அண்மையாக
நாட்களில் என்னால் புகைப்படமாக்கப்பட்ட சில காட்சிகள் உங்களினை கொள்ளைகொள்ள
மனங்கொத்தி பறவையாக இதோ........
உங்கள் எண்ணங்களினையும் அப்படியே
பதிந்துவிடுங்கள்..............
பாணமை
சித்திவிநாயகர் ஆலயமானது நீண்ட வரலாற்றையும், பாரம்பரியத்தையும் கொண்ட்து. இந்த
ஆலயத்தின் பழமையினைப் போன்று அங்கு வீற்றிருந்து அருள் பாலிக்கும் விநாயகப்
பெருமானும் மிகவும் பழமையானவர் என்பதுடன் இப்பகுதியிலுள்ள தமிழ்மக்களின்
வரலாற்றுப் பொக்கிஷமாகவும் இது உள்ளது. அண்மையில் இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம்
நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய
சிறப்புக்களைகொண்ட ஆலய விநாயக விக்கிரகத்தினை குறிப்பிட்ட சில பெரும்பான்மைக்
குழுவினர் வேறிடத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக நேற்றைய தினம்(6/8/2012) அகற்றிச் சென்றுள்ளனர் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
“♠ கடவுள் ஏன்
கல்லானார்
மனம் கல்லாய்ப்போன
மனிதர்களாளேய்.......!!! ♠”
(கடந்த ஜூன் மாத இறுதியில்
உகந்தை செல்லும்போது விநாயகப் பெருமானை வழிபட்டுச் சென்ற வேளை என் கமராவினுள்
உள்வாங்கிக் கொண்ட பாணமை சித்திவிநாயகர் ஆலய முகப்புத் தோற்றத்தினை படத்தில்
காண்கின்றீர்கள்)
***



































