Wednesday, April 20, 2011

உடல் நிறையில் அதிக பங்கில் மூளையினைக் கொண்ட பறவை......

ஒரு உயிரினத்தின் தொழிற்பாட்டில் அவற்றின் மூளையானது பிரதான வகிபாகத்தினை வகிக்கின்றது.

உயிரினங்கள் சிலவற்றின் மூளை தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக......

 காண்டாமிருகத்தின் மூளையானது அவற்றின் மூக்கினைவிடவும் சிறியதாகும்.





 பறவைகளில், அதனது உடல் நிறையுடன் ஒப்பிடுகின்றபோது அதிக பங்கில் மூளையினை கொண்டுள்ள பறவை ஹம்மிங்பேர்ட் ஆகும். ஹம்மிங்பேர்ட்டின் உடல் நிறையில், அதன் மூளையின் பங்கு 4.2% ஆகும்.





 ஒக்டோபஸ்சின் மூளையில், சராசரியாக 300பில்லியன் நியூரோன்கள் உள்ளன.

 மனிதனின் உடல் நிறையில் மூளையின் பங்கு 2% ஆகும். ஆனால் 20% இற்கும் அதிகமான உடற் சக்தியினை மூளையே பயன்படுத்துகின்றது.



 எறும்புகளின் மூளையில் 250,000 இற்கும் மேற்பட்ட மூளைக்கலங்கள் உள்ளன. மனிதனின் மூளையில் 10,000 மில்லியனுக்கு மேற்பட்ட மூளைக்கலங்கள் உள்ளன. 40000 எறும்புகளின் மூளையினை ஒன்றுசேர்க்கின்றபோது அது ஒரு மனிதனின் மூளையின் அளவினை ஒத்ததாகும்.

 பட்டுப்பூச்சிகளுக்கு 11 மூளைகள் உண்டு, ஆனால் அவற்றில் அரைவாசியினையே(5) அவை பயன்படுத்திக்கொள்கின்றன.

 அட்டைகளுக்கு 32 மூளைகள் உண்டு.

 நட்சத்திரமீன்களுக்கு மூளை இல்லை.

 தீக்கோழிகளின் கண்களானது அவற்றின் மூளையினைவிடவும் பெரியதாகும்.

 பூனைகளின் மூளை தொழிற்படுவதற்கு அதிகமான சக்தி தேவைப்படுகின்றதாம். இதனால் அவற்றின் இருதயமானது 20% இற்கும் அதிகமான குருதியினை உடனடியாக பாய்ச்சுகின்றது.

 உலகில் மிகப்பெரிய மூளையினை கொண்டுள்ள உயிரினமாக நீலத்திமிங்கிலங்கள் விளங்குகின்றன... நீலத்திமிங்கிலங்களே, பாலூட்டிகளில் மிகப்பெரியவையாகும்.

***

No comments:

Blog Widget by LinkWithin