Wednesday, December 22, 2010

கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதல் தபால்நிலையம்....




உலகில், கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது தபால் நிலையம் பஹாமாஸ் நாட்டிலேயே அமைந்துள்ளது. விஞ்ஞான வசதிவாய்ப்பின் ஒரு அங்கமாக இந்த தபால் நிலையம் 1939ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் நாள் திறக்கப்பட்டது.

இந்த கடல்கீழ் தபால் நிலையமானது, ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஜோன் எர்னெஸ்ட் வில்லியம்ஸ்சன்(1881-1966) அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும்.

கடல்கீழ் புகைப்படத்துறையின் முன்னோடியாகவும் வில்லியம்ஸ்சன், நினைவுகூரப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




1965ம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட 5 ஷில்லிங் பெறுமதியான முத்திரை






அதேவேளை, பசுபிக் சமுத்திர தீவாகிய வனுவாட்டு தேசத்தில் 2003ம் ஆண்டு அமைக்கப்பட்ட, கடல்கீழ் தபால் நிலையத்தில் தபால் உறைகளும், முத்திரைகளும் வழங்கப்படுகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

***

No comments:

Blog Widget by LinkWithin