Thursday, September 8, 2011

சமாதானத்திற்காக எழுத்தறிவினைப் பயன்படுத்துவோம்………!!!




வருடாந்தம், செப்டெம்பர் மாதம் 8ம் திகதி உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. உலக எழுத்தறிவு தினம் 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனி மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பதுதான் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்த வருட உலக எழுத்தறிவு தினத்திற்குரிய தொனிப்பொருள் - "சமாதானத்திற்கான எழுத்தறிவு" ஆகும்.

உலக எழுத்தறிவு தொடர்பான சில புள்ளிவிபரங்கள்…….

• உலகிலுள்ள வளர்ந்தோர் சனத்தொகையில் 1பில்லியனானோர் (26%) எழுத்தறிவற்றவர்களாக உள்ளனர்.

• உலகிலுள்ள எழுத்தறிவற்றோர் தொகையில் மூன்றிலிரண்டு வகிபாகத்தினை பெண்களே வகிக்கின்றனர்.

• உலகிலுள்ள எழுத்தறிவற்றோரில் 98%மானோர் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிலேயே வசிக்கின்றனர்.

• அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளின் ஒட்டுமொத்த எழுத்தறிவு 49% ஆகும்.

• உலகிலுள்ள எழுத்தறிவற்றோரில் 52%மானோர் இந்தியா மற்றும் சீனாவில் வசிக்கின்றனர்.

• ஆபிரிக்காவின் ஒட்டுமொத்த எழுத்தறிவானது 60%இலும் குறைவாகும்.

***

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்

***

No comments:

Blog Widget by LinkWithin