Thursday, March 29, 2012

உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்காபுரி………

யுனான் மாகாணமானது தென்மேற்கு சீனாவில் வெப்பமான மற்றும் ஈரப்பதன் நிறைந்த பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இந்தப் பிராந்தியத்தின் மண்ணானது இரும்புத் தாது நிறைந்த வளமான பகுதியாக உள்ளது. இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் நிலமானது சிவப்பு நிற நிலங்களுக்குப் பெயர்பெற்ற இடமாக விளங்குகின்றது.



இங்கே மலைகளைச் சுற்றிக் காணப்படுகின்ற சாய்வு நிலங்களில் பல்வேறு குடும்பங்களினைச் சேர்ந்தவர்கள் வித்தியாசமான பலதரப்பட்ட ஓட்ஸ், உருளைக்கிழங்கு, சோளம் போன்ற பல்வேறு பயிர்களினையும் பயிரிடுகின்றனர். ஒவ்வொரு பயிரும் தனக்குரிய நிறத்தினைக் கொண்டிருக்கும் அதேவேளை மலை உச்சியின் மீதிருந்து தரையினைப் பார்க்கின்ற போது அவை வானவில் போன்று வித்தியாசமான அழகிய தோற்றத்தில் காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



இந்தப் படங்களினைப் பாருங்கள் இந்த அழகினை வர்ணிக்க வார்த்தைகளே கிடைக்காது…….. சரிதானே?........ சீனாவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் மறக்காமல் இயற்கையின் விந்தையினை தவறவிடாதீர்கள்………











***

Sunday, March 25, 2012

தமது உடல் நிறைக்கேற்ப வருமான வரி செலுத்துபவர்கள்....

சுவாரஸ்சியமான பொது அறிவியல் தகவல்கள் உங்களுக்காக..........


 ஆரம்ப காலங்களில், உயர்ந்த குதியினைக் கொண்ட பாதணிகள் உயர் குடி ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதாம்.


 ஐக்கிய அமெரிக்காவில் இரவல் வழங்கும் முதலாவது நூலகத்தினை 1731ம் ஆண்டு பெஞ்சமின் பிராங்ளின் ஸ்தாபித்தார்.

 கம்போடியா நாட்டின் தேசியக்கொடியானது அந்நாட்டின் புராதன ஆலயமாகவும், உலகில் மிகப்பெரிய இந்து ஆலயமாக விளங்கும் அங்கோர்வாட் ஆலயத்தின் உருவப் படத்தினைக் கொண்டுள்ளது.


 ஒரு சராசரி ஆணின் மூளையானது பெண்ணின் மூளையினைப் பெரியதாகும்.

 எமது விண்வெளியில் மிகச்சூடான கிரகம் புதன் கிரகம் என்பது நாமறிந்ததே. இதன் மேற்பரப்பு வெப்பநிலை 450 டிகிரி செல்சியஸ் ஆகும்.

 தொழில்சார் சுமோ மல்யுத்த வீரர்கள் தமது உடல் நிறைக்கேற்பவே வருமான வரி செலுத்துகின்றனராம். சுமோ மல்யுத்தமானது ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டாகும்.


 குதிரைகளின் பற்களானது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்குமாம்.

 தனது தலையினை 270 பாகைக்கு திருப்பக்கூடிய ஒரே பறவை ஆந்தை மட்டும்தான்.

***

Tuesday, March 20, 2012

சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்போம்…!!!




சிறிய தானியம்போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகியப் பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்...... இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்.’
என விந்தை அழகு கொஞ்சும் விதமாக சிட்டுக் குருவியினை வர்ணிக்கின்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

அந்தவகையில்,2010ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20ம் நாள் சர்வதேச சிட்டுக் குருவிகள் நாளாக உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.



வீட்டு சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுடன் அவைகளின் நாளாந்த வாழ்க்கை போராட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுமே இத்தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளின் நகர்ப்புற, மற்றும் கிராமப்புற இயற்கை வாழிடங்கள் மிக அதிகளவில் சரிவடைந்துவருகின்றன.

சிட்டுக்குருவிகளின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது எம்மை சூழவுள்ள சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற மாறுதல்களை வெளிப்படுத்துகின்ற ஒரு குறிகாட்டியாக விளங்குகின்றது.

இது நமது சுகாதார மற்றும் நல்வாழ்வுக்கான சாத்தியமான தீங்கு விளைவுகலை வெளிப்படுத்துகின்ற எச்சரிக்கை மணியாகவும் விளங்குகின்றது. அதிகரித்த அளவிலான நுண்ணலை மாசு காரணமாக பாரியளவிலான சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம்.

இன்றைய நவீன யுகத்தில் மனிதனின் வாழ்விடங்கள் மாடி வீடுகளாகியதும், இயற்கை பாதுகாப்பரண்களாகிய மரங்கள் அழிக்கப்படுவதும் சிட்டுக்குருவிகள் அருகி வருவதற்கு காரணங்களாகும். இதற்கும் மேலாக செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகின்ற கதிர்வீச்சுக்கள் சிட்டுக் குருவிகளின் இனப்பெருக்கத்தினை பெருமளவு பாதிப்புக்குள்ளாகி அவற்றின் இருப்பினை கேள்விக்குறியாக்கி சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சியில் பிரதான பங்காற்றுகின்றது. மேலும் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதினால், அந்த தானியங்களை உண்ணுவதாலும் சிட்டுக் குருவிகள் மறைந்து வருகின்றன.

சிறிய பறவை இனங்கள் இயற்கையழிவுகளை முன்கூட்டியே உணர்ந்து மக்களுக்கு அறிவுறுத்துபவை மேலும் இயற்கையின் உணவுச்சங்கிலி அறுந்துவிடாமல் காப்பதிலும், வனங்களின் பரவலுக்கும் இந்தச் சிட்டுக்குருவிகள் உதவுகின்றன.

இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இயற்கையின் படைப்பான சிட்டுக்குருவிகளினை அழிவிலிருந்து காப்பாற்ற முன் வருவோமாக……

***

Saturday, March 17, 2012

தனது நாட்டுத் தேசியக் கொடியில் ஆயுத உருவினைக் கொண்டுள்ள நாடுகள் ஒரேபார்வையில்..........

தனது நாட்டுத் தேசியக் கொடியில் ஆயுத உருவினைக் கொண்டுள்ள நாடுகள் எவையென்று தெரியுமா.......?

அவையாவன...


சுவாசிலாந்து




இலங்கை


சவூதிஅரேபியா


மொசாம்பிக்

தனது நாட்டுத் தேசியக் கொடியில் ஆயுதத்தினைக் கொண்ட ஒரே நாடு மொசாம்பிக்..



கென்யா


கௌதமாலா


பெலிஸ்


பார்படோஸ்


அங்கோலா


அமெரிக்க விர்ஜின் தீவுகள்


அமெரிக்கன் சமோவா

***

Wednesday, March 14, 2012

ஒலிம்பிக் தகவல் திரட்டு # 02



2012 ஜூலை மாதம் 27ம் திகதி இங்கிலாந்தில் லண்டன் நகரில் அரங்கேறக் காத்திருக்கின்ற 30வது ஒலிம்பிக் போட்டியினை முன்னிட்டு ஒலிம்பிக் தகவல் தொகுப்பு பாகம் # 02 இனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.















(2003/08/18 வீரகேசரி மாணவர் மலருக்காக என்னால் எழுத்தப்பட்ட ஆக்கத்திலிருந்து)

***

Monday, March 12, 2012

ஏன் மனிதர்களினால் புல்லினை உட்கொள்ளமுடியாது?.......



கொள்கைரீதியாக, மனிதர்களால் புல்லை உண்ணமுடியும்; ஏனெனில் புல்லானது நச்சுத்தன்மையற்றதாகவும், சமைக்கக்கூடியதாகவும் உள்ளதால் ஆகும்.

ஆனால் மனிதர்களின் வயிறானது புற்கள் மற்றும் இலைகள் சமிபாடடைவதில் சிக்கலினை எதிர்நோக்குகின்றது. மறுபுறம், பசுக்கள் போன்ற விலங்குகள் புற்களை விரும்பி உண்கின்றன, ஏனெனில் பசுக்கள் போன்ற விலங்குகளின் வயிறானது புற்கள் சமிபாடடைவதற்கேற்ற நான்கு அறைகளுடன் கூடிய பிரத்தியேகமான வயிற்றினைக் கொண்டுள்ளன.



தாவரக்கலங்கள் செல்லுலோஸ் என்கின்ற இரசாயனப் பதார்த்தங்களை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றன. இரசாயனரீதியாக, நாம் உண்கின்ற உணவில் பெரும்பாலும் ஒத்த தன்மையைக் கொண்ட ஏராளமான காபோஹைதரேற் மூலக்கூறுகள்(குளுக்கோஸ், புருக்டோஸ் போன்றவை) உள்ளடங்கியுள்ளன.

ஆனால் செல்லுலோஸ் ஆனது ஒரேயொரு பிணைப்பினை மாத்திரம் கொண்டிருக்கின்றது, அது வித்தியாசமானதாகும், அத்துடன் ஏனைய மூலக்கூறுகளிலிருந்து நாம் சக்தியினைப் பெற்றுக்கொள்வதுபோல செல்லுலோஸ் பிணைப்பினை உடைத்து எம்மால் சக்தியினைப் பெற்றுக்கொள்ள முடியாது.

ஆனால், பசுக்கள் மற்றும் ஏனைய சில பாலூட்டிகளினால் புற்களை உண்ண முடியும். ஏனெனில் அவற்றின் வயிறுகளில் வாழ்கின்ற விசேடமான பக்டீரியா(இது Symbiont பக்டீரியா ஆகும்), செல்லுலோஸ் பிணைப்பினை உடைத்து சக்தியினைப் பெற்றுக்கொள்ள உதவிபுரிகின்றது. Symbiont பக்டீரியாவானது மனிதர்களின் வயிற்றில் காணப்படவில்லை என்பதனால் மனிதர்களினால் புற்களை உண்ணமுடியாது.

சமிபாடடைதல் பிரச்சினைகள் தவிர புல்லானது மென்று தின்னக்கூடிய உணவு ஆதாரமாக உள்ளது. அத்துடன் புல்லில் ஏராளமான சிலிக்கா அடங்கியுள்ளது. பற்களினை கீழே அசைக்கின்றபோது சிராய்ப்பினை விரைவாக ஏற்படுத்துகின்றது.

மேய்ச்சல் விலங்குகளானது பழுதடைந்த பற்களின் மேற்பரப்பினை மிக விரைவாக பதிலீடு செய்வதற்கு ஏற்றாற்போல் தொடர்ச்சியான வளர்ச்சியினை ஏற்றுக்கொள்கின்றது.

***

Thursday, March 8, 2012

சாதனைப் பெண்மணிகள் பலரில் சிலர்..!!!


ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்தவகையில், சாதனைப் பெண்மணிகளாக விளங்கிய சிலரினை இன்றைய மகளிர் தினத்தில் பார்ப்போம்.


 இங்கிலாந்து மகாராணி 2ம் எலிசபெத் ஏப்ரல் 21ம் திகதி பிறந்தாலும் ஜூன் 11ம் திகதியே தனது பிறந்த உத்தியோகபூர்வமாக நாளைக் கொண்டாடுகின்றார்.




 இங்கிலாந்தினைச் சேர்ந்த அகதா கிறிஸ்ரி, துப்பறியும் நாவல் பலவற்றினைப் படைத்து உலகப் புகழ்பெற்ற பெண்மணியாவார். இவர் தனது ஆரம்ப ஆண்டுகளில் பாடசாலை செல்லாமல் தனது அம்மையாரிடமே கல்வி கற்றுக்கொண்டார். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் பிரகாரம் எல்லாக் காலத்திலும் மிகச்சிறந்த விற்பனைக் கொண்ட நாவல்களைப் படைத்த ஒருவராகவும் இவர் திகழ்கின்றார். இவரின் 4 பில்லியனுக்கு மேற்பட்ட நாவல்கள் விற்பனையாகியுள்ளதுடன் 103மொழிகளில் இவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது முதலாவது நாவலினை பிரசுரிக்க 5 ஆண்டுகளாகக் காத்திருந்தார். ஏனெனில் இவர் நாடிய 6 புத்தக வெளியீட்டாளர்கள் இவரது நாவலினை பிரசுரிக்க முன்வராமையிலானாகும். இவர் தனது 1வது புத்தகத்தினை தனது தங்கையுடன் மேற்கொண்ட சவாலின் விளைவாகவே எழுதியமை குறிப்பிடத்தக்கதாகும்.




 ரேடியத்தினைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையார் இரண்டு தடவைகள் நோபல் பரிசினைக் பெற்றவர் என்பது நாமறிந்ததே. ஆனால் மதிப்புமிக்க பிரெஞ்சு கலைக்கழகத்தில் அங்கத்துவம் பெறுவது மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் பெண் என்ற காரணத்தினாலாகும். மேரி கியூரி அம்மையாரே நோபல்பரிசினைப் பெற்றுக்கொண்ட முதல் பெண் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.




 “ஃப்ளோ – ஜோ” என்ற செல்லப் பெயரில் அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த அதிவேக ஓட்ட வீராங்கனை ஃப்ளொரென்ஸ் கிரிபித் ஜொய்னர் 1988ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் போட்டியில் 200மீற்றர் ஓட்டப்போட்டியினை 21:34 வினாடிகளில் நிறைவு செய்து நிலை நாட்டிய உலக சாதனை இதுவரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது.




***

பெண்மணிகளுக்கு மகளிர்தின வாழ்த்துக்கள்……!!!

***
Blog Widget by LinkWithin