Tuesday, June 5, 2012

வலையுலகில் மூன்றாண்டு பூர்த்தி.......



வலையுலகில் தடம்பதித்து இன்றைய நாளுடன் 3 வருடங்கள் பூர்த்தியடைந்து 4ம் ஆண்டில் கால்பதிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த வருடங்களைப் பார்க்கிலும் இந்த வருடம் அதிக வேலைப்பழு காரணமாக  குறைவான பதிவுகளே இட்டாலும் என் ஊடகப்பணியினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் மிகுந்த ஆர்வம் உடையவனாக இருப்பதில் ஆத்மதிருப்பதி கிடைக்கின்றது.




வலையுலகில் என்னுடைய வலைப்பூவுக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்த/அளித்துவருகின்ற பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், பத்திரிகைகள், இணையங்கள், சஞ்சிகைகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.



வலையுலகில் மூன்று வெற்றிகரமான ஆண்டுகளைப் பூர்த்திசெய்து நான்காவது ஆண்டில் கால்பதிக்கும் இந்தத் தருணத்தில் என் வலைப்பதிவு ஆக்கங்களினை தொகுத்து புத்தகமொன்று வெளியிட வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது, வாய்ப்புக்கள் வருகின்றபோது என் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என நம்புகின்றேன்.

மீண்டும் உத்வேகத்துடன் 4ம் ஆண்டில் கால்பதித்து தொடர்ந்து பதிவுலகில் உங்கள் ஆதரவுடன் சாதிக்கவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

உங்கள் வாக்குகளினையும், பின்னூட்டங்களினையும் வழங்கி ஆதரவினையும், ஊக்கத்தினையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன். உங்கள் ஆதரவே என் வலைப்பதிவில் புதுப்புது தகவல்களினை பதிவிடுவதற்கு உந்துசக்தியளிக்கும்.


அன்புடன்...
கே.கே.லோகநாதன்

*** 

4 comments:

ANBUTHIL said...

congrats friend

Anonymous said...

மேலும்பல சூடான சுவையான படைப்புக்கள் கூகிள்சிறியில் http://www.googlesri.com/

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் நண்பரே !

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பர்களே...

Blog Widget by LinkWithin