Saturday, May 4, 2013

நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் இந்திய சினிமா….!


மே 03, 2013 அன்று இந்தியச் சினிமா தனது நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடியது.  அந்தவகையில் இந்தியச் சினிமாவுடன் தொடர்புடைய சுவாரஷ்சியமான தகவல்கள் சில உங்களுக்காக….!

மே 03, 1913 அன்று இந்திய சினிமாவின் முதல் முழு நீளத் திரைப்படமான "ராஜா ஹரிச்சந்திரா" வெளியாகியது. இந்திய திரைப்படத் துறையின் தந்தையென அழைக்கப்படும் தாதாசாஹேப் பால்கேயின் இயக்கத்தில் வெளியாகிய இத்திரைப்படமானது பேசாப் படமென்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியச் சினிமாவின் முதல் பேசும் திரைப்படம் "ஆலம் ஆரா" ஆகும், இத்திரைப்படம் அர்டேஷிரா மார்வன் இராணி அவர்களின் இயக்கத்தில் மார்ச் 14, 1931 இல் வெளியாகியது.

இந்தியச் சினிமாவின் முதல் வர்ணத் திரைப்படம் "கிசன் கன்யா" ஆகும், இத்திரைப்படம் மோடி கிட்வானி அவர்களின் இயக்கத்தில் 1937 இல் வெளியாகியது.


இந்தியச் சினிமாவில் அதிக பாடல்களைக் கொண்ட திரைப்படம் "இந்திர சபா" ஆகும், 71 பாடல்களைக் கொண்ட இத்திரைப்படம் ஜே. மதன் அவர்களின் இயக்கத்தில் 1932 இல் வெளியாகியது.

இந்தியச் சினிமாவின் மிக நீளமான திரைப்படம் "எல்ஓசி : கார்கில்" ஆகும், இத்திரைப்படம்  04 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் நீளமானதாம்.

இந்தியச் சினிமாவின் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் "தில்வாலே துல்ஹனியா லே ஜயங்கே" ஆகும், அக்டோபர் 20, 1955 வெளியாகிய இத்திரைப்படம் 700 வாரங்களைக் கடந்து ஓடியதாம்.

இந்தியச் சினிமாவில், முதன்முதலில் (1920) சினிமா சுவரொட்டிகள் மூலம் தனது திரைப்படத்தினை விளம்பரப்படுத்தியவர் பாவுராவ் பெயிண்டர் ஆவார். இவர் "வத்சலா ஹரன்" என்கின்ற தன்னுடைய திரைப்படத்திற்காகவே சினிமா சுவரொட்டிகளை வெளியிட்டார்.

இந்தியச் சினிமாவில், முதன்முதலில் (1920) சினிமா சுவரொட்டிகள் மூலம் தனது திரைப்படத்தினை விளம்பரப்படுத்தியவர் பாவுராவ் பெயிண்டர் ஆவார். இவர் "வத்சலா ஹரன்" என்கின்ற தன்னுடைய திரைப்படத்திற்காகவே சினிமா சுவரொட்டிகளை வெளியிட்டார்.

இந்தியச் சினிமா வரலாற்றில், சர்வதேச திரைப்பட விழாவில் (வெனிஸ்) திரையிடப்பட்ட (1937) முதல் திரைப்படம் "சண்ட் துகரம்" ஆகும்.

***

No comments:

Blog Widget by LinkWithin