Friday, November 9, 2012

350வது பதிவு # பேர்லின் சுவரின் வீழ்ச்சி…....!


பதிவுலகில் தடம்பதித்து 40ம் மாதங்களினை அண்மிக்க இந்த தருணத்தில் எனது 350வது பதிவினை உங்கள் முன் சமர்ப்பிர்கின்றேன்.



அந்தவகையில் என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து உதவுகின்ற சக பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், இணயத்தள சஞ்சிகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பூரிப்படைகின்றேன்.


கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளை பிரித்துவைத்த பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு இன்றைய தினத்துடன்(நவம்பர் 09,2012) 23ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.


2ம் உலகப்போரின் (1939-1945) பிற்பாடு ஜேர்மனியானது கலவரங்களால் பிளவுண்டு போயிருந்தது. கிழக்கு ஜேர்மனியானது கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் சோவியத் ஒன்றியத்தினைச் சார்ந்திருந்த அதேவேளை மேற்கு ஜேர்மனியானது முதலாளித்துவ ஆட்சியின் கீழ் ஐக்கிய அமெரிக்காவினை சார்ந்திருந்தது.  இதனால் ஜேர்மனியின் தலைநகராக விளங்கிய பேர்லினானது கிழக்கு மற்றும் மேற்கு பேர்லினாகவும் பிளவுபட்டிருந்தது.



1949 – 1960ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 2.5மில்லியனுக்கும் அதிகமான கிழக்கு ஜேர்மனி மக்கள், மேற்கு ஜேர்மனிக்கு குடியேறி வந்தனர், மேலும் அதிகளவான மக்கள் தமது நாட்டினை விட்டு வெளியேறிச் செல்வதினை தடுக்கும்முகமாக கிழக்கு ஜேர்மனியின் அதிபராகவிருந்த வால்ட்டர் உல்விரிச் அவர்களின் உத்தரவிற்கமைய கிழக்கு, மேற்கு ஜேர்மனி எல்லையில் 96 மைல்கள் (155கிலோமீற்றர்) நீளமான பெரியதொரு தடுப்புச்சுவரினை ஸ்தாபிக்கும் செயற்பாடானது 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிர்மாணப்பணிகள் 4 கட்டங்களாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். பேர்லின் சுவர் நிர்மாணிக்கப்பட்டதினையடுத்து இச்சுவரினை தாண்டி தப்பிக்க முயன்ற பலர் சுட்டுக்கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் கம்யூனிஸ்ட் ஆட்சியானது கிழக்கு ஜேர்மனியில் வீழ்ச்சியுற்றதனினை தொடர்ந்து 1989ம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவியேற்றது. 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 09ம் திகதி கிழக்கு பேர்லின் வாசிகள் மேற்கு பேர்லினுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதினையடுத்து பேர்லின் சுவரானது இரு நாட்டவர்களினாலும் இடிக்கப்பட்டது.


பேர்லின் சுவரின் வீழ்ச்சியின் பின்னர் 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் 03ம் திகதி  ஒன்றிணைந்தது கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணைந்து ஜேர்மனி என்கின்ற தனிநாடாக உலகில் புதியதொரு அவதாரமாக மாற்றம்பெற்றது.


பேர்லின் சுவரின் வீழ்ச்சியினைக் குறிக்கும்முகமாக நவம்பர் 09ம் திகதி  உலக ஜனநாயக தினமாக கொண்டாடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

***

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு நண்பரே...

350 வது பகிர்வா...? மலைக்க வைக்கிறது...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

ஆத்மா said...

தகவல் புதிது...
மேலும் மேலும் பல பயனுள்ள பதிவுகள் பகிர வாழ்த்துகிறேன் (350)

இராஜராஜேஸ்வரி said...

முன்னூற்று ஐம்பதாவது பதிவுக்கு நிறைவான வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பர்களே...

Blog Widget by LinkWithin