Saturday, December 1, 2012

"E" என்கின்ற எழுத்தினை பயன்படுத்தாமல் ஆங்கில நாவல் எழுதியவர்....!


உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள்......


√ பேரரசர் கலிகுலா ஒரு தடவை உரோமன் கடல் தெய்வத்திற்கெதிராக[Poseidon - பொசிடொன்] போர்ப்பிரகடனம் செய்து, அம்புகள் மூலம் எழுந்தமானமாக தாக்குமாறு தமது போர்வீரர்களுக்கு கட்டளை பிறப்பித்தாராம்.

√ உலகப் புகழ்பெற்ற டச்சு நாட்டினைச் சேர்ந்த சித்திரக்கலைஞர் வின்சென்ட் வான் கோ அவர்கள் தனது வாழ்நாளில் தன்னுடைய சித்திரங்களில் ஒன்றினையே விற்பனை செய்தாராம்.



√ முதலாம் எலிசபெத் மகாராணியின் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டில் கண்டிப்பான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில், செல்வந்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் தட்டையான தொப்பியினை அணியவேண்டும் என்பதே அந்த சட்டமாகும்.

1714ம் ஆண்டு இங்கிலாந்து மன்னனாக முடிசூடிக்கொண்டவர் 1வது ஜோர்ஜ் ஆவார். ஆனால் இவரது மனைவி இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக வரவேயில்லையாம். மகாராணியாக இருக்கவேண்டிய மனைவி 32 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தாராம்.

√ மிகச்சிறந்த போர்வீரனாக விளங்கிய இங்கிலாந்தினைச் சேர்ந்த தளபதி அட்மிரல் நெல்சனின் உயரம் 1.6 மீற்றர்கள்தானாம், அதாவது 5 அடி 2 அங்குலம்.

√ ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த எர்னெஸ்ட் வின்சென்ட் ரைட் அவர்கள் எழுதிய "கட்ஸ்வை" என்கின்ற ஆங்கில நாவல் 50000 சொற்களைக் கொண்டிருந்தது, ஆனால் இந்த நாவலில் "E"  என்கின்ற எழுத்து ஒரு தடவைகூட பயன்படுத்தவிலையாம்.

 √ உகண்டா நாட்டினை ஆட்சிசெய்த கொடுங்கோலன் சர்வாதிகாரி இடி   ஆமின், பதவிக்கு வரும்முன் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேவகனாக பணிபுரிந்தவனாம்.



***

3 comments:

JR Benedict II said...

புதிய சுவாரசிய தகவல்கள்

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ....

thiyagarajan.s said...

அப்ப இவ்ர்-"இ"-ன்னு யாருகிட்டேயும் பல்லைக் காட்டாம் எழுதினாருன்னு சொல்லுங்க....

Blog Widget by LinkWithin