Tuesday, April 23, 2013

ஏப்ரல் மாதம் 23 ம் திகதி ⊷ உலக புத்தக தினம்


ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 23 ம் திகதி உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக யுனெஸ்கோ அமையத்தின் ஏற்பாட்டில் 1995 ஆம் ஆண்டு முதற்கொண்டு கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், நூல்களுடன் தொடர்புடைய சுவாரஷ்சியமான தகவல்கள் சில;

≬ உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் பைபிளினை அடுத்து திருக்குறளே முன்னிலை வகிக்கின்றது. திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறளில் தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்களான 247 எழுத்துக்களில் "ஒள" என்கின்ற எழுத்தினை பயன்படுத்தவே இல்லை.



≬ விக்டர் ஹியூகோ என்கின்ற எழுத்தாளரின் "லெஸ் மிசெரெவில்ஸ் (Les Miserables)" என்கின்ற புத்தகத்தில் காணப்படுகின்ற ஒரு வசனம் 823 சொற்களைக் கொண்டுள்ளது.


≬ ஐக்கிய அமெரிக்காவில், ஒவ்வொரு செக்கனுக்கும் தலா 57 புத்தகங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றதாம்.

≬ நோஹ் வெப்ஸ்டர் தனது முதலாவது அகராதியினை எழுதுவதற்காக 36 ஆண்டுகளை செலவிட்டாராம்.

≬ கிறிஸ்தவர்களின் புனித நூல்  "பைபிள்" ஆகும். உலகில் அதிகளவில் அச்சிடப்பட்ட நூல் என்கின்ற பெருமைக்குரியது பைபிள் ஆகும். உலகளாவியரீதியில் 2.5 பில்லியன் பைபிள் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளனவாம்.

≬ ஐக்கிய அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள காங்கிரஸ் நூலகத்தில் 28 மில்லியன் நூல்கள் உள்ளனவாம். 


≬ ஜே.கே. ரவுலிங் என்கின்ற பெண் எழுத்தாளரின் 5 வது தொடரான "ஹரி பொட்டர் அன்ட் த ஓடர் ஒஃப் த பொனிக்ஸ்" (Harry Potter and the Order of the Phoenix) என்கின்ற நூலின் 8.5 மில்லியன் முதற்பிரதிகள் விற்பனையானதாம்.

≬ பிரேசில் நாட்டினைச் சேர்ந்த எழுத்தாளரான ஜோஸ் கார்லோஸ் ரொய்கி 1986 இற்கும் 1996ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1058  நாவல்களினை வெளியிட்டுள்ளாராம். இவரின் நாவல்கள் மேற்கத்தேய, விஞ்ஞான புனைகதைகள், மற்றும் விறுவிறுப்பு  சம்பந்தப்பட்டவையாம்.

***

Friday, April 19, 2013

உலகில் மிக வயதான நபருக்கு இன்று 116வது பிறந்தநாளாம்...!

உலகில் தற்சமயம் உயிர்வாழ்கின்ற அதிகூடிய வயதினைக் கொண்டவர் என கின்னஸ் சாதனையேடுகளில் பதிவாகியுள்ள ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஜிரொய்மன் கிமுரா, இன்றைய தினம்(ஏப்ரல் 19, 2013) தனது 116வது பிறந்த தினத்தினைக் கொண்டாடுகின்றார்.



19 ஏப்ரல் 1897ல் பிறந்த கிமுரா, தனது 65வது வயது வரை தபாற்காரராகப் பணிபுரிந்ததுடன், இவர் தனது 90 வயதுவரை பண்ணைத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் தனது, மூத்த விதவைமகளின் பராமரிப்பில் மேற்கு ஜப்பானில் கியோடங்கோவில் வசிக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

60,000 சனத்தொகையினைக் கொண்ட கியோடங்கோ நகரில் 100 வயதினைக் கடந்த 95 பேர் வாழ்கின்றரென தகவல்கள் தெரிவிக்கின்றன.


உலகில் தற்சமயம் உயிர்வாழ்கின்ற 20ம் நூற்றாண்டிற்கு முன்னர் பிறந்த 12
பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புகைப்பழக்கமற்ற இவர், ஓரளவு அற்ககோல் பாவனையினைக் கொண்டவராம்.

“மிதமாக சாப்பிடுங்கள்; நீண்டகாலம் வாழலாம்”  இதுவே தனது நீண்ட ஆயுளுக்கான தாரகமந்திரம் என்கின்றார் ஜிரொய்மன் கிமுரா.

இவருக்கு 14 பிள்ளைகளும், 25 பேரப் பிள்ளைகளும், 13 கொள்ளுப் பிள்ளைகளும் உள்ளனராம்.

கியோடங்கோ நகரில் வாழ்கின்ற ஜிரொய்மன் கிமுரா மட்டுமன்றி அங்கே வாழ்கின்ற 50 வயதினை பூர்த்தி செய்தோரிடையே அவர்களின் நீண்ட ஆயுளின் இரகசியத்தினை அறிவதற்காக அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றர்.


 உங்களுக்குத் தெரியுமா?.....!

தற்சமயம் உலகில் வயதான பெண்மணியென கருதப்படும் 115 வயதான மிசாவோ ஒகாவோ ஜப்பான் நாட்டிலேயே வசித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜிரொய்மன் கிமுராவுக்கு முன்னர் உலகில் மிக அதிக ஆண்டுகள் வாழ்ந்தவரான ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த கிறிஸ்ரின் மொர்ரென்சன், 1998ம் ஆண்டு இறந்தபோது அவரின் வயது 115 ஆண்டுகள் 252 நாட்கள்.

115 வயதான ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த பெண்ணான டினா மென்ஃப்ரிடினி, 2012 டிசம்பர் 17ல் இறந்ததையடுத்து ஜிரொய்மன் கிமுரா கின்னஸ் சாதனையேடுகளில் உலகில் வயதான மனிதரென பதிவாகினார்.

 ***

Monday, April 15, 2013

மோனாலிசா ஓவிய திருட்டுக்காக கைதுசெய்யப்பட்ட பிக்காசோ….!


ஏப்ரல் மாதம் 15ம் திகதி உலக கலை தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது. 2011ம் ஆண்டு  ஒக்டோபர் மாதம் சர்வதேச கலை ஒன்றியமானது, பிரபல ஓவியக் கலைஞரான லியனார்டோ டாவின்சியின் பிறந்த தினமாகிய ஏப்ரல் மாதம் 15ம் திகதியினை சர்வதேச கலை தினமாக பிரகடனம் செய்தது.

# ஏப்ரல் 15, 2013 லியனார்டோ டாவின்சியின் 561வது ஜனன தினம்

அந்த வகையில் பிரபல ஓவியக்கலைஞர்கள் மற்றும் ஓவியங்கள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில...

1911ம் ஆண்டு, லியனார்டோ டாவின்சியினால் வரையப்பட்ட உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியமானது அது பாதுகாத்து வைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் லொவ்ரி நூதனசாலையிலிருந்து திருடர்களால் களவாடப்பட்டது. களவாடப்பட்ட மோனாலிசா ஓவியத்தினை மீட்க மேற்கொள்ளப்பட்ட 2 வருட காலப்பகுதியில் மோனாலிசா அசல் ஓவியமென விற்பனை செய்யப்பட்ட  6 இற்கும் மேற்பட்ட மீளுருவாக்கப்பட்ட மோனாலிசா ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.



மோனாலிசா ஓவியம் களவாடப்பட்டமையடுத்து சந்தேகத்தின் பேரில் பிரபல ஓவியர் பவ்லோ பிக்காசோ மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் இருவரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர். 



இத்தாலி நாட்டினைச் சேர்ந்த பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்சி அவர்கள் இடது கை சித்திரக்கலைஞர் ஆவார். இவர் தனது தனிப்பட்ட குறிப்புக்களை எழுதுகின்ற போது தாளின் வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் நோக்கியே எழுதுவாராம். இந்த நுட்பமானது "கண்ணாடி எழுதுதல்" ஆகும். அதாவது கண்ணாடியின் உதவியுடனே அவரின் குறிப்புப் புத்தகங்களை வாசிக்க முடியுமாம்.



பிரபல டச்சு ஓவியரான வின்சென்ட் வான் கோ அவர்கள் தனது 10 வருட கலை வாழ்வில் 900 வர்ண ஓவியங்களினையும், 1100 வரைதல்களினையும் மேற்கொண்டிருந்தார். வின்சென்ட் வான் கோவின் சித்திரங்களில் "த ரெட் வின்யார்ட்" என்கின்ற வர்ண ஓவியத்தினை மாத்திரமே அவரால் விற்பனை செய்ய முடிந்தது. ஆனால் அவரின் இறப்பின் பின்னரே அவரின் புகழினை உலகத்தினால் உணரமுடிந்தது. 



வின்சென்ட் வான் கோ அவர்கள் தொழுநோய் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். மன அழுத்த உச்ச நிலையில் அவர் தனது காதின் ஒரு பகுதியினை வெட்டிக் கொண்டார். அவரின் மன அழுத்தம் அவரை தற்கொலை வரை இட்டுச் சென்றது, அவர் தன்னை தானோ மார்பில் சுட்டு காயப்படுத்திக் கொண்டார், இரண்டு நாட்களின் பின் மரணத்தினை தழுவிய வின்சென்ட் வான் கோ இறக்கும் போது வயது 37 ஆண்டுகளாகும்.

பிரபல இடதுகை ஓவியக்கலைஞரான மைக்கலாஞ்சலோ அவர்கள் தான் வாழ்நாள் காலத்திலேயே தன் சுயசரிதையினை வெளியிட்டவர் ஆவார்.



இத்தாலியின் ரோம் நகரிலுள்ள சிஸ்டன் தேவாலயத்தின் உட்கூரையினை அலங்கரிக்கும் கலைநயமிக்க ஓவியங்களை வரைய இவருக்கு 04 ஆண்டுகள் தேவைப்பட்டது. "இறுதி இராப்போசனம்" இவரின் பிரபல ஓவியங்களிலொன்றாகும்.


இலக்கியத்துக்கான நோபல் பரிசினை வென்ற முதல் ஆசியக் கண்டத்தினைச் சேர்ந்த இந்தியரான ரவீந்திரநாத் தாகூர் மிகச்சிறந்த ஓவியரும் ஆவார்.



***

Sunday, April 7, 2013

உயிரினங்கள் பற்றிய சுவாரஸ்சியமான தகவல்கள்....


♣ முதலைகளின் வயிற்றில் அதிகளவான அமிலங்கள் காணப்படுகின்றதாம். இதன் காரணமாக உருக்குகள்கூட முதலையின் வயிற்றில் சமிபாடு அடையுமாம்.

♣ ஆர்ட்டிக் பிராந்தியத்தில் காணப்படும் நரிகள் பருவகாலங்களுக்கேற்ப நிறம் மாறிக்கொள்கின்றனவாம். ஆர்ட்டிக் நரிகள், குளிர்காலத்தில் வெள்ளை நிறமாகவும், கோடை காலத்தில் பிறவுண் நிறமாகவும் காணப்படுகின்றனவாம்.

♣ பறக்கின்ற ஒரே முலையூட்டி இனம் வெளவால்கள் ஆகும்.

♣ நாய்கள், மனிதர்களுடன் 14,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றனவாம்.



♣ சீனா தேசத்தினை பூர்வீகமாகக் கொண்ட பண்டாக்கரடிகள் உலகில் அருகிவருகின்ற உயிரின வகையினைச் சேர்ந்ததாகும். புதிதாகப் பிறக்கின்றபோது பண்டாகரடிக் குட்டியானது, சுண்டெலியினை விடவும் சிறியதாகும். இதன் நிறை அண்ணளவாக 04 அவுண்ஸ் ஆகும். புதிதாகப் பிறந்த பண்டாக்கரடிக் குட்டிகள் இளஞ்சிவப்பு(Pink) நிறமாகவும், முடிகளற்றும் காணப்படும். ஒரு மாதமளவில் அவை தமது வழமையான நிறமான கறுப்பு, வெள்ளை நிறத்திற்கு வளர்ச்சியடைந்துவிடுமாம்.


♣ முழுமை வளர்ச்சியடைந்த கரடியானது, குதிரையினை விடவும் வேகமாக ஓடக்கூடிய ஆற்றல் கொண்டதாம்.

♣ ஒரு தேக்கரண்டி தேனினை உற்பத்தி செய்வதற்கு 12 தேனீக்கள் தமது வாழ்நாள் பூராகவும் தேனினை சேகரிக்க வேண்டுமாம்.

♣ எலிகள் மிக விரைவாக இனப்பெருக்கம் ஆற்றல் கொண்டவையாம். 18 மாதங்களில் ஒரு ஜோடி எலியானது 01 மில்லியனுக்கும் அதிகமான வாரிசுகளை உருவாக்கக்கூடியவையாம்.

♣ நுளம்புகளில் 2500 இற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளனவாம்.


***
Blog Widget by LinkWithin