Wednesday, June 5, 2013

அகவை ஐந்தில் தடம் பதிக்கும் "லோகநாதனின் பகிர்வுகள்".....!

வலைப்பூவின் ஊடாக ஜூன் 5, 2009 அன்று தொடங்கிய "லோகநாதனின் பகிர்வுகள்" என்கின்ற என் வலைப்பயணம் புதியதொரு அத்தியாத்தினை அடைந்து வெற்றிகரமான ஐந்தாவது அகவையில் தடம்பதிக்கின்றது.

ஆம்…! இந்த நீண்ட தூரப் பயணத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றியதுடன் இந்த 48 மாத வலைப்பயணத்தில் 48 மாதங்களும் தவறவிடாமல் பதிவிட்டதே என் மிகப்பெரிய அடைவு என நினைக்கின்றேன்.


வலையுலகில் என்னுடைய வலைப்பூவுக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்த/அளித்துவருகின்ற பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், பத்திரிகைகள், இணையங்கள், சஞ்சிகைகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.




வலையுலகில் நான்கு  வெற்றிகரமான ஆண்டுகளைப் பூர்த்தி செய்து ஐந்தாவது  ஆண்டில் கால்பதிக்கும் இந்தத் தருணத்தில் என் வலைப்பதிவு ஆக்கங்களினை தொகுத்து புத்தகமொன்று வெளியிட வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது, வாய்ப்புக்கள் வருகின்றபோது என் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என நம்புகின்றேன்.

மீண்டும் உத்வேகத்துடன் 5ம் ஆண்டில் கால்பதித்து தொடர்ந்து பதிவுலகில் உங்கள் ஆதரவுடன் சாதிக்கவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

உங்கள் வாக்குகளினையும், பின்னூட்டங்களினையும் வழங்கி ஆதரவினையும், ஊக்கத்தினையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன். உங்கள் ஆதரவே என் வலைப்பதிவில் புதுப்புது தகவல்களினை பதிவிடுவதற்கு உந்துசக்தியளிக்கும்.

உங்கள் அன்பின்,
கே.கே.லோகநாதன்  

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

அகவை ஐந்தில் தடம் பதிக்கும் "லோகநாதனின் பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..!

ஆத்மா said...

வாழ்த்துக்கள் தல......

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகள்!

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பர்களே உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்..!

Blog Widget by LinkWithin