Wednesday, May 12, 2010

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை....



ஆய்வொன்றின் பிரகாரம், குறைந்தளவான கலோரியினை உள்ளெடுப்பதன் மூலம் நீண்டகாலம் வாழ்வது மேம்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கத்தையவர்களில் மூன்றில் ஒரு பங்கானவர்கள் அதிக நிறையானவர்களாக [பருமன்] இருக்கின்ற அதேவேளை ஆண்களின் சராசரி வாழ்க்கை வயதானது 72ஆகவும், பெண்களின் சராசரி வாழ்க்கை வயதானது 79ஆகவும் உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்படுகின்றது.



அதேதருணம், ஹாவார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றின் பிரகாரம் விலங்குகள் கூட்டாக வாழ்கின்றபோது அவைகள் நீண்டகாலம் வாழ்கின்றனவாம் என அந்தஆராய்ச்சி பெறுபேறுகள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த ஆய்வின் பிரகாரம் சங்கங்கள், கழகங்கள், மத அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றவர்கள், குழுக்களாக அதாவது கூட்டுக்குடும்பங்கள் போன்றதாக சேர்ந்து வாழ்கின்றபோது மனிதர்களின் வாழ்காலமானது அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

***

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 15ம் திகதி குடும்பங்களுக்கான சர்வதேச தினமாகும். அந்தவகையில் சர்வதேச குடும்ப தினத்தினையொட்டி நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.




***
கூடிக்குலாவி ஒற்றுமையாக வாழ்வதற்கு
வேற்றுமைகளை புறம் தள்ளுவோம்
உதவிகள் செய்வோம்
விட்டுக்கொடுப்போம்
தினமும் நாம் மனநிம்மதியுடன் வாழலாம்..........

***

No comments:

Blog Widget by LinkWithin