Monday, January 3, 2011

டைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல்.......

மலர்ந்திருக்கின்ற 2011ம் ஆண்டில் எனது முதல் பதிவில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.... .

அந்தவகையில், உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல் தொடர்பான பதிவு உங்களுக்காக.......



இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நியூயோர்க் நோக்கி தனது கன்னிப் பயணத்தினை மேற்கொண்டிருந்த "டைட்டானிக்"கப்பல்[SS Titanic], 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள், அத்திலாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகினர்.

"டைட்டானிக்" கப்பல் விபத்துக்குள்ளாகுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் மோர்கன் றொபட்சன் என்பவர் வெளியிட்ட நாவலொன்றில் இது போன்றதொரு விபத்துச் சம்பவமொன்றினைக் குறிப்பிட்டிருந்தார், அந்தப் புத்தகத்தில் டைட்டானிக் கப்பலின் அளவுடைய கப்பலானது தனது கன்னிப் பயணத்தினை மேற்கொண்டிருந்தபோது ஏப்ரல் மாத இரவொன்றில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாவதாக வர்ணித்திருந்தார்.

பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாவதாக வர்ணித்திருந்த , மோர்கன் றொபட்சனின் கற்பனைக் கப்பலின் பெயர் "டைட்டன்" ஆகும்.



அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் சிதைவு...


***

2 comments:

Philosophy Prabhakaran said...

நன்று... படம் பதற வைக்கிறது...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பர் பிரபாகரன் ........

Blog Widget by LinkWithin