Saturday, March 12, 2011

ஜப்பானினை தாக்கிய சுனாமி…...


நேற்று (11.03.2011)அதிகாலை ஜப்பான், ஹொன்ஷு பிரதேசத்தில் 8.9 ரிச்டர் அளவில் தாக்கிய அதிசக்திவாய்ந்த பூகம்பத்தின் காரணமாக ஏற்பட்ட சுனாமியின் காரணமாக 1000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



ஜப்பான் நாட்டினை அடுத்தடுத்து தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



இந்தப் பூகம்ப மையமானது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் 24கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



ஜப்பானின் வட கிழக்கு கரையோரப் பகுதியை கடற்கரையோரங்களினைத் தாக்கிய 20அடி உயரத்துக்கு மேலெழுந்த ஆழிப்பேரலையினால் பல கட்டிடங்கள், வாகனங்கள் நீரோடு அள்ளுண்டு போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பயணிகள் கப்பலொன்றும், புகையிரதமொன்றும் ஆழிப்பேரலையினால் நீரோடு இழுத்துச்செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பூகம்பத்தினால் சில எரிபொருள் நிலையங்கள் தீப்பற்றி எரிந்ததுடன், அணு சக்தி நிலையத்திலிருந்து அணிக்கசிவு ஏற்படலாம் என்கின்ற அச்சத்தின் காரணமாக ஜப்பானில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.



இதற்கு முன்னர் 1923ம் ஆண்டு செப்டம்பர் 1ம் திகதி ஜப்பானின் கண்டோ பிராந்தியத்தினை தாக்கிய 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் 143,000 இற்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜப்பானில் ஏற்பட்ட இந்த பூகம்பமானது 1900ம் ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த பூகம்பங்களில் 5ம் இடத்தினை வகிப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

இதேவேளை கடந்த 2010ம்வருடம் ஜனவரி மாதம் ஹெய்ட்டி நாட்டினை 7.0 ரிச்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 250,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதுடன், 2010ம்வருடம் பெப்ரவரி 27ம் திகதி, சிலி நாட்டினை 8.8 ரிச்டர் அளவிலான பூகம்பமும் தாக்கியமை இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.


உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த பூகம்பங்கள்[ரிச்டர் அளவின் பிரகாரம்] தொடர்பான விபரமறிய கீழே சொடுக்கவும்......

"உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த பூகம்பங்கள்"

***

No comments:

Blog Widget by LinkWithin