Monday, May 16, 2011

கலண்டரின் தனது பெயரினையும், தனது அன்னையின் பெயரினையும் சேர்த்துக்கொண்ட ஜனாதிபதி.......



துர்க்மெனிஸ்தான் நாட்டினை ஆட்சிசெய்த ஜனாதிபதி சபர்முராட் நியாஸோவ் (19 பெப்ரவரி 1940 - 21 டிசம்பர் 2006) உலகத்தில் ஆட்சிசெய்த சர்வாதிகாரிகளில் சிறப்பிடம் பெறுகின்றார். இவரின் ஆட்சிக்காலத்தில் துர்க்மெனிஸ்தான் நாட்டில் எந்தவிதமான தேவாலயங்களும் காணப்படவில்லை. ஏனெனில் இவரின் கட்டளையின் பிரகாரம் தேவாலயங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

ஒவ்வொருவருடமும் தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துகொள்வாராம், ஆனாலும் அந்நாட்டின் காங்கிரஸ் சபையானது இவரிற்கு ஆட்சியதிகாரத்தினை தொடர்வதற்கு அனுமதிவழங்குமாம். கலண்டரில் ஜனவரி மாதத்திற்குப் பதிலாக இவர் தனது பெயரான "துர்க்மென்வாஷி"யினை இட்டுக்கொண்டதுடன், ஏப்ரல் மாதத்திற்குப் பதிலாக தனது அன்னையாரின் பெயரினை இணைத்துக்கொண்டார். இவர் தன்னைத்தானே துர்க்மெனிஸ்தான் தேசத்தின் தந்தையாக பிரகடனப்படுத்திக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .


*****-------*******--------------**********

படுதோல்வியினைத் தழுவிய கருணாநிதி.....



தமிழக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஜெயலலிதா தலைமையிலான அ.திமு.க ஆட்சியதிகாரத்தினை கைப்பற்றிக்கொண்டது. கலைஞர் தலைமையிலான தி.மு.க படுதோல்வியினை தழுவிக்கொண்டது.

ஜெயா தமிழக முதல்வராக இன்று பதவி ஏற்கின்றார் .


***

வாசித்துவிட்டீர்களா.....?

தமது தங்கப் பதக்கங்களுக்கு பாதுகாப்புத் தேடிய நோபல் பரிசு வெற்றியாளர்கள்........

***

No comments:

Blog Widget by LinkWithin