Tuesday, May 28, 2013

மே மாதம் 28ம் திகதி ⊷ உலக பசி தினம்

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 28ம் திகதி உலக பசி தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 

உலகில் பசியினால் வாடுவோர் தொடர்பிலான தகவல்கள் சில…!


உலக மக்களில் 900 மில்லியன் முதல் 1 பில்லியன் வரையிலானோர் பசி, பட்டினியின் பிடியில் வாழ்வதாக ஐ.நா அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது உலக மக்களில்(13.1 சதவீதமானோர்) எட்டுப் பேரில் ஒருவர் பசி, பட்டினியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளொன்றில் உள்ளெடுக்க வேண்டியதென பரிந்துரைக்கப்பட்டுள்ள 2100 கலோரியினை விடவும் குறைவான போசணையினை உட்கொள்கின்றனர்.



எயிட்ஸ், மலேரியா, சயரோகம் ஆகியவை காரணமாக வருடாந்தம் இறப்போரினை விடவும் பசி, பட்டினியின் காரணமாக இறப்போரே அதிகமாகும்.  உலகில் நாளாந்தம் 25000+ பேர் பசி, பட்டினி, வறுமையின் காரணமாக இறக்கின்றனர்.

2010ம் ஆண்டு பசி, பட்டினியின் காரணமாக 7.6 மில்லியன் குழந்தைகள் அதாவது நாளொன்றுக்கு 20,000+ குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் பசியின் பிடியில் வாழ்வோரில் 98 சதவீதமானோர் குறைஅபிவிருத்தி நாடுகளிலேயே வாழ்கின்றனர். உலகில், பசியானது தாயிலிருந்து மகவுக்கு கடத்தப்படுகின்ற வழிமுறை தொடர்கின்றது. வருடாந்தம் 17 மில்லியன் குழந்தைகள் நிறை குறைந்து பிறக்கின்றனர், ஏனெனில் தாய்மார் போசணைக்குறைப்பாடு கொண்டவர்களாக காணப்படுகின்றமையாலாகும்.

அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில், 15 குழந்தைகளில் ஒன்று பசியின் காரணமாகவே உயிரிழக்கின்றது.

உலகில் பசியின் பிடியில் வாழ்வோரில் 62.4 சதவீதமானோர் ஆசியா/தென் பசுபிக் நாடுகளிலேயே வாழ்கின்றனர்.

ஆசியா மற்றும் ஆபிரிக்க குழந்தைகளில் 20 சதவீதமானோர் தமது வயதிற்கேற்ற உடல் நிறையினை கொண்டிருக்கவில்லை.

2012ம் ஆண்டுக்கான உலக பசி சுட்டெண்ணின்(Global Hunger Index) பிரகாரம் பசி, பட்டினியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாவன;
1) புரூண்டி                                  37.1                          
2) எதித்திரியா                             34.4
3) ஹெய்ட்டி                               30.8                         
4) எதியோப்பியா                        28.7
5) சாட்                                       28.3                          
6) கிழக்கு தீமோர்                       27.3
7) மத்திய ஆபிரிக்க குடியரசு       27.3          
8) கொமொரஸ்                          25.8
9) சியராலியோன்                      24.7                         
10) யெமன்                               24.3

15) இந்தியா                               22.9                        
43) இலங்கை                           14.4



***

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனையளிக்கும் தகவல்கள்...

Anonymous said...

இந்தியாவில் திருமணம் என்ற பெயரில் மட்டும் பல கோடி டன் அரிசி வீணாக்கப்படுகிறது..

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ...

Blog Widget by LinkWithin