Showing posts with label சுவாமி விவேகானந்தர். Show all posts
Showing posts with label சுவாமி விவேகானந்தர். Show all posts

Tuesday, July 27, 2010

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்




பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான். Θ

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. ₪

தூய்மை,பொறுமை,விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும். ◙

மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி. ♦

உன்னால் ஒருவருக்கும் உதவிசெய்ய முடியாது. மாறாக, சேவை செய்யத்தான் முடியும். Θ

அச்சமே மரணம், அச்சத்திற்கு அப்பால் நீ போக வேண்டும். ₪

இலட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும். ◙

வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது தேவை. ♦

சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டிவைக்க முடியும். இந்த உண்மையை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.≈

♥ அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்தே தீரும். ♥

***
Blog Widget by LinkWithin