Monday, July 29, 2013

ஜுலை 29 ⇨ சர்வதேச புலி தினம்

வருடாந்தம் ஜூலை மாதம் 29ம் திகதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. கடந்த நூறாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையானது 97% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது. உலக வனவிலங்குகள் நிதியத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் உலகிலுள்ள புலிகள் எண்ணிக்கை 3200 மட்டுமே ஆகும்.  புலிகளுக்கு மனிதர்களைத் தவிர வேறு எதிரிகள் கிடையாது. உலகில் தற்சமயம் 6 வகையான புலி இனங்களே எஞ்சியுள்ளதாம். மேலும் 3 இனங்கள் அழிவடைந்துவிட்டதாம்.  மனிதச் செயற்பாடுகளின் காரணமாக குறிப்பாக வேட்டையாடுதல், வாழிடங்களினை அழித்தல் போன்றவற்றால் புலிகள் உலகில் அருகிவருகின்ற விலங்கினங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு புலிகளைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு சர்வதேச புலி தினமானது கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், புலிகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…..!

# ஆசியாவினைப் பூர்வீகமாகக் கொண்ட புலிகளின் விஞ்ஞானப் பெயர் பாந்தெரா டைகிரிஸ்(Panthera Tigris)

# தரைவாழ் மாமிசப் பட்சிகளில் துருவக் கரடிகள், பிறவுண் கரடிகளை அடுத்து மிகப் பெரிய விலங்கினம் புலிகள் ஆகும்.


# புலிகள் நன்றாக நீந்தக்கூடியவையாகும். இவைகளால் 6 கிலோமீற்றர் தூரம்வரை நீந்த முடியுமாம்.


# புலிகளின் கர்ஜனை பலமானதாகும், இவற்றின் கர்ஜனை ஒலி 2 கிலோமீற்றருக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாகும். இவை பொதுவாக தனது சொந்த வாழிடப் பிரதேசத்தின் பாதுகாப்புக்காகவும், தனது துணையினை இனப்பெருக்கத்திற்காக அழைக்கவுமே கர்ஜிக்கின்றனவாம்.


# ஒவ்வொரு புலியினதும் உடம்பிலுள்ள வரிகள், ஏனைய புலிகளின் வரிகளை ஒத்ததன்றாகும். அவை ஒவ்வொன்றும் வித்தியாசமானவையாகும்.

# புலிகளின் பற்கள் மனிதர்களின் பற்களினை விடவும் 10 மடங்கு பெரியவையாகும்.


# புலிகள் ஏனைய விலங்குகளைப் போன்றல்லாமல் தனியாகவே வேட்டையாடச் செல்கின்றன. புலிகள் பொதுவாக இரவு நேரத்திலேயே வேட்டையாடுகின்றன. புலிகளின் வேட்டை முயற்சிகளில் 90% ஆனவை தோல்வியிலேயே முடிகின்றதாம். சில வேளைகளில் புலிகள் வேட்டைக்காக ஓரிரவில் 10 – 20 கிலோமீற்றர் தூரம்வரையும் பயணம் செய்கின்றனவாம்.  புலிகள் தனது இரையினை பின்புறமாகவோ அல்லது பக்கவாட்டாகவோ மாத்திரமே வேட்டையாடுகின்றனவாம், அவை ஒருபோதும் முன்புறமாகச் சென்று வேட்டையாடுவதில்லையாம். புலிகள் ஓரிரவில் 20 – 35 கிலோகிராம்  இறைச்சியினை உட்கொண்டாலும், அவை பொதுவாக ஓர் நாளில் 15 – 18 கிலோகிராம்  இறைச்சியினையே  உட்கொள்கின்றனவாம். சிலவேளைகளில் புலிகள் தனது இரையினை முழுமையாக தின்றுமுடிப்பதற்கு  2 – 3 நாட்களினை எடுத்துக்கொள்கின்றதாம்.


#  புலிகள் மணிக்கு 40 மைல்கள் வேகத்தில் ஓடக்கூடியவையாகும், அத்துடன் ஒரே பாய்ச்சலில் 16 அடிக்கு அப்பால் காற்றில் பயணிக்கக்கூடியவையாகும்.


# புலி இனங்களில் சைபீரியன் புலிகளே மிகப்பெரிய புலியினமாகும், அத்துடன் சுமாத்ரா புலிகளே உலகில் மிகச்சிறிய புலியினமாகும். உலகில் அதிக எண்ணிக்கையில் வங்காளப் புலிகளும் (2500), குறைந்த எண்ணிக்கை தென் சீனப் புலிகளும் காணப்படுகின்றனவாம் (60 - 80).

# இந்தியா, மியன்மார், பங்களாதேஷ், தென் கொரியா, வியட்னாம், மலேசியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலி ஆகும்.

# உலகில் அதிகம் பேருக்கு பிடித்தமான விலங்கினம் புலியாகும் என்கின்ற ஓர் கருத்துக்கணிப்பு .


ஓகே… என்னைப்போல யார்யாருக்கெல்லாம் புலி பிடிக்கும்.


***

Sunday, July 28, 2013

கிரிக்கெட் சாதனைகளைப் புதுப்பித்த விராட் கோஹ்லி…!

சுற்றுலா இந்திய அணிக்கும், சிம்பாப்வே அணிக்குமிடையிலான 1வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் (24 ஜூலை) இந்திய அணியின் விராட் கோஹ்லியின் அதிரடிச் சதத்தின் உதவியுடன் இந்திய அணி 239 ஓட்ட இலக்கினை 6 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.


தனது 109வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய விராட் கோஹ்லி பல்வேறு சாதனைகளினை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். அவையாவன;

QY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் வேகமாக 15 சதங்களைக் கடந்த சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…!
> விராட் கோஹ்லி ⊶ இந்தியா 106 இன்னிங்ஸ்
> சயீட் அன்வர் ⊶ பாகிஸ்தான் 143 இன்னிங்ஸ்
> சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா 144 இன்னிங்ஸ்
> கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் 147 இன்னிங்ஸ்
> ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா 161 இன்னிங்ஸ்
> டெஸ்மன் கெய்ன்ஸ் ⊶ மே.தீவுகள் ⇨ 166 இன்னிங்ஸ்
> ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி 180 இன்னிங்ஸ்

> சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 182 இன்னிங்ஸ்

குறிப்பு தற்சமயம் இந்த சாதனையினை முறியடிக்ககூடிய வாய்ப்பு உள்ள வீரர் தென்னாபிரிக்காவின் ஹாசிம் அம்லா, இதுவரையும் 74 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 11 சதங்களை பூர்த்தி செய்துள்ளார்.


QY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் வேகமாக 15 சதங்களைக் கடந்த சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…!
° விராட் கோஹ்லி ⊶ இந்தியா 24 ஆண்டுகள் 261 நாட்கள்
° சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 25 ஆண்டுகள்
° கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் 27 ஆண்டுகள் 42 நாட்கள்
° சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா 28 ஆண்டுகள் 99 நாட்கள்
° ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி 28 ஆண்டுகள் 329 நாட்கள்
° சயீட் அன்வர் ⊶  பாகிஸ்தான் 29 ஆண்டுகள் 134 நாட்கள்

° ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா 30 ஆண்டுகள் 354 நாட்கள்


QY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக 15 சதங்களைக் கடக்க குறைந்த ஆண்டுகளை எடுத்துக்கொண்ட சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…!
è விராட் கோஹ்லி ⊶ இந்தியா 4 ஆண்டுகள் 340 நாட்கள்
è கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் 7 ஆண்டுகள் 52 நாட்கள்
è சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 8 ஆண்டுகள்127 நாட்கள்
è ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா 8 ஆண்டுகள் 131 நாட்கள்
è ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி ⇨ 8 ஆண்டுகள் 270 நாட்கள்
è சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா 8 ஆண்டுகள் 278 நாட்கள்

è சயீட் அன்வர் ⊶ பாகிஸ்தான் 9 ஆண்டுகள் 17 நாட்கள்

***

Tuesday, July 16, 2013

ஜுலை 16 ⇨ உலக பாம்பு தினம்

வருடாந்தம் ஜூலை மாதம் 16ம் திகதி உலக பாம்புகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. 
அந்தவகையில் பாம்புகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…..

# உலகில் 3000 இற்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் 350 பாம்பு இனங்களே விஷம் கொண்டவையாகும். பாம்புகளின் தாக்குதல் காரணமாக வருடாந்தம் 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் மரணிக்கின்றனராம்.

# குளிர் இரத்த வகையினைச் சேர்ந்த  நகருயிரியான பாம்புகள், உலகில் அந்தாட்டிக்கா கண்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து கண்டங்களிலும் உயிர்வாழ்கின்றன.



# அயர்லாந்து, ஐஸ்லாந்து, நியூசிலாந்து, கிறீன்லாந்து ஆகிய நாடுகளில் பாம்புகளே கிடையாது.

# உலகில் மிக வேகமாக ஓடுகின்ற பாம்பு ப்ளக் மம்வா(Black Mamba)ஆகும். இதன் வேகம் மணித்தியாலத்திற்கு 12 மைல்கள் ஆகும். இந்தவகை பாம்புகளின் கடிக்கு உள்ளாகுபவர்களில் 95-100% ஆனோர் மரணத்தினையே அடைகின்றனர்.



# பாம்புகள் தமது நாக்கின் மூலமே வாசனையினை உணர்ந்துகொள்கின்றன.



# பாம்புகளுக்கு கண் இமைகள் கிடையாது. மேலும் அவை குறைவான கண்பார்வையினையே கொண்டவையாகும்.

# பாம்புகளுக்கு காதுகள் கிடையாது, இதனால் அவைகளுக்கு கேட்கும் சக்தி இல்லை.  நிலத்திலிருந்து உணர்கின்ற அதிர்வுகளின் மூலமே பாம்புகள் ஏனைய உயிரிகளின் நடமாட்டத்தினை உணர்ந்துகொள்கின்றன.



# கூடு கட்டி முட்டையிடுகின்ற ஒரே பாம்பினம் இராஜ நாகம்.

# உலகில் பல்வேறு அளவுகளிலான பாம்பினங்கள் உள்ளன. தென் அமெரிக்காவின் பச்சை அனக்கொண்டா பாம்புகளே(Green Anaconda) மிகப்பெரிய பாம்பினமாகும், மேலும் தென்கிழக்காசியாவின் மலைப்பாம்புகளே(The Reticulated Python) மிக நீளமான(28’) பாம்பினமாகும். அத்துடன், 02 அங்குல நீளமேயான ப்ராஹ்மினி பிளைன்ட்(Brahminy Blind) பாம்பினங்களே உலகில் மிகச்சிறிய பாம்பினமாகும்.

# பெரும்பாலான பாம்பினங்களுக்கு அதிக பற்கள் உண்டு. குறிப்பாக, சில வகைப் பாம்புகளுக்கு 200 இற்கும் மேற்பட்ட பற்கள் உள்ளன.  ஆனால் பாம்புகள் தமது இரையினை அசைபோட்டு உண்பதற்கு பற்களை பயன்படுத்துவதில்லை. மாறாக அவை தமது இரையினை முழுமையாக விழுங்குகின்றன. பாம்புகள் தமது தலையினை விடவும் 4 மடங்கு பெரிய உயிரினங்களையும் இரையாக உட்கொள்ளக்கூடியவையாகும்.

# புவியில் ஏனைய பகுதிகளினை விடவும், ஒவ்வொரு சதுரமீற்றருக்கு அதிக எண்ணிக்கையில் விஷப் பாம்புகள் இந்தோனேசியாவின் கோமோடோ தீவிலேயே உள்ளன.

# பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பதுண்டு. பாம்புகள் தொடர்பான பயம் "ஒப்கிடோபோபியா" எனப்படும்.

ஓகே… உங்களில் யார்யாருக்கெல்லாம் "ஒப்கிடோபோபியா" உண்டு…! 

***

Sunday, July 14, 2013

விடைபெறும் தந்திச் சேவை…!

கடந்த 163 ஆண்டுகளாக மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்த தந்திச் சேவைக்கு சாவுமணி அடிக்கின்றது இந்தியா…!


கையடக்கத் தொலைபேசிகள், இலத்திரனியல் அஞ்சல்களின் அறிமுகத்தின் பின்னர் தந்திச் சேவையின் அவசியம் உலகில் வெகுவாக குறைந்துவிட்டதனால் உலகில் பல நாடுகள் வருமானத்தினை மிஞ்சிய செலவின் காரணமாக தந்திச் சேவைக்கு பிரியாவிடை கொடுத்துள்ளன.

ஆம்…! அந்தவகையில், இன்றைய தினம் 14 ஜுலை 2013, இரவு 9.00 மணியுடன் இந்திய நாட்டில் தந்திச் சேவை முடிவுக்கு வருகின்றது.

அந்தவகையில், உலகப் புகழ்பெற்ற சில சுவாரஷ்சியமான தந்தித் தகவல்கள் சில….!

* வரலாற்றில் முதன்முறையாக மே 24, 1844ம் ஆண்டு அமெரிக்காவினைச் சேர்ந்த சாமுவேல் மோர்ஸ் வாஷிங்டனிலிருந்து, வல்ரிமோருக்கு முதல் தந்திச் செய்தியினை அனுப்பினார்.  அனுப்பட்ட செய்தி வாசகம் What hath God wrought?”



* ஏப்ரல் 15, 1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பலில் இருந்து இறுதியாக அனுப்பப்பட்ட தந்தியில்லா செய்தித் தகவல் SOS SOS CQD CQD Titanic. நாங்கள் மிகவேகமாக மூழ்கிக்கொண்டிருக்கின்றோம். பயணிகளை படகுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றோம். டைட்டானிக்”

* அமெரிக்க ஊடகவியலாளரான ரொபர்ட் பென்ச்லி பயணக் கட்டுரை எழுதுவதற்காக இத்தாலி, வெனிஸ் நகருக்கு அனுப்பட்டார். அவர் நியூயோர்க்கிலுள்ள தனது பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பிய பிரபல்யமான செய்தித் தகவல் ஹரோல்ட் ரோஸ், முதல் தடவையாக வெனிஸ்சினை வந்தடைந்தேன். வீதிகள் எல்லாம் தண்ணீரால் நிரம்பியுள்ளன. தயவுசெய்து ஆலோசனை வழங்குங்கள் ”.

* வரலாற்றில் ஆங்கிலத்தில் மிகக்குறுகிய தந்தி செய்தியினை அயர்லாந்தினைச் சேர்ந்த எழுத்தாளர் ஒஸ்கார் வில்ட் அனுப்பினார். பாரிஸ் நகரில் வசித்த இவர், பிரிட்டனிலுள்ள அவரின் புத்தக பதிப்பகத்தாருக்கு தன்னுடைய புதிய புத்தகத்தின் அச்சிடல் செயற்பாடுகள் எந்தவகையில் உள்ளது என்பதனை அறிவதற்கு அனுப்பிய செய்தித் தகவல் பின்வருமாறு ஆகும். "?", இதற்கான பதிப்பகத்தாரின் பதில் செய்தித் தகவல் "!" என்பதாகும்.

* பெளதிகவியலாளரான எட்வர்ட் ரெலர் 1952ம் ஆண்டு தனது தொழிற்துறை நண்பனான லொஸ் அலமோஸ்க்கு,  தன்னுடைய முதலாவது ஐதரசன் குண்டு வெடிப்பு தொடர்பாக அனுப்பிய தந்தி இது ஒரு சிறுவன் It’s a Boy

* "ரைட் சகோதர்கள்" தமது வெற்றிகரமான முதல் வான்பறப்பு தொடர்பாக 1903ம் ஆண்டு வட கரோலினாவிலிருந்து தந்தி மூலம் அறிவித்தார்கள். “வெற்றிகரமான நான்கு பறப்புக்கள் வியாழன் காலை” ⊶ (Successful four flights Thursday morning)

, சுவாரஷ்சியமான தந்தி ⇨ ஒருதடவை எனது அலுவலக விடுப்பு தொடர்பாக  நான் அனுப்பிய தந்தியினை 3 நாட்களின் பின்னர் அலுவலகத்தில் நானே பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது. (இலங்கை தந்திச்சேவை)  * வரலாறு முக்கியம் அமைச்சரே…!

***
Blog Widget by LinkWithin