Saturday, November 13, 2010

பாராட்டுக்கள் உலகுக்குத் தந்த புகழ்பெற்ற எழுத்தாளர்....




இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த சார்ள்ஸ் டிக்கன்ஸ்(1812-1870) ஒரு உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். சார்ள்ஸ் டிக்கன்ஸ் வாழ்வில் திருப்புமுனையினை ஏற்படுத்திய ஒரு சம்பவம் தொடர்பாக உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

சார்ள்ஸ் டிக்கன்ஸ் ஆரம்ப காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவற்றுள் ஒன்றுகூடப் பிரசுரமாகவில்லை. கடைசியாக அவர் எழுதிய கதை பத்திரிகையொன்றில் பிரசுரமாகியது. அப்பத்திரிகையின் ஆசிரியர் கதையைப் பாராட்டி டிக்கன்ஸூக்கு ஒரு சிறு குறிப்பும் எழுதியிருந்தார். தனது கதைக்காக எந்தவித சன்மானமும் கிடைக்காத நிலையிலும் டிக்கன்ஸை ஆசிரியரின் குறிப்பு உற்சாகப்படுத்தியது. மனம்தளர்ந்து தனது எழுத்துப்பணியினை விட்டுவிட இருந்த அவருக்கு அந்தப் பாராட்டுரை மட்டும் கிடைக்காதிருந்திருந்தால் இலக்கிய உலகம் மாபெரும் எழுத்தாளரை இழந்திருக்கும்.

அவருக்கு கிடைத்த முதற்பாராட்டின் உற்சாகத்திலேதான் தொடர்ந்து எழுதி உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களினை ஆங்கில மொழிக்கு அவரால் தர முடிந்தது.

ஆகவே, உங்கள் பாராட்டுரையும் மற்றவர்களுக்கு உற்சாகத்தினை வழங்கி சிறந்த எழுத்தாளர்கள் பலரினை இந்த உலகத்துக்கு அறிமுகம்செய்ய உதவிசெய்யலாம்.


***

No comments:

Blog Widget by LinkWithin