Friday, March 21, 2014

மார்ச் மாதம் 21ம் திகதி -> உலக வன நாள்


புவியின் "நுரையீரல்கள்" என அழைக்கப்படும் காடுகள், இன்று மனித செயற்பாட்டின் காரணமாக அழிவடைந்துவருகின்றன. இதன் காரணமாக புவியின் வெப்பநிலை அதிகரித்து பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றோம்.


வனங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மார்ச் மாதம் 21ம் திகதி உலக வன நாளாக கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், உலக வன வளங்கள் தொடர்பிலான சுவையான தகவல்கள்…!

a உலகில் 4 பில்லியன் ஹெக்டேயர்கள் நிலப்பரப்பிற்கு காடுகள் காணப்படுகின்றன. அதாவது, புவி மேற்பரப்பில்  31% வகிபாகத்திற்கு காடுகள் சூழ்ந்துள்ளன.

a உலகில் அதிக பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம் தென் அமெரிக்க கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் அரைவாசிக்கும் அதிகமான பங்கிற்கு இங்கே காடுகள் காணப்படுகின்றன.


a உலகில் குறைந்த பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம் ஆசியாக் கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் 20% பங்கிற்கு இங்கே காடுகள் காணப்படுகின்றன.

a உலகில் அதிகளவில் வன வளங்களைக் கொண்ட நாடுகளாவன; ரஷ்யா, பிரேசில், கனடா, ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆகியனவாகும். உலகில் அரைவாசிக்கும் அதிகமான காடுகள் இந்த நாடுகளிலேயே காணப்படுகின்றன.

a உலக வனங்களில் 20% ஆனவை ரஷ்யாவிலேயே காணப்படுகின்றன.

a புவி மேற்பரப்பில்  6% ஆன வகிபாகத்திற்கே ஈரவலயக் காடுகள் சூழ்ந்துள்ளன. ஆனால், உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கினங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை  ஈரவலயக் காடுகளிலேயே காணப்படுகின்றன.


a அந்தாட்டிக்கா கண்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து கண்டங்களிலும்  ஈரவலயக் காடுகள் காணப்படுகின்றன.

a தென் அமெரிக்க ஈரவலயக் காடுகளில் 2,000 இற்கும் அதிகமான வண்ணத்துப்பூச்சி இனங்கள் காணப்படுகின்றனவாம்.

a மத்திய ஆபிரிக்க ஈரவலயக் காடுகளில் 8,000 இற்கும் அதிகமான தாவர இனங்கள் காணப்படுகின்றனவாம்.


a உலகில் ஒவ்வொரு செக்கனுக்கும், கால்பந்தாட்ட மைதானத்தின் அளவான ஈரவலயக் காடுகள் அழிக்கப்படுகின்றன.

a உலகில் வருடாந்தம் 36 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பிலான இயற்கை காடுகள் அழிக்கப்படுகின்றன. இது இங்கிலாந்து நாட்டின் பரப்பளவினை விடவும் பெரிதாகும்.

a காகிதாதி உற்பத்திற்காக உலகில் 50% ஆன மரங்கள் அழிக்கப்படுகின்றன. (World Resource Institute)

a உலகில் 80% இற்கும் அதிகமான காட்டுத் தீ மனிதனாலேயே உருவாக்கப்படுகின்றன.


a உலகத்திற்கு தேவையான 20% ஆன ஒட்சிசன் அமேசன் ஈரவலயக் காடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது.

a உலகில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது வாழ்வாரத்திற்கு காடுகளிலேயே தங்கியுள்ளனர்.

a உலகில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காடுகளிலே வாழ்கின்றனர்.

a உலக சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினர் தமது எரிபொருள் தேவையினை விறகுகள் மூலமே பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

***

Sunday, February 23, 2014

உலகில் ஆட்சியிலிருக்கும் வயது கூடிய ஜனாதிபதிகள் …!


1980ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து சிம்பாப்வே நாட்டினை ஆட்சி செய்துவருகின்ற  றொபட் முகாபே, கடந்த பெப்ரவரி 21ம் திகதி தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆபிரிக்காவின் மிக வயதான ஆட்சியாளராக றொபட் முகாபே விளங்குகின்றார்.

அந்தவகையில், தற்சமயம் உலகில் ஆட்சியிலிருக்கும் வயது கூடிய ஜனாதிபதிகள் வருமாறு;

aஷிமோன் பெரஸ் _ 90 வயது 06 மாதங்கள் _ இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியாக 2007ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.


aறொபட் முகாபே _ 90 வயது _ சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதியாக 1980ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.


aஜோர்ஜியோ நபோலிரனோ _ 88 வயது _ இத்தாலி நாட்டின் ஜனாதிபதியாக 2006ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.



aராவுல் காஸ்ட்ரோ _ 82 வயது _ கியூபா நாட்டின் ஜனாதிபதியாக 2008ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.


aபெளல் பியா _ 81 வயது _ கமரூன் நாட்டின் ஜனாதிபதியாக 1982ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.


aமம்நூன் ஹூசைன் _ 73 வயது _ பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து பதவி வகிக்கின்றார்.


aரியோடோரோ  ஒபியங்கோ மொபாசோகோ _ 71 வயது ஈகுவாடோரியல் கினியா  நாட்டின் ஜனாதிபதியாக 1979ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.

ஆபிரிக்கா கண்டத்தில் மிக அதிக ஆண்டுகளாக ஆட்சி புரிகின்ற ஜனாதிபதி இவரேயாவார்.


உங்களுக்குத் தெரியுமா?...

தனது தந்தையார் 6ம் ஜோர்ஜ் மன்னரின் மறைவுக்குப் பின்னர் 1953ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரித்தானியா மகாராணி 2ம் எலிசபெத் அவர்களுக்கு தற்போது 87 வயதாகின்றது.


1,000 ஆண்டுகால பிரித்தானிய முடியாட்சி வரலாற்றில் விக்டோரியா மகாராணிக்கு அடுத்து அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர் என்கின்ற பெருமை இவரையே சாரும். விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் ஆட்சி செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

2012ம் ஆண்டு பிரித்தானியா மகாராணி 2ம் எலிசபெத், தனது ஆட்சியின்  வைரவிழாவினை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.

***
Blog Widget by LinkWithin