Thursday, February 3, 2011

அன்னைக்கு கெளரவம்.....!!!



நலிவுற்றோருக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்து சேவையாற்றிய அன்னை தெரேசாவுக்கு, அமெரிக்க தபால் சேவைகள் ஞாபகார்த்த தபால் முத்திரையினை(44சதம்) வெளியிட்டு கெளரவப்படுத்தியது.

2010ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள் அன்னை தெரேசாவின் 13ம் ஆண்டு சிரார்த்த தினத்தினை முன்னிட்டு விருது பெற்ற ஓவியக் கலைஞர் தோமஸ் ப்ளக்‌ஷெர் II அவர்களினால் இந்த முத்திரை வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1996ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்கா அன்னை தெரேசாவுக்கு கெளரவ அமெரிக்க பிரஜாவுரிமை வழங்கி கெளரவப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

1979ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு அன்னை தெரேசாவுக்கு வழங்கி கெளரவமளிக்கப்பட்டது.


++++++++++++++++++++++++++++++++++++++


இலங்கையில் மீண்டும் வெள்ள அபாயம்.....

தற்பொழுது, கிழக்கிலங்கை மட்டுமின்றி நாடு பூராகவும் சீரற்ற காலநிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சீரற்ற காலநிலை மேலும் பல நாட்களுக்கு தொடரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கிலங்கையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தி ஓய்ந்திருந்த அடைமழை மீண்டும் ஆரம்பித்து பல நாட்களாக தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கடந்த பல நாட்களாக கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கின்ற அடைமழை தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கின்றது.

கடந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மேலதிகமாக பூச்சி தாக்கங்கள், யானைகளின் தொல்லைகளினால் பாதிப்படைந்த விவசாயிகள் மீண்டும் தொடர்ந்துபெய்கின்ற அடைமழையினால் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ளனர்.

15 வருடங்களின் பின் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் 05 வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சேனாநாயக்க சமுத்திரம் 110 அடி வரை நீரை கொள்ளக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல குளங்களின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மலேசியா, அவுஸ்திரேலியாவிலும் சீரற்ற காலநிலை தொடர்கின்றது. பெரும் வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து ஜசி சூறாவளி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தை தாக்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகத்தினை தொடர்ந்து அச்சுறுத்துகின்ற இயற்கை அனர்த்தங்களால் எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற பிரச்சினைகள் பாரதூரமானவையாகும்.

"காலநிலை மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும்" என்கின்ற தலைப்பில் வீரகேசரி பத்திரிகையில் வெளியாகிய எனது ஆக்கத்தினை உங்களுடன் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.



(நன்றி- வீரகேசரி வாரவெளியீடு 04.01.2009)

***

2 comments:

Philosophy Prabhakaran said...

அன்னை தெரேசா பற்றிய பகிர்வுக்கு நன்றி...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பர்களே நன்றிகள் .........

Blog Widget by LinkWithin