Tuesday, July 27, 2010

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்




பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான். Θ

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. ₪

தூய்மை,பொறுமை,விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும். ◙

மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி. ♦

உன்னால் ஒருவருக்கும் உதவிசெய்ய முடியாது. மாறாக, சேவை செய்யத்தான் முடியும். Θ

அச்சமே மரணம், அச்சத்திற்கு அப்பால் நீ போக வேண்டும். ₪

இலட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும். ◙

வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது தேவை. ♦

சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டிவைக்க முடியும். இந்த உண்மையை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.≈

♥ அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்தே தீரும். ♥

***

1 comment:

sundari said...

good i liked this golden words

Blog Widget by LinkWithin