Thursday, October 7, 2010

முத்தான முத்திரைகள்.......!!!

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்" கொண்டாடப்படுகின்றது. இன்று நவீன தொழில் நுட்ப முறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியானது தபால் துறையில் பல்வேறுபட்ட மாறுதல்களை ஏற்படுத்தினாலும் தபால் துறையில் முத்திரைகள் தனிச்சிறப்பிடத்தினை வகிக்கின்றன.

முத்திரைகள் தொடர்பான சில அரிய தகவல்கள்....

 உலகில் முதன்முதலில் தபால் முத்திரைகள் 1840ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி பிரிட்டன் அஞ்சல் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும், இந்த தபால் முத்திரைகள் "பென்னி ப்ளக்" (Penny Black) என்றழைக்கப்பட்டன. இந்த முத்திரைகள் கறுப்பு பின்னணியில் 15 வயதான இளமையான விக்டோரியா மகாராணியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு 1பென்னி(சதம்) பெறுமதியினைக் கொண்டதாக அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய கால முத்திரைகளைப்போல் இந்த முத்திரையில் பின்புறம் ஒட்டுவதற்கான பசை சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.



 முதன்முதலில் வெளியிடப்பட்ட பென்னி ப்ளக் முத்திரையின் அளவு 3/4″ & 7/8″.

 முத்திரைகளில் தமது நாட்டின் பெயரினை அச்சிடாத ஒரே நாடு – பிரிட்டன்; ஏனெனில் பிரிட்டன் நாடுதான் தபால் முத்திரைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியதன் காரணத்தினாலாகும்.

 தெற்காசிய நாடுகளில் ஒன்றாகிய பூட்டான் நாடானது 1973ல் வெளியிட்ட 7 முத்திரைகளில் இசைப்பதிவு கருவியினை இணைத்து வெளியிட்டது. இந்த இசைக் கருவி பூட்டான் நாட்டின் தேசிய கீதத்தினை இசைக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

 பசுபிக் தீவுகளினைச் சேர்ந்த டொங்கா நாடானது வாழைப்பழ வடிவ முத்திரையினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ஆப்கானிஸ்தான் நாடானது வட்ட வடிவ முத்திரையினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இந்தியாவானது மணம்வீசும் முத்திரையினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 அமெரிக்காவில் மிகப் பிரபலமான முத்திரையாக கருதப்படுவது ; 1993ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரபல "றொக்" இசைப் பாடகர் எல்விஸ் பிறிஸ்லியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள். இந்த முத்திரைகள் 120 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளதாம்.

 நீங்கள் கீழே காண்கின்ற இந்த தபால் முத்திரையின் சிறப்பியல்பு யாது தெரியுமா? இதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் தபால் முத்திரை



***

No comments:

Blog Widget by LinkWithin