Thursday, April 12, 2012

4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைத் தாக்கிய சுனாமி.........

                                   
2004ம் ஆண்டு இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்ட சுனாமி தமிழகத்தைத் தாக்கியது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழகத்தைச் சுனாமி தாக்கியது இது முதல் முறையல்ல. 4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைத் சுனாமி தாக்கியிருக்கிறது. பின்னர் கி.பி 2ம் நூற்றாண்டிலும் பூம்புகார் என்ற காவிரிப் பூம்பட்டினத்தைப் கடல் கொள்ளை கொண்டு போயிருக்கிறது.

அந்தக் காலத்தில் சுனாமியை இலக்கியம் "கடல்கோள்" என்று குறிப்பிடுகின்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் தென்பகுதி, பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இப்போதைய இலங்கை, மாலைதீவு, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவையெல்லாம் ஒன்றாக இணைந்திருந்த அந்த நிலப்பரப்பை மேற்குலகத்தினர் "லெமூரியா" என்று குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் பண்டைய இலக்கியம் அந்த நிலப்பரப்பைக் "குமரிக் கண்டம்" என்று குறிப்பிடுகின்றது.

இப்போதைய இந்தியாவின் வட எல்லையில் உள்ள இமய மலையைப் போல் உயர்ந்த மலை அங்கு இருந்தது. குமரிக்கோடு (கோடு என்றால் மலை என்பது பொருள்) என அந்த மலை அழைக்கப்பட்டது. அதைப்போல் குமரியாறு, பஃறுளியாறு ஆகியவை கங்கை, யமுனை நதிகளைப் போல் பரந்து விரிந்து நீண்ட தூரம் ஓடின. அந்த நிலப்பகுதியில் இருந்த தென் மதுரை நகரில்தான் முதல் தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வந்தது. அந்த நிலப்பகுதி முழுவதையும் கடல் கொள்ளை கொண்டு விழுங்கிவிட்டது.

அதன்பிறகு, மிஞ்சிய தமிழ் நாட்டின் தலை நகராக கபாடபுரம் இருந்தது. அதுவும் சில நூறு ஆண்டுகளில் கடலால் விழுங்கப்பட்டது. அதையடுத்து, இப்போதைய மதுரையைத் தலை நகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அங்கே மூன்றாம் தமிழ்ச்சங்கம் நடைபெற்று வந்தது.

தென் தமிழகப் பகுதி கடலால் கொள்ளை கொள்ளப்பட்ட தகவல்களை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் கூறுகிறது. பஃறுளியாறும் மிக நீண்ட குமரி மலையும் கொடுமையான கடலால் கொள்ளை கொள்ளப்பட்டதையடுத்து, வடக்கு திசையில் கங்கையும் இமயமும் உருவான பின் தென் திசையை ஆண்ட மன்னன் என்று பாண்டிய மன்னனைப் பாடுகின்றது சிலப்பதிகாரம்.

இதனுடன் தொடர்புடைய இன்னொரு பதிவு..........


குறிப்பு நேற்றைய தினம் இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்தியத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திமிக்க பூகம்பங்களைத் தொடர்ந்து இலங்கை உட்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 



நேற்றைய தினம், இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் அதிர்வுகள் இலங்கையின் பல பாகங்களிலும் எதிரொலித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


*** நேற்றைக்கு முதல் தினமே "4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைத் தாக்கிய சுனாமி" என்கின்ற இப்பதிவினை பதிவிட எண்ணியிருந்தேன் என்பதையும் நண்பர்களுக்கு அறியத்தருகின்றேன்.

++++++++++++---------++++++++++++++++++++


"நந்தன" சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!!!


 

பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும்  "நந்தன" சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


மேலும், மலரப்போகும் "நந்தன" புத்தாண்டானது தமிழர் வாழ்வில் செளபாக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

பிறக்கின்ற "நந்தன" புதுவருடம் எங்கள் வாழ்க்கை நந்தவனமாக பூத்துக்குலுங்க வழிவகை செய்வாயாக.........

***
Blog Widget by LinkWithin