Tuesday, August 19, 2014

அனைவரையும் கவர்ந்த புகைப்படக் கலை …!

வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் உலக புகைப்பட தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.


Louis Daguerre அவர்களினால் ஒளிப்படமெடுத்தல் செயற்பாட்டு அபிவிருத்தியில் துணைபுரிந்த Daguerreotype கண்டுபிடிக்கப்பட்டதே உலக புகைப்பட தினம் தோற்றம்பெறுவதற்கு காரணமாக விளங்கியது.

ஜனவரி 9, 1839ம் ஆண்டு பிரெஞ்சு விஞ்ஞான அறிவியற் கழகமானது Daguerreotype இனது செயற்பாடுகளை அறிவித்தது. சில மாதங்களின் பின்னர் ஆகஸ்ட் 19, 1839ம் ஆண்டு இந்தக் கண்டுபிடிப்பினை உலகுக்கான இலவசப்பொருளாக பிரெஞ்சு அரசாங்கமானது அறிவித்தது.

எனது புகைப்பட ஆர்வத்தினை Logan Photography Facebook பக்கத்தில் பகிர்ந்துவருகின்றேன். Logan Photography பக்கத்தில் இணைந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.


எனது சில Klick’s …!











உலக புகைப்பட தின வாழ்த்துக்கள்…!


***

Tuesday, August 12, 2014

ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி – உலக யானை தினம்

உலகளாவியரீதியில் யானைகளினை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலக யானை தினம் கொண்டாடப்படுகின்றது.


உலகளாவியரீதியில் யானைகள் தத்தங்களுக்காகவும், ஏனைய செயற்பாடுகளுக்காகவும் கொல்லப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன, மேலும்  மனிதன் - யானை மோதல்களின் காரணமாகவும் யானைகள் கொல்லப்படும் நிகழ்வுகளும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.


www.facebook.com/kkloganphotography

1980ம் ஆண்டளவில் ஆபிரிக்காவில் 1.2 மில்லியன் யானைகள்  வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் தற்சமயம் அண்ணளவாக 430,000 யானைகளே வாழ்வதாக கணிப்பிடப்படப்பட்டுள்ளது.  

அந்தவகையில், யானைகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!
  • தரைவாழ் விலங்கினங்களில் மிகப்பெரிய விலங்கினமான யானைகளில் ஆபிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்ற இரண்டு வகையினங்கள் உண்டு. ஆசிய யானைகளை விடவும் ஆபிரிக்க யானைகள் பெரியவையாகும்.
  • ஆபிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டு இனங்களுக்கும் கொம்புகள் உண்டு. ஆனால் ஆசிய யானைகளில் ஆண் இனத்திற்கு மாத்திரமே கொம்பு உண்டு. யானைகள் தனது கொம்பினை நிலத்தினை தோண்டுவதற்கும், உணவினை கண்டறிவதற்கும் பயன்படுத்துகின்றன.

  • தரைவாழ் உயிரினங்களில் மிகப்பெரிய மூளையினைக் கொண்டவையாக யானைகள் விளக்குகின்றன. இதன் நிறை 5 கிலோகிராமிலும் அதிகமாகும்.
  • யானைகள் பெரும்பாலும் நின்றுகொண்டே தூங்கும் தன்மை கொண்டவையாகும். யானை தூங்கும் போது அதன் எடை முழுவதையும் ஒவ்வொரு காலுக்கும் மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளும்.
  • விலங்கினங்களில் மிகநீண்ட கர்ப்ப காலத்தைக் கொண்ட விலங்கினம் யானை ஆகும். பெண் யானைகள் 22 மாதங்களின் பின் குட்டியினை பிரசவிக்கின்றது.
  • யானையின் தும்பிக்கையில் 40,000 இற்கும் மேற்பட்ட தசைநார்கள் உண்டு.
  • யானைகளுக்கு 24 பற்கள் உண்டு.
  • யானைகள் தெளிவான கண்பார்வையினைக் கொண்டிருக்காவிடினும், அவை மிகச்சிறந்த மோப்ப சக்தியினையும், கேட்டல் சக்தியினையும் கொண்டவையாகும்.
  • பாலூட்டிகளில் துள்ளிக் குதிக்க முடியாத ஒரே உயிரினம் யானை ஆகும்.
  • யானை ஒரே நேரத்தில் தனது தும்பிக்கையினால் 7.5 லீற்றர் நீரினை உறிஞ்சிக்கொள்ள முடியும்.
  • ஐவரி கோஸ்ட், கென்யா, லாவோஸ், மொசாம்பிக், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு யானை ஆகும்.

"லோகநாதனின் பகிர்வுகள்" பக்கத்தினை Facebookஇல் தொடர…!

***

Sunday, August 10, 2014

ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி – உலக சிங்க தினம்


உலகளாவியரீதியில் அருகிவருகின்ற உயிரனமாக IUCN அமையத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ள சிங்கங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலக சிங்க தினம் கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், சிங்கங்கள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

  • சிங்கங்களின் கர்ஜனை ஓசை 5 மைல்களுக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாகும்.
  • சிங்கங்கள் நடக்கின்றபோது அவற்றின் குதிகால்கள் தரையில் படுவதில்லை.
  • சிங்கங்கள் ஒரு நாளில் 16 – 20 மணித்தியாலங்களை தூக்கத்திலும், ஓய்விலுமே செலவிடுகின்றன.
  • சிங்கங்கள் மிகச்சிறப்பான இரவு நேர பார்வையினைக் கொண்டவையாகும். இதன் காரணமாக அவை சில வேட்டையாடுதல்களை இரவு நேரத்திலேயே மேற்கொள்கின்றன.
  • ஆண் சிங்கங்களை விடவும், பெண் சிங்கங்களே பெரும்பாலான வேட்டையாடல்களை மேற்கொள்கின்றன. ஆண் சிங்கங்கள் தனது ஆட்சிபுலத்துக்குரிய பிராந்தியத்தினையும், தனது குட்டிகளினையும் பாதுகாப்பதிலேயே தனது நேரத்தினை செலவிடுகின்றது.

  • பெரிய பூனை இனங்களில் சிங்கங்கள் மாத்திரமே சமூகவியலானவையாகும். சிங்கங்கள் வழமையில் குழுக்களாகவே வாழ்கின்ற இயல்பினைக் கொண்டவையாகும்.  ரு குழுவில் அண்ணளவாக 30 வரையான சிங்கங்கள் ஒன்றாகவே வாழ்கின்றன.

  • சிங்கங்கள் மணித்தியாலத்திற்கு 81 கிலோமீற்றர் (50 mph) வேகத்தில் ஓடக்கூடியவையாகும்.

  • சிங்கங்கள் 5-6 நாட்கள் வரையில் நீரின்றி தனது காலத்தினை கழிக்கக்கூடியவையாகும்.

  • தனது உடற் பருமனுடன் ஒப்பிடுகின்றபோது மிகச்சிறிய இதயத்தினைக் கொண்டுள்ள விலங்கினம் சிங்கம் ஆகும். சிங்கத்தின் இதயமானது, அதன் உடற்பருமனில் 1% இலும் குறைந்த வகிபாகத்தினையே வகிக்கின்றது.

  • ஒரேஅமர்வில் சிங்கங்கள் 30 kg இற்கும் இறைச்சியினை உட்கொள்ளும் ஆற்றலைக் கொண்டவையாகும்.

  • உலகில் மிகப்பிரபலமான தேசிய விலங்கு என்கின்ற பெருமைக்குரிய விலங்கினம் சிங்கம் ஆகும்.  ஆர்மேனியா, நெதர்லாந்து, பெல்ஜியம், , பல்கேரியா, லக்ஸ்சம்பேர்க், இங்கிலாந்து, எதியோப்பியா, ஈரான், கென்யா, லைபீரியா, லிபியா, மஸிடோனியா, மொராக்கோ  ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு சிங்கம் ஆகும்.

 Y உங்களுக்குத் தெரியுமா - 1972ம் ஆண்டுவரை இந்தியாவின் தேசிய விலங்கினமாக சிங்கம் விளங்கியது.

"லோகநாதனின் பகிர்வுகள்" பக்கத்தினை Facebookஇல் தொடர…!


***
Blog Widget by LinkWithin