Saturday, July 16, 2011

இதயமே.......!!! இதயமே......!!!

நண்பர்களே, நீண்ட நாள் இடைவேளையின் பின்னர் பதிவுலகில் உங்களினைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். சில பல காரணங்களினால் பதிவுலகில் நீண்ட நாட்களாக பதிவிடமுடியவில்லை. வாய்ப்புக்கள் கிடைக்கின்றபோது பதிவுகளினூடாக உங்களினைச் சந்திக்க எண்ணியுள்ளேன்.

அந்தவகையில், " உயிரினங்களின் இதயம் " தொடர்பான சுவையான தகவல்களினை இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

 நீலத்திமிங்கிலங்களின் இதயத்தின் நிறை அரைத் தொன்னுக்கும் அதிகமாகும்.

 ஒட்டகச்சிவிங்கிகள் அதனது பலமிக்க இதயத்திலேயே தங்கியுள்ளன, அவற்றின் இதயத்தின் நிறை 12கிலோவிலும் அதிகமாகும். ஒட்டகச்சிவிங்கிகள் அதனது நீண்ட கழுத்திலிருந்து அதனது தலையினை நோக்கி சுவாசிப்பதற்கு போராடுகின்றது.






 உணவுவேளைகளின்போது மலைப்பாம்புகளின் இதயமானது பெரியதாக வளர்ச்சியடைகின்றன.

 நீலத்திமிங்கிலங்களின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 06 முறையாகும்.

 ஒரு சராசரி மனிதனின் இதயமானது வருடாந்தம் 35மில்லியன் தடவைகள் துடிக்கின்றன.

 ஒக்டோபஸ் 03 இதயங்களைக் கொண்ட உயிரினமாகும்.

 பாலூட்டிகளில், அதனது உருவத்துடன் ஒப்பிடுகின்றபோது மிகப்பெரிய இதயத்தினைக் கொண்ட உயிரினம் நாய் ஆகும்.

 விலங்குகளில் மிகச்சிறிய இதயத்தினைக் கொண்ட உயிரினம் சிங்கம் ஆகும்.




 தவளைகளினதும், பல்லிகளினதும் இதயமானது 03 சோணை அறைகளினைக் கொண்டிருக்கின்ற அதேவேளை பறவைகளினதும், பாலூட்டிகளினதும் இதயமானது 04 சோணை அறைகளினைக் கொண்டிருக்கின்றன.

***

1 comment:

Sivatharisan said...

நன்றி பகிர்வுக்கு.

Blog Widget by LinkWithin