்களின் இயக்கத்தில் 1937 இல் வெளியாகியது.


இந்தியச் சினிமாவில் அதிக பாடல்களைக் கொண்ட திரைப்படம் "இந்திர சபா" ஆகும், 71 பாடல்களைக் கொண்ட இத்திரைப்படம் ஜே. மதன் அவர்களின் இயக்கத்தில் 1932 இல் வெளியாகியது.

இந்தியச் சினிமாவின் மிக நீளமான திரைப்படம் "எல்ஓசி : கார்கில்" ஆகும், இத்திரைப்படம்  04 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் நீளமானதாம்.

இந்தியச் சினிமாவின் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் "தில்வாலே துல்ஹனியா லே ஜயங்கே" ஆகும், அக்டோபர் 20, 1955 வெளியாகிய இத்திரைப்படம் 700 வாரங்களைக் கடந்து ஓடியதாம்.

இந்தியச் சினிமாவில், முதன்முதலில் (1920) சினிமா சுவரொட்டிகள் மூலம் தனது திரைப்படத்தினை விளம்பரப்படுத்தியவர் பாவுராவ் பெயிண்டர் ஆவார். இவர் "வத்சலா ஹரன்" என்கின்ற தன்னுடைய திரைப்படத்திற்காகவே சினிமா சுவரொட்டிகளை வெளியிட்டார்.

இந்தியச் சினிமாவில், முதன்முதலில் (1920) சினிமா சுவரொட்டிகள் மூலம் தனது திரைப்படத்தினை விளம்பரப்படுத்தியவர் பாவுராவ் பெயிண்டர் ஆவார். இவர் "வத்சலா ஹரன்" என்கின்ற தன்னுடைய திரைப்படத்திற்காகவே சினிமா சுவரொட்டிகளை வெளியிட்டார்.

இந்தியச் சினிமா வரலாற்றில், சர்வதேச திரைப்பட விழாவில் (வெனிஸ்) திரையிடப்பட்ட (1937) முதல் திரைப்படம் "சண்ட் துகரம்" ஆகும்.

***

Tuesday, March 9, 2010

தெரிந்த ஒஸ்காரில் தெரியாதவை.......

*உலகளவில் சினிமாத் துறையில் பிரசித்தி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற உன்னதமான விருதாக ஒஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. 1929ம் ஆண்டிலிருந்து 1939ம் ஆண்டுவரை வழங்கப்பட்ட விருதானது அக்கடமி விருதுகள் [Academy Awards] என்றே அழைக்கப்பட்டது. பின்னரே இது ஒஸ்கார்[ Oscar] விருதாக மாற்றம் பெற்றது.

*1வது அக்கடமி விருது வழங்கும் நிகழ்வானது The Blossom Room of The Hollywood Roosevelt Hotel - Los Angels இல் 1929ம் ஆண்டு நடைபெற்றது.

*1934ம் ஆண்டு நடைபெற்ற 6வது அக்கடமி விருது வழங்கும் நிகழ்வில் மிகச் சிறந்த நடிகருக்கான 1வது விருதினை கத்தரின் ஹெப்வேர்ன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*ஒஸ்கார் நிகழ்வின் போது வழங்கப்படும் விருதின் நிறையானது 7 பவுண்ட்ஸ்கள் [3.1752kg] ஆகும்.



*அதிகளவு ஒஸ்கார் விருதுகளை பெற்ற திரைப்படங்களாக - The Lord of The Rings : The Return of The King ,Titanic, Ben Hur விளங்குகின்றது. இவை மொத்தமாக 11 விருதுகளை அள்ளிக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

*கிகி, தி லொஸ்ட் எம்பர் ஆகிய திரைப்படங்கள் 9 ஒஸ்கார் விருதுகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*முதன்முதலாக முழு உருவ ஒஸ்கார் சிலையினைப் பெற்றவராக வால்ட் டிஸ்னி விளங்குகின்றார். 1942ம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் போது வால்ட் டிஸ்னி முழு உருவ ஒஸ்கார் சிலையினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*1931ம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் போது சம நிலையில் முடிந்த மிகச் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதினைப் பெற்றவர்கள் வாலஸ் பெர்ரி மற்றும் பிரெட்ரிக் மார்க் ஆகியோராவர்.

*தொடர்ந்து இரு வருடங்கள் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது பெற்ற நடிகராக, 1993ல் பிலடெல்பியா & 1994ல் பாரஸ்ட் காம்ப் ஆகிய திரைப்படங்களில் நடித்த டாம் ஹேங்ஸ் விளங்குகின்றார்.

*மூன்று முறை ஒஸ்கார் விருது பெற்ற நடிகராக ஜாக்கிஸ் ஒய்ஸ் கோல்டியூ விளங்குகின்றார். இவர் 1956,1959, 1964ம் ஆண்டுகளில் ஒஸ்கார் விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*குறைந்த வயதில் ஒஸ்கார் விருது பெற்றவராக நடிகை ஹெர்லி டெம்பிள் விளங்குகின்றார். இவர் 6 வயதில் ஒஸ்கார் விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*ஒஸ்கார் விருது பெற்ற முதலாவது வர்ணத்திரைப்படம்- Gone With The Wind

*ஒஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய திரைப்படமாக தெய்வமகன் விளங்குகின்றது. [1969ல் - சிவாஜி நடித்தது]

*ஒஸ்கார் விருது பெற்ற மனிதரல்லாத முதல் கதாபாத்திரம் [கார்ட்டூன்] மிக்கி மவுஸ் ஆகும்.



*இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வுகளின் போது வெற்றி பெற்றவர்களுக்கு பிளாஸ்டிக்கிலான ஒஸ்கார் சிலைகளே வழங்கப்பட்டன. காரணம் உலக மகாயுத்தத்தின் போது உலோகங்களுக்கு நிலவிய அருமைத் தன்மையே காரணமாகும்.

*ஒஸ்கார் விருது பெற்ற முதல் பெண் இயக்குனராக Kathryn Bingelow விளங்குகின்றார். 2010ம் ஆண்டு நடைபெற்ற 82வது ஒஸ்கார் நிகழ்வின் போது தான் இயக்கிய The Hurt Locker திரைப்படத்துக்காக விருது பெற்றார்.



*ஒஸ்கார் விருது பெற்ற முதல் தமிழராகவும் , முதல் இந்திய இசையமைப்பாளராகவும் .ஆர்.ரஹ்மான் விளங்குகின்றார்.




***
Blog Widget by LinkWithin