Monday, October 29, 2012

புராதன இலங்கையை சின்னாபின்னமாக்கிய பூகம்பம்......


அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வுத்தகவல்களின் பிரகாரம், பூகம்ப அபாய எல்லை, இலங்கையினை நெருங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறிப்பாக இலங்கையின் தென்மேற்கு கரையோரத்திற்கு அப்பால் இந்தோ ஆஸி புவித்தட்டானது 500 700 கிலோமீற்றர் பிளவடைந்திருப்பதாகவும் இதன் காரணமாக புதியதொரு  நிலத்தட்டு தோற்றம்பெற்றிருப்பதாகவும் இதனால் இலங்கைக்கு பாரியளவிலான பூகம்ப அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பூகோளவியல் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1615ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் காரணமாக மிகப்பெரும் உயிரழிவு ஏற்பட்டிருந்தது. அதைப்போன்ற பூகம்பமே வரக்கூடும் என்கின்றனர் புவியியல் அறிஞர்கள்.

உங்களுக்குத் தெரியுமா?......
போர்த்துக்கேய காலனித்துவ ஆட்சியின் கீழிருந்தபோது 1615ம் ஆண்டு சித்திரை மாதம் 14ம் நாள் இலங்கையினை பாரியளவிலான பூகம்பம் தாக்கி சின்னாபின்னமாக்கியது.



ஆம்...! 1615ம் ஆண்டு சித்திரை மாதம் 14ம் நாள் மாலை வேளை இலங்கையின் மேற்குப் பிராந்தியத்தில் 6.5 ரிச்டர் என மதிப்பிடப்பட்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக 200இற்கும் அதிகமான வீடுகள் அழிவடைந்ததுடன், 2000 இற்கும் அதிகமான மக்களும் பலியானதாகவும் வரலாற்றுத்தகவல்களிலிருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது.  விசேடமாக, கொழும்பு கோட்டைப் பிராந்தியமானது இப்பூகம்பத்தின் காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பூகம்பத்தின் காரணமாக கொழும்பு கோட்டைச்சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததுடன், கோட்டைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், கற்பாலமும் இடிந்து வீழ்ந்ததாகவும், மேலும் நிலத்தில் பாரியளவிலான பிளவுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிந்துகொள்வோம்....
Ø  1814ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் நாள் மட்டக்களப்பின் கடற்கரையோரங்களில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டதோடு, பாரியளவிலான கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதாம்.

குறிப்பு - கடந்த 2009ம் ஆண்டு சித்திரை மாதம் 15ம் நாள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது, இதனை என்னால் உணரமுடிந்தது இன்றும் என் நினைவுகளில்  நிற்கின்றது.

***

3 comments:

ஆத்மா said...

வரலாறு ரொம்ப முக்கியம்.......
தெரியாத தகவல்கள் சார்
பகிர்வுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அறிந்து கொண்டேன் நண்பரே... நன்றி...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ...........

Blog Widget by LinkWithin