Sunday, November 21, 2010

மூன்று கண்களைக் கொண்ட உயிரினம்....

உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சில சுவாரஷ்சியமான தகவல்கள்.........

 தீக்கோழிகள் மணிக்கு 43 மைல்(70கிலோமீற்றர்) வேகத்தினை விடவும் அதிகமாக ஓடக்கூடியவையாகும்.

 தென் அமெரிக்க இராட்சத எறும்பு தின்னிகள், நாளாந்தம் 30,000 எறும்புகளுக்கும் அதிகமாக சாப்பிடுமாம்.

 ஹம்மிங்பேர்ட் பறவைகள், தனது உடலின் நிறையில் அரைப் பங்களவிலான உணவினை நாளாந்தம் உட்கொள்கின்றன.

 புற ஊதாக்கதிர்களையும், அக ஊதாக்கதிர்களையும் பார்க்கக்கூடிய ஒரே உயிரினம் தங்கமீன்(Goldfish) ஆகும்.



நியூசிலாந்து நாட்டின் கரையோரத் தீவுகளில் காணப்படுகின்ற Tuatara என்கின்ற பல்லி இனங்கள் 03 கண்களைக் கொண்டுள்ள உயிரினமாகும். ~ அவற்றுக்கு இரண்டு கண்கள் தலையின் மத்தியிலும், மற்றைய கண் தலையின் உச்சத்திலும் காணப்படுகின்றது.



 பன்றிகளின் சராசரி ஆயுட்காலம் 15 வருடங்களாகும்.

 புற ஊதாக் கதிர்களினை புறாக்கள் பார்க்கக்கூடியவையாகும்.

 பறவைகளினால் இனிப்புச் சுவைகளினை சுவைக்கமுடியாது. ஏனெனில் பறவைகளுக்கு இனிப்புச் சுவை அரும்புகள் இல்லை.

 மரங்கொத்திப் பறவைகள் ஒரு செக்கனில் இருபது தடவைகள் மரங்களினை கொத்தக்கூடியவையாகும்.

 புறாக்கள் மணிக்கு 100 மைல் வேகத்துக்கு அப்பால் பறக்ககூடிய இயலுமை கொண்டவையாகும்.

***

6 comments:

எஸ்.கே said...

Nice Info!

Ravi kumar Karunanithi said...

nallaa irukke.

Muruganandan M.K. said...

03 கண்களைக் கொண்டுள்ள பல்லி. நல்ல தகவல்.

Philosophy Prabhakaran said...

வித்தியாசமான பல தகவல்களை தெரிந்துக்கொண்டேன்... குறிப்பாக பறவைகளின் இனிப்பு சுவை பற்றிய தகவல்... நன்றி...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பர்களின் கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள்.....

Dr.Dolittle said...

spiders have 4 to 8 eyes

Blog Widget by LinkWithin