Tuesday, March 8, 2011

நோபல் பரிசினை பெற்ற தாயும், மகளும்.......

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினமானது, நூற்றாண்டாவது மகளிர் தினம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

அந்தவகையில், சாதனைப் பெண்மணிகளாக விளங்கிய தாய், மகள் ஜோடிகள் சிலரினைப் பார்ப்போம்.

 நோபல் பரிசினை பெற்ற தாயும் மகளும் என்ற பெருமைக்குரியவர்கள், பிரெஞ்சு தேசத்தினைச் சேர்ந்த மேரி கியூரி மற்றும் ஐரீன் ஜோலியட் கியூரி ஆகியோராவர். மேரி கியூரி அம்மையாரே நோபல் பரிசினைப் பெற்றுக்கொண்ட முதற்பெண்மணியும் ஆவார், அத்துடன் இவரே இரண்டு வெவ்வேறான துறைகளில் நோபல் பரிசினைப் பெற்றுக்கொண்ட ஒரேபெண்மணியும் ஆவார்.



மேரி கியூரி ~ (இரசாயனவியல்~1911, பெளதிகவியல்~1903)
ஐரீன் ஜோலியட் கியூரி ~ (இரசாயனவியல்~1935)

 ஒரே காலப்பகுதியில் ஒரு நாட்டின் உயர்மட்ட அரச தலைவர்களாகப் பதவிவகித்த தாயும் மகளும் என்ற பெருமைக்குரியவர்கள், இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோராவர்.(1994-2000)

 முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த தாயும், மகளும் என்ற பெருமைக்குரியவர்கள், அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த “Churl Burt” மற்றும் “Nicky” (23 வயது) ஆகியோராவர். இவர்கள் 2008ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி எவரெஸ்ட் சிகரத்தினை ஒன்றாக அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


உங்களுக்குத் தெரியுமா?...

10வது உலகக்கிண்ண கிரிக்கெட் ~ 2010, தற்சமயம் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் நடைபெற்றுவருகின்றமை நீங்கள் அறிந்ததே. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 1975ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்றுவருகின்றது என்பதும் நீங்கள் அறிந்ததே....

ஆனால், மகளிருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 1973ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்றுவருகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?....

மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

***
Blog Widget by LinkWithin