Tuesday, September 24, 2013

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேரோட்டம் - புகைப்படப் பகிர்வு

மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை அருள்மிகு திருத்தான்தோன்-- றீஸ்வரர் தேவஸ்தான  வருடாந்த தேரோட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22/09/2013) மாலைவேளை இடம்பெற்றது.

கல் நந்தி எழுந்த புல்லுண்டு சாணமிட்டு வெள்ளையர்களை புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப் பெருமை மிக்க கிழக்கிலே தேரோடும் ஆலயமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் விளங்குகின்றது .

வெள்ளையர்களால் ஈழத்தில் இந்து ஆலயங்கள் உடைத்துத் தரமட்டமாக்கப்பட்ட போது இவ் ஆலயத்தையும் விட்டு வைக்க விரும்பாத வெள்ளையர்கள் ஆலயத்தை உடைக்க வந்தார்கள். குருக்களுடன் வெள்ளையர்களுக்கு இடம்பெற்ற விவாதத்தில் இந்த கல் நந்தி புல்லுண்ணும் என்ற குருக்களின் கூற்றை நிரூபிக்க ஆலயத்தின் கல் நந்தி எழுந்து காலால் மண்ணை எற்றி தனுப்போட்டு கொடுக்கப்பட்ட புல்லை உண்டு வெள்ளையர்களை மெய்மறக்க வைத்து புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப்பெருமை இவ் ஆலயத்துக்கு உண்டு.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இத்தேரோட்ட  
நிகழ்வில் அடியேனுக்கு முதன்முறையாக கலந்துகொள்ள---வாய்ப்புக் கிடைத்தது மறக்கமுடியாத நிகழ்வாகும்.








***

No comments:

Blog Widget by LinkWithin