Monday, February 8, 2010

புற்று நோயிலிருந்து பாதுகாக்கும் பசு நெய்



புரதான காலத்திலிருந்து இந்துக்களுடைய வாழ்வில் பசு நெய்யானது ஒரு இன்றியமையாத வகிபாகத்தினை வகிக்கின்றது எனலாம்.

அந்த வகையில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் பசு நெய்யானது பல்வேறு நோய்களின் பாதிப்புக்களிருந்து பாதுகாப்பினை அளிக்கின்றதென கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவின் தேசிய பால்பொருள் சங்கத்தினால் இந்த ஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வின் பிரகாரம் பசு நெய்யானது புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளினை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளினை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது மருத்துவர் B.K. கன்சல் மற்றும் அவரது இரண்டு உதவியாளர்களினால் 6 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அவர்களின் ஆய்வின் பிரகாரம் பசு நெய்யானது, துரித கதியில் புற்று நோயானது கலங்களிலிருந்து மேலதிகமாக விருத்தியடைவதனை குறைப்பதாக கண்டறிந்துள்ளனர்.

மருத்துவர் B.K. கன்சல் மற்றும் அவரது குழுவினர் இரண்டு வித்தியாசமான குழாமாக எலிகளினை பிரித்து அவற்றுக்கு DMH மருந்தினையும் (இது புற்று நோயினை விருத்தி செய்யும்) கொடுத்தனர். பின்னர் ஒரு குழாமிலுள்ள எலிகளுக்கு சோயா அவரை எண்ணெய்யும், மற்றைய குழாமிலுள்ள எலிகளுக்கு பசு நெய்யும் நாளாந்தம் சமனான அளவிலும் வழங்கப்பட்டது. பின்னர் ஆய்வு செய்த போது இரண்டு குழாமிலுள்ள எலிகளிலும், துரித கதியில் புற்று நோயானது கலங்களுக்கு விருத்தியடைவதானது வேறுபட்ட வகையில் காணப்பட்டது.

சோயா அவரை எண்ணெய் வழங்கப்பட்ட எலிகளுக்கு துரித கதியில் புற்று நோயானது விருத்தியடைவது 65.4% ஆக பதிவாகியிருந்தது. அதேசமயம் பசு நெய் வழங்கப்பட்ட எலிகளுக்கு துரித கதியில் புற்று நோயானது விருத்தியடைவது 26.6% ஆக பதிவாகியிருந்தது. அதேவேளை இந்தக் குழாமில் காணப்பட்ட எலிகளுக்கு கட்டிகளானது சிறிய அளவில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

***

3 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்ல தகவல்...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பரே நன்றிகள் .

ரோஸ்விக் said...

அறிந்துகொள்ளவேண்டிய தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

Blog Widget by LinkWithin