Monday, November 29, 2010

சமாதான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹிட்லர்....



உலக சமாதானத்துக்காக பாடுபட்டு அரும்பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படுகின்ற உன்னதமான விருதே சமாதான நோபல் பரிசாகும். அந்தவகையில், 1939ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசுக்கு, சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் பெயரினை சுவீடன் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த E.G.C. Brandt என்பவர் பிரேரித்தார். எவ்வாறாயினும் Brandt தனது மனதினை மாற்றிக்கொண்டு 1939 பெப்ரவரி 1ம் திகதி இடப்பட்ட கடிதத்தில் தன்னால் பிரேரிக்கப்பட்ட அடோல்ப் ஹிட்லரின் பெயரினை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
1939ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசினைப் பெறுவதற்கு யாருமே தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

========================================


உலகினை பாழ்படுத்தும் கைத்தொலைபேசிக் கழிவுகள்.....



உலகில் வருடாந்தம் 125 மில்லியன் செல்போன்கள் கழிவுகளாக தூக்கி வீசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மக்கள் தமது செல்போன்களினை அடிக்கடி மாற்றிக்கொள்வது அண்மைக்காலங்களில் அதிகரித்துக்கொண்டு செல்கின்ற உலக போக்காகும். இதற்கான எடுத்துக்காட்டாக; கொரிய நாட்டு மக்கள் வருடாந்தம் தமது செல்போன்களினை பொதுவாக மாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கழிவுகளாக தூக்கி வீசப்படுகின்ற செல்போன் இலத்திரனியல் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாரிய அச்சுறுத்தல்களாக மாறிவிட்டமை என்பது கவலைதரும் செய்தியாகும்.


===========================================


உலகில் மிக அரிதான சொக்லேட்வகை
உலகில் மிக அரிதான சொக்லேட் துண்டாக போர்செலனா(Porcelana) துண்டு விளங்குகின்றது. இந்த சொக்லேட் வகையில் 20,000 துண்டுகளே மாத்திரமே வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

4 comments:

roshaniee said...

ஹிட்லருக்கு நோபல் பரிசை மறுத்தமைக்கான காரணம் குறிப்பிடவில்லையா?

roshaniee said...

நல்ல தேடல்

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் ROSHANIEE........

Unknown said...

நன்றி

Blog Widget by LinkWithin